பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 16, 2017

பொம்மி

*பொம்மி*

உனக்காக நானுமல்ல
எனக்காக நீயுமல்ல
நமக்காக இங்கு
யாவும் காக்கவே செய்கின்றன

பௌர்ணமி ஒரு நாள்
கண்சிமிட்டி உன்
வருகை தினத்தை
விசாரித்து குறிப்பெடுத்துக்
கொண்டது

சூரியன் மறுநாள்
என் மீது பனித்துளிகள் வீசி
நீ வந்ததும்
தகவல் சொல்லச்சொன்னது

உன் கால் விரல்களின் இடுக்கில்
பட்டுவிடவேண்டி விதைகள் பல
முளைவிட மறுப்பதாக
செடி கொடி வந்து என்னிடம்
புகாரிக்கின்றன

உன்னை சுமந்தப்பிறகே என்னை
நனைப்பேன் என
மழைக்கும் எனக்குமான
பேச்சு வார்த்தை
சுமுகமாக முடிந்ததில்
இன்றுவரை என்னை
நனைக்காமலேயே
வந்து போகிறது மழை

என் அத்தனை கோவத்தையும்
நீ பயப்படுவாய் என
கண்படா தூரத்தில் மறைத்துவிட்டேன்
இது தெரியாமல்
புழு பூச்சி மனிதனெல்லாம்
என்னை சீண்டிச் சிரிக்கின்றன

நீ வரவேண்டும் என
காமத்திற்கும் வடிகாலின்றியே
உறக்கம் கலைந்த கோண்டான்களுடன் ஒன்றாய் இரவினை கண்விழித்து கடக்கிறேன

எல்லோரும் கண்ணனின்
பாதங்களுக்காக காத்திருக்கிறார்கள்
கண்களில் படாத உனக்காக நான் காத்திருக்கிறேன்

வேண்டுமெனில் சொல்
என் உதிரத்துளிகளைச் சேமித்துத் தருகிறேன்
அதிலுன் பாதம் பட்டு
நான் வாழும் இடத்தில்
நடை பழகு
அப்போதாவது இடுகாடு
இனிய இல்லமாகட்டும்

#தயாஜி

2 comments:

Minion ponnu சொன்னது…

Indeed.... ��

தயாஜி சொன்னது…

நன்றி....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்