பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 12, 2015

மயானத் தங்கத்தில் மறைந்திருக்கும் இன்னொரு மனிதனின் வாழ்வு





   சம்பவம் ஒன்று நடக்கிறது. கொலை. தற்கொலை. விபத்து. திட்டமிட்ட கொலை. திட்டமிடாத கொலை. ஏதோ நடந்துவிட்டது என கடந்துவிடுவதில் நமக்கு பழக்கம் இருக்கிறது. ஒருவேளை நம்மவர் யாரேனும் சம்பந்தப்பட்டிருந்தால் கொஞ்ச நாள் துக்கம் அனுபவிப்போம். போராட்டவாதி என்றால் சில காலம் போராடிக்கொண்டிருப்போம். அதிகம் போனால் இடைவேளி விட்டு தேர்தல் காலங்களில் மீண்டும் தூசு தட்டிகொள்வோம்.

  எல்லாவற்றையும் கடந்துவிடுதல் எளிதல்ல.கடந்துவிட முடியாதவற்றால் நமது மனதில் சலனம் ஏற்படுகிறது. அச்சலனம் மனதின் பகுதியொன்றின் நுழைந்துவிட்டு குடைந்துக் கோண்டே இருக்கும். சில சமயங்களில் எப்போதோ பார்த்து கேட்ட சம்பவம் ஒன்று மீண்டும் மனதிலிருந்து வெளிப்பட்டுவிடும். அதன் அசூயை அவ்வளவு எளிதில் கடக்கக்கூடியது அல்ல அப்படியொரு சலனத்துடனே இதனை எழுதுகிறேன்

   ’மயானத் தங்கம்மராட்டி சிறுகதையை தனக்கான பாணியில் படமாக்கியிருக்கிறார் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார். வேலை தேடித்தேடி சோர்ந்திருக்கிறான் நாயகன். இயந்திரங்களை நம்பும் முதலாளிகள் வாழ்ந்துக் கோண்டிருக்கும் உலகில் மனிதர்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் வேலை கிடைத்துவிடுமா என்ன?.  வேலைக்கான எவ்வழியும் நாயகனுக்கு இல்லை.  எதேச்சையாக மயானத்தில் தங்கம் கிடைத்துவிடுகிறது.

  அங்கிருந்துதான் நாயகனின் வாழ்வில் மாற்றம் ஏற்படுகிறது. மயானத்திலேயே தங்கம் தேட ஆரம்பிக்கின்றான். பணக்கார பிணங்களை தேடி , தோண்டி எடுத்து அவையிடம் தனக்கான ஏதும் கிடைக்குமா என்பதை தேடுவதையே தன் தொழிலாக்கிகொள்கிறான். மனைவியின் வருத்தமும்  அறிவுரையும் விரக்தியடைந்த நாயகனின் மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தவில்லை. வேலை பூர்த்தி செய்யவேண்டிய குடும்ப பசியை மயான தங்கங்கள் பூர்த்தி செய்ய தொடங்கின

  ஊரில் அது பிரச்சனையாக வெடிக்கிறது. பிணங்களை தோண்டுகின்றவனை தேடும் படலம் தொடங்குகிறது. நாயகன் மயானத்துக்குச் செல்கின்றான். அதுவரை பார்த்துக் கொண்டிந்த எனக்கு அடுத்த காட்சிகள் மனதில் ஓடத்தொடங்கின. ஆனால் சில நொடிகளில் ஏமாந்தேன்.

  அங்கே நடக்கும் விபரீத்தால் தனது நான்கு விரல்களையும் இழந்துவிடுகிறான் நாயகன். இனி எதுவும் வேண்டாம் ஆபத்து இல்லாத அசிங்கம் இல்லாத மரம் வெட்டும் வேலைக்கு உறவினருடன் செல்ல சொல்கிறாள். அங்கு நடந்த விபத்தால் விரல் இழந்ததாக ஊர் மக்களிடம் சொல்லிக்கொள்ளலாம் என மனைவி அவனை வழியனுப்புகிறாள். ஆனால் நாயகன் சென்ற இடம் இனி திரும்ப முடியாத இடம்

  ஆந்திராவில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றுடன் கதை முடிகிறது. அதிலிருந்து பார்வையாளர்கள் மனதில் இதுவரை கடந்துவிட்ட ஏதோ என்று தன்னை மீண்டும் புதிப்பித்துவிடுகிறது.

     நடந்துவிட்ட சம்பவங்களில் தொடக்கத்தில் ஏதோ ஒரு காரணியாக சமூகம் இருக்கிறது. அதன் பின்னால் நாம் மறைந்துக் கொண்டு சமூகத்தை திட்டிக் கொண்டிருக்கிறோம்.




மயானத் தங்கம் குறும்படத்தை இதில் சொடுக்கி பார்க்கலாம்.
 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்