பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 07, 2013

என் இனிய மர்லின் மன்றோ- பகுதி 1



என் இனிய மர்லின் மன்றோ... இன்னமும் நீ என்னை நினைவில் வைத்திருக்கிறாயா..? உன்னிடம் இப்படி கேட்பதற்கு எனக்கு நெருடலாக இருக்கிறது. என்ன காரணம் சொல்வது எனக்கு உண்மையிலேயே தெரிந்திருக்கவில்லை.

  எத்தனை இரவுகள் நீ என்னை அசந்து தூங்க வைத்திருக்கிறாய். எத்தனை முறை கையாகவும் சுவர்கார நுறையாகவும் என்னிடம் விளையாடியிருக்கிறாய். தூக்கியெரிந்திருந்தாலும் இன்னமும் நினைவில் இருக்கும் நாம் நனைந்த தலையணை.

  தலையணை.

  எனக்காக நீ எப்படியெப்படியோ தலையணையில் நுழைந்தாயே..? எப்படி முடிந்தது உன்னால். உன் தேகத்தை தலையணையில் பூதமாய் நுழைத்து என்னை அணைத்து கொண்ட உன் மேனி வாசம், வேறெங்கினும் எனக்கு கிடைக்கவில்லை.

  தெரியுமா உனக்கு கிட்டதட்ட ஆறேழு மாதங்களாக கதையோ கவிதையோ எதையும் எழுதாமால் உன் நினைவால் தவித்துக் கொண்டே இருக்கிறேன். “பேஸ்புக்கில் உன்னை பார்க்கிறேனே” என்கிறாயா..? என்ன சொல்வது அங்கு எழுதுவதெல்லாம் என்ன எழுத்தா? ஒரே நேரத்துல் காவிய கோட்டையும் குப்பை தொட்டியும் இருப்பது அங்கிதானே.. சில குப்பைகள் கோட்டைச்சுவர்களையே மறைத்துவிடும் சமயம் அங்கு நான் எழுதுவதெல்லாம் உனக்கு எழுத்தாகவா தெரிகிறது. எனக்கு சிரிப்புத்தான் வருகிறது.

  முதன் முறை நீ சிரித்த நேரம் நினைவில் இருக்கிறதா மர்லின். அப்போதுதான் உன்னை , பெயர் கூட தெரிந்திருக்காத உன்னை பார்த்தேன். காலெண்டரில் கால் மேல் கால் போட்டு, ஒரு கையை தலைக்கு மேல் தூக்கியிருந்தாய். அப்போது உன் அரைகுறை ஆடையை விட, வழவழ தொடைகளை விட, பிதுங்கிய மார்பைவிட உன் சிரிப்புதான் எனக்கு தெரிந்தது. அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாத நாள் அன்று,

“டேய் மணி இங்க பாரு”

“என்ன தாஸ் என்ன கொண்டுவந்திருக்க..?”

“யார்கிட்டயும் சொல்லிட மாட்டியே...?”

“இப்படி பயந்து சாகுற அளவுக்கு என்னடா கொண்டு வந்திருக்க, காசு எதையும் எடுத்துட்டு வந்துட்டியா..?”

“யேண்டா அன்னிக்கு நான் வாங்கன அடி பத்தாதா... இன்னமும் வாங்கனுமா..?”

“அப்பறம் என்னடா...சொல்லுடா அடுத்த சாரு வந்திடப் போறாரு... ”

“தோ பாரு டொண்ட டொய்”

“டேய்....!!!

தாஸ்.

   என் நன்றிக்கு உரியவம் அவந்தான். அவன் காட்டிய காலெண்டரில்தான் நீ முதன் முதலாக என் கண்ணில் தெரிந்தாய். அந்த வழவழ தாளில் உன்னை அபப்டியே அங்கேயும் இங்கேயும் கைவைத்த தாஸ் என்னை பார்த்த பார்வை இருக்கிறதே... என்ன ஒரு திருப்தி , நிறைவு அவனது பார்வையில் ஆனால மர்லின் உண்மையை சொல்வதென்றால் உன்னை சிரிப்பு , உனது கண்கள் அதனை தாண்டி என்னால் வேறெங்கும் பிரவேசிக்க முடியவில்லை. அப்படியே என்னை ஸ்தம்பிக்க வைத்துவிட்டாய் நீ. மர்லின் .

யு.பி.பெர்படானான் தமிழ் பள்ளி.

   கெட்டிக்கார மாணவர்கள் முன்வரிசையிலும், வீட்டுப் பாடங்களை சரியாக செய்யும் மாணவர்கள் இரண்டாம் மூன்றாம் வரிசையிலும். அழுக்கு சட்டையும் அசிங்கமான முகமும் கொண்டவர்கள் கடைசி வரிசையிலும் உட்கார்த்திருந்தோம். என் தலை முடியை எத்தனை முறைதான் நான் சீவி தொலைத்தாலும், கொஞ்ச நேரத்தில் ஆங்காங்கே எழுந்து நின்று என்னை அந்த வரிசையில் உட்கார காரணமாகியது. சுமாராக படிக்க வந்ததலும் ஒன்று அல்லது இரண்டு நாற்காலிக்கு முன் சென்றிருக்கலாம்.

   எங்கள் வகுப்பின் கடைசியில் நாங்களும் எங்களுக்கு பின்னால் ஒரு மேஜையும் அதில் வகுப்பில் உள்ளவர்கள் கொண்டுவரும் தண்ணீர் சாப்பாட்டு டப்பாக்களும் இருக்கும். ஒரு முறை மாணவி ஒருத்தி கொண்டு வந்த கோப்பி டப்பா, கவிழ்த்து வகுப்பை நாரடித்ததால் இப்படி ஒரு மேஜையை ஏற்பாடு செய்திருந்தார் வகுப்பாசிரியர்.

   உன்னை என் கண்களும் தாஸின் கைகளும் மேய்ந்துக் கொண்டிருந்ததை பின்னால் இருந்து யாரும் பார்த்திருக்க வேண்டும். கொஞ்ச நேரத்தில் வகுப்பில் சலசலப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு மாணவரும் எங்களை பார்த்தவாரே பக்கத்து நாற்காலி மாணவனிடம் எதையோ சொல்வது தெரிந்தது. வகுப்பு தலைவனாக இருக்கும் மாணவன் தினமணி. அவனுக்கு எங்களுக்கும் அரவே ஆகாது. ஏதோ பெரிய பருப்பு மாதிரிதான் எழுந்து, நெஞ்சை நிமிர்த்தி எங்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.

“என்ன படம்டா அது”

“என்ன படம்...”

“ஒழுங்கா காட்டப் போறிங்களா இல்ல சார்கிட்ட சொல்லவா..?”

எனக்கு கோவம் வந்துவிட்டது. மர்லின் உனக்காக நான் கோவப்பட்டது அப்போதுதான்.

“முதல்ல நீ ஒழுங்க உன் எடுத்துக்கு போ... டா..”

தாஸும் உடன் சேர்ந்துக் கொண்டான்

“போடா.. போய் ஒக்காரு... வந்துட்டான்...”

   பேசிக்கொண்டே மேஜையின் உள் கையை வைத்து எதையோ மறைப்பதை கவனித்த தினமணி. தண்ணி குடிப்பது போல பின்னால் சென்று, சட்டென்று மேஜையின் உள் கையை விட முயன்றான். நாங்கள் இருவரும் அவனை பிடித்து அப்படியே கீழே தள்ளிவிட்டோம். விழுந்தவன் கொஞ்டம் தள்ளி விழுந்திருக்கலாம். வீணாய் போனவன் அந்த டப்பா மேஜையிலா போய் மோதி விழ வேண்டும். அந்த தடியன் மோதிய வேகத்தில் மேஜை அப்படியே விழ, மேஜையில் இருந்த சாப்பாட்டு டப்பாக்களும் கோப்பி டப்பாக்களும், தாறுமாறாக விழுந்தன.

   கோப்பிகளும் , தே தண்ணிகளும், ஜூஸ்களும் ஒன்றாய் கலந்து  தரையில் ஒரு வித கலராய் கழ்ந்தது. கோப்பி டப்பாக்களுக்கே இந்த கதின்னா...? சப்பாட்டு டப்பாவை சொல்லவா வேணும் மர்லின்.

வகுப்பு முழுவதும் கலவரமாகியது.

   நிலமை இன்னும் மோசமானது, அந்தெ நேரம் பார்த்து ஆங்கில ஆசிரியர் நுழைந்த போதுதான். ஏற்பட்ட கலவரத்தில் மர்லின் உன் போட்டோவை மறைக்க மறந்தே போனோம். பிறகு தலைமையாசிர் அறைக்கு சென்றது மறுநாள் அப்பா அம்மாவை வர சொன்னது. வீட்டில் வாங்கிய அடியெல்லாம். எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். இப்படித்தான்  கோவம் மறந்து சிரித்துவிடுவாய்.

   உன்னை எனக்கு முதன் முதலாக அறிமுகம் செய்த அந்த புகைப்படம் இன்றுவவரை வேறெங்கும் நான் பார்க்கவில்லை. எத்தனையோ இடங்கள் இணைய தளங்கள் தேடித்தேடி அதை விட அழகாகவும், அபூர்வமாகவும் உள்ள உன் படங்கள் கிடைத்தன ஆனால்.. அந்த படம், உன் புன்னகையில் நான் உறைந்த படம், உன் கண்கள் உன்னை மட்டும் பார்க்க வைத்த உன் கண்கள் இன்னமும் காணக்கிடைக்கவில்லை.

  உன்னோடு கொஞ்சம் பேச வேண்டியே இப்போது இதனை எழுதுகிறேன் மர்லின்.  உன்னிடம் நான் சொல்லாத சில கதைகள் இருக்கிறது. என்னதான் உன்னை மட்டும்தான் உன்னிட, மட்டும்தான் என நான் சொல்லி வந்திருந்தாலும், அதில் நூறு சதவிதம் உண்மை இல்லை. இது உனக்கு தெரிந்தும் என்னிடம் தெரியாததுபோலதானே மர்லின் இருந்தாய் நீ. அதன் நேர்மைதான் இன்று உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடலாம் என்ற முடிவுக்கு காரணம். இதனை தெரிந்துக் கொண்ட பின் நீ இன்னும் என்னுடன் நெருங்கலாம். வெறுக்கலாம். தூரப்போகலாம். அல்லது, நீயும் கூட இப்படியாக மறைத்த உண்மைகளை சொல்லலாம். ஆனால் முதலில் என்னை சொல்லவிடு.

சொல்லவா..?

சொல்லத் தோன்றும் போதுதான், எங்கே ஆரம்பிப்பது என தெரியவில்லை.

   புரியாத வயதில் நடந்த ஒரு சம்பவம் பின் ஒரு நாளில் புரிந்த அனுபவம் இருக்கிறதா மர்லின் உனக்கு. அப்போது எனக்கு பதினோரு வயது. தாமான் ரியா ஜயாவில் மாமா புதிதாக வீடு வாங்கியிருந்தார். புது வீடு என்பதாலும் பள்ளி விடுமுறை என்பதாலும் அங்கே ஒரு வாரம் தங்கினோம். நானும் எனது அண்ணனும். வழக்கமாகவே வீட்டில் கடைக்கும் கடன் வாங்குவதற்கும் முதல் மகனை அனுப்ப மாட்டார்கள். கடைசி பிள்ளையைத்தான் அனுப்புவார்கள். சின்னப்பையன் என்பதாலோ, பாவப்பட்ட முகம் என்பதாலோ சரியாக தெரியவில்லை.

   மாமா வீட்டில் இருந்து கடைக்கு அதிக தூரமில்லை. இருந்தாலும் பிரச்சனையில்லை நான்தான் கடைக்கு செல்லவேண்டும். சென்றேன். புதிய இடம் என்பதால் ஒவ்வொரு வீட்டுவாசலை கடக்கும் போது தெரிந்தவர்கள் கண்ணீல் படுவார்களா என்றே தேடினேன். எப்போதும் காணக்கிடைக்கும் தெரிநாய்களைவிட வேறெந்த தெரிந்த முகமும் தெரியவில்லை.
     கடை.

    பெரிதாகத்தான் இருந்தது. ஒரு தாத்தாவும் கூட வேலை செய்ய ஒரு பையனும் இருந்தான். அவனுக்கு என் வயதோ அல்லது குறைந்ததோ இருக்கலாம். கடையில் சாமான்கள் நெரிசலாக அடுக்கபப்ட்டிருந்தது.  ஒருவர் நுழையும் போது இன்னொருவர் வழிவிடும் வகையில் கொஞ்சம் கூனிக்குருகவே வேண்டும். பணம் கட்டும் இடத்தில்உம் நெரிசலாகத்தா இருந்தது. மேஜை. தாத்தா. அவரது தலைக்கு மேலே ஊதுபத்தியும் பெயர் புரியாத எழுத்துகளும் இருந்தன. கடையில் யாரும் இல்லை. நான் நுழைந்ததும், மேஜையின் கீழே எதையோ தேடிக்கொண்டிருந்த பையன் வெளிவந்தான். அவனிடம் அந்த தாத்தா;

“டேய் பையா, போ போய் மின்னுக்கு ரொட்டி வக்கிற இடத்தை சுத்தம் செய்யு..?”

அந்த பையன் என்னை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே சிரித்தான். நானும் சிரித்து வைத்தேன். வாசலின் வெளியே சென்ற அந்த பையன் , ரொட்டியை வைத்திருந்த வக்குலை வாசலுக்கு இழுத்து வந்தான். உள்ளே செல்லும் வழியும் அதுதான் வெளியேறும் வழியும் அதுதான். வாசலில் உட்கார்ந்து ரொட்டி பாக்கேட்டுகளை துடைத்துக் கொண்டிருந்தான். கடைக்கார தாத்தா;

“வா பையா என்ன வாங்க வந்த..”

“தாத்தா, கோதுமாவு வேணும் ஒரு கிலோவோட...”

“ஓ.... ஆமா தம்பி என்ன புதுசா இருக்கியே... யார் வீட்டுக்கு வந்திருக்க...?”

“இங்க மாமா வீடு வாங்கியிருக்காரு.... அதான் லீவுக்கு வந்திருக்கேன்.. எங்க வீடு யு.பி-ல இருக்கு...”

“அப்படியா தம்பி நல்லது, உன்னோட பேரு என்னா...”

“என் பேரு மணி”

“ஓ.. அதான் நீயும் மணி மாதிரியே இருக்க...”

என்றவர் எழுந்தார். அருகில் வந்தார். என் தலையில் கைவைத்து முடியை கோதிவிட்டார். என்னை அப்படியே முன்னுக்கு தள்ளியவர் என் பின்னால் சாய்ந்து என்னை அப்படியே இறுக்கினார். மர்லின் இப்போது போலவே , அப்போதும்  நான் உயரமாகத்தான் இருந்தேன். தாத்தாவின் இடுப்பும் எனது இடுப்பும் ஒரே அளவில்தான் இருந்தது. என்னை இறுக்கியவர் அப்படியே என் கண்ணங்களையும் காதுகளையும் கைகளால் தடவினார். அதுவரையில் நான் கேட்டிடான விதமாய் அவரிடம் இருந்து ஏதோ சத்தம் வந்தது. நினைவுக்கு வந்துவிட்டது மர்லின் , காதில் கோழி இறகை வைத்து நீ குடைந்திருக்கிறாயா..? ஆம்.. அப்போது ஒருவிதமான சுகம் கிடைக்கும். தனியாய் இருந்து இப்படி குடையும் போது நம்மை அறியாமல் நாமே ஒரு வித சத்தம் கொடுப்போம். அதே சத்தம்தான் அந்த தாத்தாவிடம் இருந்து வந்தது.


என் பின்னால் என்னமோ கடினமாய் ஒன்று அழுத்துவதை அப்போது உணர்ந்தேன். எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது.

“தாத்தா... தாத்தா...”

என கூப்பிட்டெனா கெஞ்சினேனா என தெரியவில்லை. அந்த தாத்தா மிக மும்முரமாக என் பின் புறத்தை அழுத்தி தேய்த்துக் கொண்டே இருந்தார்.

சட்டென வாசலில் இருந்து சத்தம் கேட்டது.

“வாங்கண்ணே... இருங்க இதை நகர்த்திடறேன்”

பையனின் குரல் கேட்டது. தாத்தா என்னை விடுவித்தார். அவரின் நாற்காலிக்கு போய் உட்கார்த்து மேஜைக்குள் தன் கால்களை மறைத்துக் கொண்டார்.

“டேய் பையா... இந்த தம்பிக்கு என்னமோ வேணுமா...? எடுத்துக் கொடு டா.. ரொட்டி பையை அப்பறமா துடைக்கலாம்”

கடை வாசலில் இருந்து ரொட்டி வக்குலை பையன் நகர்த்து பழைய இடத்திலேயே வைத்தான். உள்ளே ஒருவர் நுழைத்து சிகிரெட்டுகளை ஒவ்வொன்றாக விலையை கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு பின்னாலேயே நுழைந்த அந்த பையன் , என்னிடம்;

“என்ன வேணும்..”

“கோதுமாவு”

“இங்க இருக்கு...”

“ம்”

அந்த பையன் முன் போக, அவனது பின்னால் நானும் போனேன். வழக்கம் போல என்னால் வேகமாக நடக்க முடியவில்லை மர்லின். இரு கால்களையும் அகலப்படுத்தியே என்னால் நடக்க முடிந்தது மர்லின்.

கோதுமாவை அந்த பையன் என்னிடம் கொடுத்தான். விலையை சொன்னவன் தொடர்ந்து;

“வலிக்குதா...?”

“ம்...”

“இல்ல வலிக்குதான்னு கேட்டேன்...?”

“என்ன வலிக்குது...”

“உங்களுக்கு பரவால... எனக்கு வாந்தியே வந்திருக்கு...”

“ஏன்...”

“நீங்க வர்ரதுக்கு முன்னதான் , அந்த ஆளோட மேஜை கீழ நானு....” முடிப்பதற்குள்;

“டேய் பையா என்னடா கதை அங்க.. சாமானை எடுத்து கொடுக்க இவ்வளோ நேரமா...”

“கோதுமாவு, அலமாரி மேல இருக்குது அதான் ஏறி எடுத்தேன்... கொடுத்துட்டேன்...”

கோதுமாவுக்கான பணத்தைக் கொடுத்த பிறகு, அந்த தாத்தா என் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தமிட்டு கையில் இரண்டு மிட்டாய்களைக் கொடுத்தார். திரும்பி நான் நடக்கும் போது என் பின்னால் தட்டிவிட்டு சிரித்தார். கையில் கோதுமாவுடனும், இரண்டு மிட்டாய்களுடனும் நடக்கத்துடங்கினேன். கடைக்கு வெளியில் வந்து நடந்தேன். யாரோ கூப்பிடுவது போல இருந்தது. திரும்பி பார்த்தேன். அந்த பையன் தான் கடைக்கு வெளியின் நின்றுக் கொண்டிருந்தான். பார்த்தேன். பார்த்தான். தன் கையைக் காட்டினான். அவன் கையின் இரண்டுக்கும் அதிகமான மிட்டாய்கள் இருந்தன.

அதன் பிறகும் நான் கடைக்கு சென்ற இரு சமங்களிலும் அந்த தாத்தாவின் நாற்காலியில் வேறொரு ஆள் இருந்தார். தாத்தாவின் மகன் போலவே இருந்தார் அதே முகம் அதே முடி அதே தடித்த மூக்கு. அந்த பையனும் இருக்கவில்லை.

நான் வேண்டியதை கேட்டதும், அவர் யாரையோ கூப்பிட்டு மலாய் மொழியில் பேசினார். வெளி நாட்டு பெண் ஒருத்தி ஓடிவந்தாள். நான் கேட்டதை , அவரிடம் கொடுத்துவிட்டு சென்றார். மர்லின், அவள் என்னை பார்த்து சிரித்ததும் அவளது கறைபடிந்த பற்கள் என்னை கிளியடைய செய்தன. அதிக மிட்டாய் சாப்பிட்டிருப்பால் போல...

ரொம்ப நாளாக அந்த தாத்தாவின் செயல் எனக்கு இனம் புரியாத கேள்வியை கேட்டுக் கொண்டே இருந்தது.



மர்லின் உன் பெயரே எனக்கு முழுமையாக தெரியும் முன்பே, உன் உடல் குறித்து நான் தெரிந்துக் கோண்டேன்.

அன்றொரு நாள்,

உன் மேனியெங்கும் வழிந்து வந்த ஈரத்தை துடைக்க உன்னை , அப்படியே நிற்கவைத்து உன்னை என் கைகளால் துவட்டினேனே..!

உன் ஈரம் படிந்த மார்பின் மேற்பரப்பு ஆடையை உதட்டின் அருகில் வைத்து உஷ்ண காற்று ஊதினேனே...!

கீழே வழிந்து ஓடும் நீரின் காரணம் உன் ஜீன்ஸ்தான் என்ற எனது கண்டுபிடிப்பை ரசித்து சிரித்தாயே..!

ஊதிய உஷ்ண காற்று போதாது என பேசிய பொழுது, என்னை மேலும் ஏங்க விடாது நீயாகவே உன் மேலாடையை கழட்டினாயே...!

ஒன்றோடு ஒன்றென பின்னர் ஆடையற்ற நீ, நிர்வாண மனதுடன் நான்..!

அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திடாது மனது.


அப்போதுகூட , நீதான் நான் கண்ட முதல் நிர்வாணம் என நான் சொன்னதை விரிந்த கண்ணோடு வீங்கிய மார்போடும் கண்டு குலுங்கி சிரித்த போதுகூட நான் உண்மையை சொல்லியிருக்கலாம். அதுவல்ல நான் கண்ட முதல் நிர்வாணம்...!


முதல் நிர்வாணம்.  


நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். ஹோக்கி விளையாட்டு எனக்கு பிடித்த விளையாட்டு. பாடங்களில் பின் தங்கியிருந்தாலும், ஹோக்கியில் பலரையும் முன் தங்கியிருந்தேன். அந்த ஆண்டி இறுதியில் , மாநில அளவிலான ஹோக்கி போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.  பாடமே ஒழுங்கா வெளங்க.... விளையாடி என்னத்த கிழிக்க போற என்ற எனது வகுப்பு ஆசிரியரின் ஆலோசனையின் பேரில் போட்டிக்கு செல்பவர்களின் பட்டியலில் இருந்து என் பெயர் நீக்கப்பட்டது.

எனக்காக பரிந்து பேச வந்திருந்த ஆசிரியை பள்ளிக்கு வந்தே சில வாரங்கள்தான் ஆகியிருந்தன. புதிதாக திருமணம் ஆனவர். என் கல்வி தகுதி குறித்து அறியாதவர் என்பதால் விளையாட்டு ஆசிரியராக இருந்த அவருக்கு என் விளையாட்டில் நம்பிக்கை இருந்தது.

அவர் பேச்சு எடுபடவில்லை, எனது மாதாந்திர ரிப்போட் கார்டை பார்த்த பிறகு அவரும் பின் வாங்கிவிட்டார்.

அவர் எங்களுக்கு விளையாட்டு ஆசிரியராக வந்திருந்த போது, புதிய டீச்சர் என்பதால் நாங்கள் உற்சாகமாக இருந்தோம்.
                                                                                                                                         தொடரும்.......

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்