பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 10, 2012

திரைப்பார்வை - மெரினா


மெரினா - படம் பார்த்தேன்.

கண்டுவந்த கடற்கரையில் கவனிக்காத மனிதர்களின் கதையும் கதை சார்ந்த உணர்வும் அதன் ஊடே கல்வியில் முக்கியத்துவமும் சேர்ந்த கலவையாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

சிறுவர்களும் மத்தியில், வயோதிகர்களின் எதிர்ப்பார்ப்புகளும் நன்றாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

குறும்படத்தை பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் தற்காலிக இளசுகளின் காதல்.

எதார்த்தமாய் வந்து போகும் வசனம். குபீர் சிரிப்புக்கும் திடீர் வலிக்கும் உத்திரவாதம்.

அதிகாரப் பந்தலில் அமர்ந்திருக்கும் அதிகாரிகளின் பொறுப்பற்றத்தனமும் ஒருங்கே காட்டப்படுகிறது.

மெரினா - குழந்தைகள் உல்கத்தில் குழந்தைகள் மட்டும் இருப்பதில்லை.

-தயாஜி-

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்