பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 25, 2011

கத்தி குத்தும் புத்தி திட்டும்


கத்திக்குத்தும் புத்தியெல்லாம்;

செத்துப்போகட்டும்.........

யுத்தம்கேட்கும் மொத்தபேரை;

பித்து சூழட்டும்..........



ஜித்தனாக எண்ணி;

ஜாலம் காட்டுவேன்........

கல்வி வேண்டாம் கலவி போதும்;

என்றே கூறுவேன்.............



கைகள் கட்டி வாய்கள் பொத்த;

லஞ்சம் நீட்டுவேன்............

நேர்மை என்றால் விலையைக் கேட்டு;

கேலி பேசுவேன்..........



கதரைக் தூக்கி;

கருத்தாய் பேசி..........

கோஷம் வாங்குவேன்;



எல்லாம் செய்வேன்;

உண்மை கொல்வேன்.........

இருக்கும் வரையிலே;

நரம்பு முறுக்கும்........

வரையிலே;



கண்கள் மங்கி;

கால்கள் வீங்க.............

படுப்பேன் பாயிலே;

பணம் இருக்காது.........

பையிலே;





கத்தி கம்பும் கைக்கு;

எட்டா தூரம் சிரித்திடும்..........

இதுவரை கொன்ற முகங்கள்;

என் மூச்சை முகர்ந்திடும்..........



கண்ணருகில் இருப்போரெல்லாம்;

கறுப்பாய் மாறுவர்.........

தலைவன் நாந்தான் என்ற எண்ணம்;

தரையை நோக்கிடும்........

தரணி மீது செய்த பாவம்;



வட்டி கேட்டிடும்;

வணக்கம் சொன்ன வாய்கள்;

இனி எச்சில் துப்பிடும்............

வன்முறையாளனின் கதை;

இப்படியே முடிந்திடும்............

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்