பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 17, 2011

புத்தகக்காதலிகள்





15-3-2011 இன்று வாங்கிய புத்தகங்கள் (சம்பளம் வந்தாச்சி....!! :)

சமீபத்தில் படித்த 'கலில் ஜிப்ரான்' புத்தகமான 'மணலும் நுரையும் ' என்ற புத்தகத்தால் இவர்பால் ஈர்க்கப்படுள்ளேன்.ஆதலால் இவரின் - பைத்தியக்காரன் - என்ற ஆங்கிலத்தில் வெளிவந்த இவரது முதல் புத்தகத்தின் மொழிபெயர்ப்பை வாங்கியுள்ளேன். இந்த பைத்தியக்காரன் என் பைத்தியத்தை தீர்ப்பான இல்லை...மேலும் பைத்தியம் ஆக்குவானா என பொருத்திருந்து பார்க்கின்றேன்...

அடுத்த புத்தகம் "டிரகுலா" ப்ராம் ஸ்டோக்கர் எழுதிய புத்தம்.மொத்தம் 336 பக்கங்கள். தமிழில் புவியரசு. 1897-ல் புத்தகமாக வெளிவந்தது. ஆம்...சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு இன்று பல மொழிகளில் மொழிபெயர்த்திருக்கின்றார்கள். வெளிவந்த நாளில் இருந்து இன்று வரை உலகை குலுக்கிக் கொண்டிருக்கும் இந்த பயங்கர நாவல்...குலை நடுங்க வைக்கும் நிகழ்ச்சிகள் கொண்டது. பல டிரகுல கதைகளும் நாவல்களும் திரைப்படங்களும் வந்திருந்தாலும் இந்த புத்தகம்தான் அனைத்திர்கும் முன்னோடி என சொல்லப்படுகின்றது.

படித்ததும் வாய்ப்பிருந்தால் பகிர்கின்றேன்.... புத்தகக்காதலிகள்
இப்படிக்கு;
தயாஜி.......

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்