பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 23, 2010

சுஜாதா என் மானசிக ஆசான்..


(மலேசிய நண்பன் நாளிதழில் 23.11.2010-ல் வெளிவந்த செய்திப்படம் இது)
"அப்படி இப்படின்னு விளம்பரம் செய்தாச்சி; இதுதான் படம்னும் புகழ்ந்தாச்சி; இதுவும் படமா..? (கெ)கேட்டாச்சி.... இப்போ ஏன் இந்தப் பதிவு.... அதன் பதிலுக்கு தொடர்ந்து சில நிமிடங்களில் படித்துத்துத்தெரிந்துக் கொள்ளுங்கள்; உங்கள் கருத்தினையும் பதியுங்கள்"


1.எந்திரன் படத்தில் எழுத்துகள் வரும்போது; கதை,திரைக்கதை, கடைசி சண்டைக் காட்சி ஷங்கர் என இருந்தது.


2.வசனம் எழுதியவர்கள் சுஜாதா, கார்க்கி, ஷங்கர் என இருந்தது.3. இது ஷங்கரின் பத்து ஆண்டுகால கனவுன்னு ஷங்கரே சொன்னாரு எப்போ சுஜாதா இறந்தப் பிறகு.


சுஜாதாவின் படைப்புகளை வாசித்தவர்களுக்கு அப்பட்டமாகத் தெரியும் இது சுஜாதாவின் கதை என்று; ஷங்கருக்கும் தெரியாமலில்லை. ஆனால் சுஜாதா உயிரோடு இல்லாதா ஒரே காரணத்துக்காக நடந்த "உழைப்புத் திருட்டு" என்ன தெரியுமா இது தனது 10 ஆண்டுகால கனவு என ஷங்கர் சொன்னதுதான்.


சுஜாதாவின்; சொர்க்கத்தீவு, பேசும் பொம்மைகள், மீண்டும் ஜீனோ, என் இனிய இயந்திரா, போன்ற நாவல்களையும் ,விஞ்ஞானக்கதைகள் (50 சிறுகதைகள் தொகுப்பு) ஆகிய புத்தகங்களைப் படித்தவர்களுக்கு தெரியும் எந்திரன் கதை யாருடைய உழைப்பு என்று.....

ஷங்கர் படம் எடுக்கும் முன்னரே விஞ்ஞானக் கதைகள் சொல்லி வாசகர்களை ஈர்த்தவர்தான் சுஜாதா.

படம் வெளிவந்த நாளிலிருந்து இது என் கதை....! இது என் கதை ... என் கனவு... என மார்தட்டி சுஜாதாவை வெறும் வசனகர்த்தாவாகவே சித்தரித்த பிரம்மாண்ட இயக்குனர் சங்கருக்கு வந்த நெருக்கடி என்ன தெரியுமே...?அமேரிக்க எழுத்தாளர் ஒருவர் இது தன் கதை என்றார். தமிழகத்தில் இரண்டு எழுத்தாளர்கள் இது தங்களின் கதை, என்று எந்திரன் படத்தின் தயாரிப்பாளர்க்கும் இயக்குனருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த எழுத்தாளர்களில் ஒருவர் 'அர்னிகா நாசர்' அவரின் படைப்புக்கும் வாசகன் நான். சுஜாதாவால் விஞ்ஞானக்க் கதை எழுத்தாளர் என அர்னிகா நாசர் ஒரு முறை குறிப்பிடப்பட்டிருக்கின்றார்.


நேற்று வரை தன் கதை என்றவர் சம்மன் வந்தப்பின் இது சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா' நாவலின் மையமாக வைத்து எழுதப்பட்டக் கதை என பல்டி அடித்திருப்பது சிரிப்பு வருகின்றது. மூலக்கதை சுஜாதாவின் புத்தகம் என தெரிந்தது எப்போது தனக்கு சம்மன் (ஆப்பு அல்லது ஆபத்து) வரும்போதுதானே...


சுஜாதாவின் கடைசி எழுத்து இந்த எந்திரன் படத்தின் திரைக்கதை என்பது எல்லோர்க்கும் தெரிந்ததே. ஷங்கரே சுஜாதாவின் மறைவில் சொன்னது என்னத் தெரியுமா...


"சுஜாதா இந்த திரைக்கதையை முடித்து கொடுத்துச் சொன்னார் இதுதானனென் கடைசி படமாக இருந்தாலும் நிம்மதி"


இப்படியெல்லாம் சுஜாதாவின் மறைவில் சொல்லி; எந்திரன் படத்தில் சுஜாதாவை பத்தோடு பதினொன்றாக காட்டியுள்ளது நியாயமா...?ஒருவெளை சம்மான் வராமல் இருந்திருந்தால் சங்கர் தன் திருவாய் திறந்து இப்படி சொல்லியிருப்பாரா என்பது கேள்விக்குறியே....பிரம்மாண்ட இயக்குனர் மீது எனக்கு ஒன்றும் கோவம் கிடையாது.


தன் சுயநத்திற்கு சுஜாதாவை மறந்ததுதான் என்னால்

(எல்லா சுஜாதாவின் வாசகர்களால்)

ஏற்றுக்கொள்ள முடியவில்லை... இதை நான் பதியவில்லையென்றால் சுஜாதாவை என் மானசீக ஆசான் எனச் சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை....

நவம்பர் 20, 2010

தீபாவளிப் பதிவுகள் 2010

புகைப்படம் என்பது கணங்களின் நிறுத்தம்;
நாள்களை நீலமாக்கும் மாயை.....
அதிலும் சந்திப்பு கணங்களைக் கற்சிலையாக்கினால்;
காலத்தால் அது பொக்கிஷம்.......
இந்த தீபாவளி;
என் பல கணங்களை நிறுத்திய ஒரு
பரவசத் தீபாவளி...
சந்தர்ப்பங்கள் எப்போதும் சரியாக அமையாததால்
சதியாக நானும் காமிராவோடு கைகுலுக்கினேன்....

( புகைப்படம் )


ஓவியக் கண்காட்சியில் ஓய்வெடுப்பதுபோல்,
தலைகவிழ்த்த, உயிரின் மூலமாம் விநாயகனோடு
முதல் கணநிறுத்தம்....
எனக்குள் இருக்கும் பல்வேறு குணங்கள்,
இவருள்,
பதிந்திருப்பது எனக்கே ஆச்சர்யம்......

(புகைப்படம் 2)

பிரம்மான்ந்த சரஸ்வதி சுவாமிகள்,
பாலமுருகன் கேசவன்...
நான்....
கடாரமண்ணின் தனித்தனியே ஒருவரையொருவார்,
அறிந்திருந்தாலும் முதன் முதலாக,
எங்கள் மூவரையும் இணைத்த பெறுமை
தலைநகரையே சேரும்...

(புகைப்படம் 3)

மின்னல் வானொலியில்,
‘கண்ணாடித் துண்டுகள்’ நிகழ்ச்சிக்காக....
யார் யாரையோச் சந்தபோது ஏற்படாத ஒன்று;
புலம் பெயர்ந்த நம் தம்பி தங்கைகளைச்;
சந்தித்ததும் கிடைத்து...
தோழி பொன்கோகிலத்தால் இது கிட்டியது......
இந்த கணத்தை நிறுத்தினேன்; இவர்கள்
மனநிம்மதிக்கு பிரார்த்திக்க.....

(புகைப்படம் 4)

என் அப்பாவின் நாடகத்தில்;
எப்போதும் நாயகன் இவர்...
நாடக நடிகர் கே.குணசேகரன்
அரிதாய் கிடைத்த வாய்ப்பொன்றின்
அவருக்கு மகனாய் நான்.....
இந்த கணத்தின் பதிவு...
அப்பாவிற்கு பரிசாக....

(புகைப்படம் 5)

53வது சுதந்திரப் பதிவு இது;
வானொலித் தலைவர் பார்த்தசாரதியின்;
கைவண்ணம்....
இவ்வகை மிக அரிது.....
(புகைப்படம் 6)

வானொலித் தலைவரோடு;
இந்த கணத்தை பதித்தேன்,
வானளவு வளர்ச்சியின் ஒத்திகைக்காக.....
இரு ராஜாக்கள் நெஞ்சிலும் ரோஜாக்கள்....

(புகைப்படம் 7)

உன்னோடு நானும்
என்னோடு நீயும்;
பயணிப்பது நாவல் அல்ல....
உங்களோடு நாங்களும்
எங்களோடு நீங்களும்
பயணிப்பது நாவல் அல்லாமலல்ல....
ஆறு அடி வாக்கியத்தை அரைமணி தாண்டி
விளக்கிய எழுத்தாளர் ஜெயமோகனின் சந்திப்பில்...
மீண்டும் நாம் சந்திப்போம்;
என்பதை நினைவுக்கூறும் பதிவு.....

(புகைப்படம் 8)

எப்போதும் என்னைக் கவரும்
பேச்சாளர்...
பர்வின் சுல்தானா....
பெண்கள் சளைத்தவர்களில்லை என்ற
மூச்சாளர்...
இவரின் இந்த கணப்பதிவு;
‘பேச்சு என்பது வெறும் பேச்சல்ல’
என்பதை அவ்வபோது எனக்கு நினைவுப்படுத்த....

(புகைப்படம் 9)

இது கணப்பதிவு இல்லை,
என் காத்திருப்பின் கனாப்பதிவு....
கற்பது நீச்சலென்றாலும்,
கடல்பயணம் எனக்கு மிக விருப்பம்..
இதுபோன்ற கவிப்பயணமும்
என் பழக்கம்...

(புகைப்படம் 10)

அத்தனைக்கும் முத்தாய்ப்பாய்,
இத்தனையோசனைக்கும் ராஜன்...
என் ஆசான்;
சுஜாதா என்கிற ரங்கராஜன்...
இவ்வாண்டு தீபாவளியின்
மிகச் சிறந்த பரிசு...
வாழும்போது வணங்கியிருக்க வேண்டியவரை
வாழ்வைத் தாண்டியப் பின் சந்திக்கின்றேன்....
கணங்களை நிறுத்தும் காமிரா...
காலத்தால் பேசப்படும்......
காலத்தையே பேசவைக்கும்;
பிரசுரிக்கப்படும் படைப்புகள்....
என்னது;
காலத்தாலும் பேசப்படும்;
காலத்தையும் பேசவைக்கும்;
நம்பிக்கையான தீபாவளி எனக்கு......

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்