பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 28, 2010

மரணம் நெருங்கியவனின் மன்றாடல்...













"மரணம் வந்தால் என் செய்வீர்..?"





"மரிப்பேன்.. வேறென்ன செய்ய..!"


இந்த கேள்வி பதிலோடு இனி;
பயணிக்க இயலாது...
மனம் திறந்த வாக்குமூலம் கொடுக்கின்றேன்,
நிறைவேற்றுங்கள்....
கடைசி ஆசை...

இதுவரை நான் சேமித்த;
பணத்தின் எண்ணிக்கை காட்டிலும்;
புத்தகங்கள்தான் அதிகம்.....
எனது படைப்பிற்காகவும்;

அவளிடம் படித்துக் காட்டவும்....

என்;
இறுதிச் சடங்கில் அவள் இருக்கமாட்டாள்,

அவள்.

இறுதி எனக்கில்லை என்பதை இன்னமும் நம்புகின்றாள்;

பாவம்....

'என்' பிறகு என் புத்தகங்களை

அவளிடம் கொடுத்துவிடுங்கள்,

என் மனைவியை விடவும்

அதனை அவள்;

அதிகம் நேசிப்பாள்;

நான் இல்லாத போதும்;

என் புத்தகங்கள் அவளோடு,

சண்டையிடும்;

சமரசம் செய்யும்;

கட்டிலில் படுக்கும்;

கட்டிப் பிடிக்கும்;

கோவம் கொடுக்கும்;

ஜோக்கும் அடிக்கும்;

அதிலும் நான் கோடிட்ட இடங்கள்.....

அவளை என்னோடு ;

பேசவைக்கும்

காதோரம் கூச வைக்கும்;

கவிபாட ஆசை வைக்கும்'

உடலோடு உரசவைக்கும்;
வார்த்தைகளால் அசரவைக்கும்;

இன்னும் இன்னும் எல்லாம் செய்யும்.,


என் துரோகம் உட்பட........

அப்போதும்,

எனக்காக எதையாவது செய்வாள்;

என் மனைவி மீது கோவம் கொள்வாள்....

அதும் என்னை புரியாமல் இருக்கின்றாளே எனதான்;

அவள் யார்..?

எல்லோர் வாழ்விலும் வந்து போகின்ற;
பெயர் குறிப்பிட தெரியாத;
பெயர் குறிப்பிட முடியாத;.........

அப்பாவி பெண்..!
இருக்கும் போது சொல்ல வக்கில்லாதவன்.....
இறுதி சடங்கிற்கு;
முன்னதாக சொல்வதில் கொஞ்சம் நிம்மதி;
மறவாமல் அவளிடம் புத்தகங்களைக் கொடுத்துவிடுங்கள்...












இப்படிக்கு தயாஜி

2 comments:

Unknown சொன்னது…

migavum arputham

தயாஜி சொன்னது…

நன்றி,
தொடர்ந்து கருத்து பகிருங்கள்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்