பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 02, 2010

என் கவிதையானவளே....







கியாகிவள் ள்

கத்தாலக் கண்ணழகி
கார்மேகப் பொட்டழகி

இல்லாத இடையழகி
இருக்கின்ற தொடையழகி

சொல்லாத மொழியழகி
சொக்கத்தங்க ஸ்பரிசழகி

வற்றாத அன்பழகி
வாடாத இதளழகி

மான்தோற்கும் காலழகி
மணியான சிரிப்பழகி

ஒளிகொடுக்கும் தோளழகி
ஒய்யார நடையழகி

கேள்விக்குறி புருவழகி
கோவத்திலும் ஓரழகி

எழுதாத கவியழகி
எழுதவேண்டிய எழுத்தழகி

வெள்ளைத்தாள் மனதழகி
வெட்கப்படும் நிலவழகி

மொழிபேசும் விழியழகி
விலைபேசும் திமிரழகி

மதிப்போர்க்கு சாந்தழகி
மறுப்போர்க்கு வேறழகி

முகத்தில் பருழகி
முந்தானை முதுகழகி


காலோடு கொலுசழகி
கையோடு வளையழகி

கம்பன்விட்ட காவியழகி
கண்ணன்மறந்த துவாரழகி

ராமன்விடா வில்லழகி
ராத்திரிக்கு குளிரழகி

இசைக்கு இசையழகி
இலக்கியத்தில் கவியழகி

எப்படி அழகி...?-
நீ…….
எப்படியும் அழகி...!


இப்படிக்கு,
தயாஜி வெள்ளை
ரோஜா

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்