பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 29, 2010

புதுக்காதலி........


‎24-12-2010-ல் வாங்கிய புத்தம் இது.

"ரஜினியின் பன்ச் தந்திரம்"

கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் இது.ரஜினிகாந்த் திரையில் பேசிய 30 பன்ச வசனங்களைத் தொகுத்திருக்கின்றார் பி.சி.பாலசுப்ரமணியன்....


உதாரணமாக 'படையப்பா' திரையில் ரஜினியின் வசனம் ; 'என் வழி தனி வழி'.வியாபாரம் & வாழ்க்கை என இரண்டுக்கும் இந்த வசனம் எவ்வாறு பயன்படும் என விளக்கப்பட்டுள்ளது. அதே போன்று ரஜினியின் பல வசனங்களை இரண்டு கோணங்களில் பிரித்து; எப்படி பயன்படுத்தலாம் என்பதை விளக்குவதே இந்த புத்தகம்.


"ரஜினி ஒரு நடிகன் மட்டுமே; நமக்கும், தமிழ்க்கும் அந்த நடிகன் பெரிதாக ஒன்னும் செய்யவில்லை நாம்தான் அந்த கிழவனை தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடுகின்றோம்"


இப்படி சொல்கின்றவர்களுக்கும் ; சொல்லத் தயாராகின்றவர்களுக்கும் சின்ன நினைவுருத்தல்.


நடிகனால் என்ன கிடைத்தது என 'நோண்டாமல்'; என்னவெல்லாம் பெற்றுக் கொள்ளலாம் என 'தோண்டுவதே'

எனது பாணி.......


இந்த புத்தகம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல; படிக்கின்ற யாவருக்கும் நன்மை செய்தால் நல்லது.

டிசம்பர் 14, 2010

புத்தகக்காதலிகள்....


‎13-12-2010-ல் வாங்கிய புத்தகங்கள்;

1.ருத்ரவீனை(பாகம் 1 & 2)

-இந்திரா சௌந்தரராஜனின் புகழ் பெற்ற நாவல்களில், குறிப்பிடும்படியான நாவல்.ருத்ரவீணை.புதுமையான ஆன்மீக மர்ம நாவல்.'இசையும் ஒரு மருந்து' என்பதை பலங்காலத்து நம்பிக்கை சார்ந்து நாவலாக்கியுள்ளார். இந்த நாவல், சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சிச் தொடராக வந்து பெறும் வரவேற்பை பெற்றது. ...இந்த நாவல் பாகம் ஒன்று ; பாகம் 2; பாகம் 3 என வெளிவந்துள்ளது. விரைவில் மூன்றாம் பாகத்தை வாங்கிவிடுவேன். அதையும் பதிவு செய்கிறேன்.

2. நேற்று மனிதர்கள்

-'சாகத்ய அகாதமி'விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன்-னின் சிறுகதை தொகுப்பு இது.மொத்தம் 17 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது.1986-ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசு முதற்பரிசு பெற்ற சிறுகதை தொகுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தகமும் நானும் ஒரே ஆண்டில் பிறந்திருக்கின்றோம்.அதோடு இந்த புத்தகம் பல தன்னாட்சி கல்லூரிகளில் பாடமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன் பேட்டி ஒன்றுக்காக சந்திதித்துள்ளேன்.

3.துணையெழுத்து
4.கேள்விக்குறி

- இவை இரண்டும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது.ஆனந்த விகடனின் தொடராக வந்தது. இவரின் 'சிறிது வெளிச்சம்' புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கின்றேன்; இவர் மீதும் என் ஈடுபாடு திரும்பியுள்ளது. 'நிச்சயம்' படிக்கவேண்டிய புத்தகங்கள் பட்டியலில் இவரின் புத்தகங்கள் 'நிச்சயம்' இடம்பெறும்.


5.மூன்றாம் பரிமாணச் சிந்தனை.

-தோற்ற்றுவிட்டோம் என்ற ஒதுங்கிய நிலையிலிருந்து மனதை மீட்டெடுத்து; வெற்றியடைய வைக்கும் மந்திரத்தை சொல்லித் தருவது....... எனத் தொடங்குகின்றது இந்த புத்தகம்.எதையும் அணுகும் மாறுபட்ட முறையே ஒருவனை வெற்றியாளனாக்குகின்றது. வெற்றி முதல் பரிணாமம்; தோல்வி இரண்டாம் பரிணாமம்; மூன்றாம் பரிணாமம் என்ன என்பதனை வெற்றியாளர்களுக்கு வேதம் போல்; உவமானக்களுடன் சில சரித்திர உண்மைகளுடன் சொல்லும் ஒரு பொக்கிஷம், இந்த புத்தகம்.

6. மாத்தனின் கதை (மலையாளச் சிறுகதைகள்)

- மொழிபெயர்ப்பு கதைகளையும் ; கவிதைகளையும் படிப்பதன் மூலம், நாம் புரிந்துக் கொள்ள வேண்டியதும், தெரிந்துத் தெளிய வேண்டியதும் அதிகம் என்பதை உணர்ந்திருக்கின்றேன். அதன் காரணம்தான் இந்த மலையாளச் சிறுகதைகளின் தொகுப்பு.மொழிபெயர்த்தவர் சுரா.

டிசம்பர் 13, 2010

ரத்தச்சரித்திரம்



நிலைகள் மாறனும்; நிஜங்கள் புரியனும்...

நித்திரை மறந்து புறப்படுவோம்......

தோள்மீது தோள் வைத்து தோல்விகளைத் துரத்திடுவோம்...

காலோடு கால் சேர்த்து கஷ்டங்களைக் கடந்திடுவோம்..

வா வா இளைஞனே; வருத்தம் ஏன்..?

வெற்றி நமக்கென்று திருத்தம் செய்...!

நித்தம்நித்தம் யுத்தம் செய்யும்
ரத்தச்சரித்திரம்;

உனக்குமெனக்கும் இருக்கும் பகைதான்;
இந்தச்சரித்திரம்;

யுத்தம்மூலம் பூமி கேட்கும்,
‘ரத்தம்’சரித்திரம்;

துச்சமாக உயிரைக் கேட்கும்,
‘பிச்சைப்’பாத்திரம்;

தீயும்கூட ஆறிவிடும், தீமைமாறுமா;

உடனிருந்தேக் குழி பறித்தால்,
உதிரம் தாங்குமா..

கத்தி கையில் வந்தபின்னே,
கருணைத் தேவையா....?

யுத்த நேரம் வந்தபோதும்
மெத்தைத் தூக்கமா...?

இன்று வீசும் கத்தி ‘என்னை’க்
கொன்று வீசிடும்...

அந்த கத்தி மீண்டும்;
உந்தன் கதவைத் தட்டிடும்..

மீண்டும் மீண்டும் இந்தநிலைதான்;
தொடர வேண்டுமா..?

விட்டுசென்ற தடயங்களின்
தரத்தில் குறைவில்லை...

தன்னை நம்பி தானே செல்ல
ஏனோ மனமில்லை...

உந்தன் அனுக்கள்,
உந்தனோடு மறையவேண்டுமா.....?

விட்டுச் செல்ல பாவம் தவிர
வேறு இல்லையோ..!

நீ;

கத்தி குத்தி செத்துப்போனால்;
கண்கள் தாங்குமா..?
தாயின் மார்பும் தூங்குமா..?

நிலைகள் மாறனும்; நிஜங்கள் புரியனும்...

நித்திரை மறந்து புறப்படுவோம்......

தோள்மீது தோள் வைத்து தோல்விகளைத் துரத்திடுவோம்...

காலோடு கால் சேர்த்து கஷ்டங்களைக் கடந்திடுவோம்..

வா வா இளைஞனே; வருத்தம் ஏன்..?

வெற்றி நமக்கென்று திருத்தம் செய்...!









ராக்கூத்துச் சாமிகள்....







ராக்கூத்து ஆடும்,
ரங்கன் மகனைத் தெரியுமா..?
என்னோடு அவன்,
இரண்டு ஆண்டு பழக்கம்….

கர்ஜித்துப் பேசி,
கண்வாளை வீசி.....
அவன் போடும் வேசம்,
அத்தனையும் நிசம்................

ஆனாலும் அவன் மாணவன்;
அவனப்பனோ சாதாரணாமானவன்....

எங்களோடவன் அமரும் போதும்,
எதிரெதிர் தினம் கடக்கும்போது..
தலைகுணிவான்,
எங்கள் வசைமொழியால்;

கூத்தாடிமகனென குலுங்கிக் குலுங்கிச் சிரிப்போம்..
ஆத்தாடி நாங்க அவ்வளவு மோசம்;

எங்ககிட்டவன் எதுத்துப் பேசமாட்டான்,
ஏண்டான்னு கேட்டா அதுவும் சொல்லமாட்டான்,

ஆனாலுமவன் நல்லாப் படிப்பவன்;

இன்னிக்கோடு சேர்த்து,
ஆறுநாள் அவனைக் காணோம்...

எங்கடான்னு விசாரிச்சோம்;
என்னென்னமோ கேள்விபட்டோம்;

இனி ரங்கன் மகன்தான்..
ராக்கூத்து ஆடனுமாம்...!

அவனாட ஆட்டம்தான்,
இனி;
அவன் குடும்பத்தை காக்கனுமாம்...

சினிமா சின்னத்திரை;
சீரியஸா ஆனபின்னே,

சிந்திக்கவைக்கும் தெருக்கூத்தை,
சிலராச்சும் பார்கனுமே...

அம்மிக்கல்லு ஆட்டுக்கல்லு;
அதுபோல இனிமேலு;
தெருக்கூத்தும் ஆகிடுமே...

கண்காட்சி பொருள் போல,
காட்சிக்குத்தான் இருக்கும்....

இதை நம்பி பொழச்சவங்க….
இனி எங்கப்போவாங்க...

ரங்கன் மகனுக்கப்பறம்,
ராகூத்தை நான் பாக்கலை...
அதைத் தொடர ஆளில்லை..

என்னைப்போலின்று

எதுகையும் தெரியாமல்..

மோனையும் புரியாமல்..

சீர் வரிசை-யில் நிற்காமல்....

சந்தமும் இல்லாமல்

எழுத்து வரிசையிலும்;

இன்பம் இல்லாமல்...

எண்ணியபடி எழுதி...

மரபுகளை மறந்ததுபோல்...

தெருக்கூத்தும் போயாச்சி...
தெருவெல்லாம் அழுக்காச்சி...

உழைப்புகளை வெறுத்தாச்சி...
உழைப்பவர்களை தொலைச்சாச்சி...

சீ...சீ.....காட்சி
திரைக்கு வந்தாச்சி..

தெருகூத்து ஆட்டம்
கேவலம் என்றாச்சி....

பசிக்கானா ஆட்டம் போய்;
ருசிக்கான நோட்டம்; வந்து...

கண்ணைக் கெடுக்க காட்சி தந்து....
கெட்டுக்குட்டிச் சோறாச்சி...

ரங்கன் மகன் போல;

சொக்கன் மகனுக்கும்
சொல்லவேண்டியக் கதையுண்டு...

சொல்லும் நேரம் வரட்டும்
சொல்லிவிடுகிறேன்........

அதுவரை.............
ராக்கூத்து சாமிக்கு
ரங்கன் மகன் சார்ப்பில்
அவன் கலைக்கு
என்னால் முடிந்த அஞ்சலி.....


இப்படிக்கு தயாஜி

டிசம்பர் 03, 2010

"தங்கமீன்" என இணைய இதழில் இம்மாதம் எனது "நள்ளிரவு மணி பன்னிரெண்டு " என்ற சிறுகதையும் முதல் முதலாக நான் எழுதும் பேனாக்காரன் என்ற 'பத்தியும்' வெளிவந்துள்ளது. வாசித்தவர்கள் கருத்துகளைப் பதியுங்கள். விமர்சனம் படைப்புகளைச் செம்மைபடுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நன்றி.........


http://www.thangameen.com/contentdetails.aspx?tid=௧0௯
http://www.thangameen.com/contentdetails.aspx?tid=௧0௨

நவம்பர் 23, 2010

சுஜாதா என் மானசிக ஆசான்..


(மலேசிய நண்பன் நாளிதழில் 23.11.2010-ல் வெளிவந்த செய்திப்படம் இது)
"அப்படி இப்படின்னு விளம்பரம் செய்தாச்சி; இதுதான் படம்னும் புகழ்ந்தாச்சி; இதுவும் படமா..? (கெ)கேட்டாச்சி.... இப்போ ஏன் இந்தப் பதிவு.... அதன் பதிலுக்கு தொடர்ந்து சில நிமிடங்களில் படித்துத்துத்தெரிந்துக் கொள்ளுங்கள்; உங்கள் கருத்தினையும் பதியுங்கள்"


1.எந்திரன் படத்தில் எழுத்துகள் வரும்போது; கதை,திரைக்கதை, கடைசி சண்டைக் காட்சி ஷங்கர் என இருந்தது.


2.வசனம் எழுதியவர்கள் சுஜாதா, கார்க்கி, ஷங்கர் என இருந்தது.3. இது ஷங்கரின் பத்து ஆண்டுகால கனவுன்னு ஷங்கரே சொன்னாரு எப்போ சுஜாதா இறந்தப் பிறகு.


சுஜாதாவின் படைப்புகளை வாசித்தவர்களுக்கு அப்பட்டமாகத் தெரியும் இது சுஜாதாவின் கதை என்று; ஷங்கருக்கும் தெரியாமலில்லை. ஆனால் சுஜாதா உயிரோடு இல்லாதா ஒரே காரணத்துக்காக நடந்த "உழைப்புத் திருட்டு" என்ன தெரியுமா இது தனது 10 ஆண்டுகால கனவு என ஷங்கர் சொன்னதுதான்.


சுஜாதாவின்; சொர்க்கத்தீவு, பேசும் பொம்மைகள், மீண்டும் ஜீனோ, என் இனிய இயந்திரா, போன்ற நாவல்களையும் ,விஞ்ஞானக்கதைகள் (50 சிறுகதைகள் தொகுப்பு) ஆகிய புத்தகங்களைப் படித்தவர்களுக்கு தெரியும் எந்திரன் கதை யாருடைய உழைப்பு என்று.....

ஷங்கர் படம் எடுக்கும் முன்னரே விஞ்ஞானக் கதைகள் சொல்லி வாசகர்களை ஈர்த்தவர்தான் சுஜாதா.

படம் வெளிவந்த நாளிலிருந்து இது என் கதை....! இது என் கதை ... என் கனவு... என மார்தட்டி சுஜாதாவை வெறும் வசனகர்த்தாவாகவே சித்தரித்த பிரம்மாண்ட இயக்குனர் சங்கருக்கு வந்த நெருக்கடி என்ன தெரியுமே...?அமேரிக்க எழுத்தாளர் ஒருவர் இது தன் கதை என்றார். தமிழகத்தில் இரண்டு எழுத்தாளர்கள் இது தங்களின் கதை, என்று எந்திரன் படத்தின் தயாரிப்பாளர்க்கும் இயக்குனருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த எழுத்தாளர்களில் ஒருவர் 'அர்னிகா நாசர்' அவரின் படைப்புக்கும் வாசகன் நான். சுஜாதாவால் விஞ்ஞானக்க் கதை எழுத்தாளர் என அர்னிகா நாசர் ஒரு முறை குறிப்பிடப்பட்டிருக்கின்றார்.


நேற்று வரை தன் கதை என்றவர் சம்மன் வந்தப்பின் இது சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா' நாவலின் மையமாக வைத்து எழுதப்பட்டக் கதை என பல்டி அடித்திருப்பது சிரிப்பு வருகின்றது. மூலக்கதை சுஜாதாவின் புத்தகம் என தெரிந்தது எப்போது தனக்கு சம்மன் (ஆப்பு அல்லது ஆபத்து) வரும்போதுதானே...


சுஜாதாவின் கடைசி எழுத்து இந்த எந்திரன் படத்தின் திரைக்கதை என்பது எல்லோர்க்கும் தெரிந்ததே. ஷங்கரே சுஜாதாவின் மறைவில் சொன்னது என்னத் தெரியுமா...


"சுஜாதா இந்த திரைக்கதையை முடித்து கொடுத்துச் சொன்னார் இதுதானனென் கடைசி படமாக இருந்தாலும் நிம்மதி"


இப்படியெல்லாம் சுஜாதாவின் மறைவில் சொல்லி; எந்திரன் படத்தில் சுஜாதாவை பத்தோடு பதினொன்றாக காட்டியுள்ளது நியாயமா...?ஒருவெளை சம்மான் வராமல் இருந்திருந்தால் சங்கர் தன் திருவாய் திறந்து இப்படி சொல்லியிருப்பாரா என்பது கேள்விக்குறியே....பிரம்மாண்ட இயக்குனர் மீது எனக்கு ஒன்றும் கோவம் கிடையாது.


தன் சுயநத்திற்கு சுஜாதாவை மறந்ததுதான் என்னால்

(எல்லா சுஜாதாவின் வாசகர்களால்)

ஏற்றுக்கொள்ள முடியவில்லை... இதை நான் பதியவில்லையென்றால் சுஜாதாவை என் மானசீக ஆசான் எனச் சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை....

நவம்பர் 20, 2010

தீபாவளிப் பதிவுகள் 2010

புகைப்படம் என்பது கணங்களின் நிறுத்தம்;
நாள்களை நீலமாக்கும் மாயை.....
அதிலும் சந்திப்பு கணங்களைக் கற்சிலையாக்கினால்;
காலத்தால் அது பொக்கிஷம்.......
இந்த தீபாவளி;
என் பல கணங்களை நிறுத்திய ஒரு
பரவசத் தீபாவளி...
சந்தர்ப்பங்கள் எப்போதும் சரியாக அமையாததால்
சதியாக நானும் காமிராவோடு கைகுலுக்கினேன்....

( புகைப்படம் )


ஓவியக் கண்காட்சியில் ஓய்வெடுப்பதுபோல்,
தலைகவிழ்த்த, உயிரின் மூலமாம் விநாயகனோடு
முதல் கணநிறுத்தம்....
எனக்குள் இருக்கும் பல்வேறு குணங்கள்,
இவருள்,
பதிந்திருப்பது எனக்கே ஆச்சர்யம்......

(புகைப்படம் 2)

பிரம்மான்ந்த சரஸ்வதி சுவாமிகள்,
பாலமுருகன் கேசவன்...
நான்....
கடாரமண்ணின் தனித்தனியே ஒருவரையொருவார்,
அறிந்திருந்தாலும் முதன் முதலாக,
எங்கள் மூவரையும் இணைத்த பெறுமை
தலைநகரையே சேரும்...

(புகைப்படம் 3)

மின்னல் வானொலியில்,
‘கண்ணாடித் துண்டுகள்’ நிகழ்ச்சிக்காக....
யார் யாரையோச் சந்தபோது ஏற்படாத ஒன்று;
புலம் பெயர்ந்த நம் தம்பி தங்கைகளைச்;
சந்தித்ததும் கிடைத்து...
தோழி பொன்கோகிலத்தால் இது கிட்டியது......
இந்த கணத்தை நிறுத்தினேன்; இவர்கள்
மனநிம்மதிக்கு பிரார்த்திக்க.....

(புகைப்படம் 4)

என் அப்பாவின் நாடகத்தில்;
எப்போதும் நாயகன் இவர்...
நாடக நடிகர் கே.குணசேகரன்
அரிதாய் கிடைத்த வாய்ப்பொன்றின்
அவருக்கு மகனாய் நான்.....
இந்த கணத்தின் பதிவு...
அப்பாவிற்கு பரிசாக....

(புகைப்படம் 5)

53வது சுதந்திரப் பதிவு இது;
வானொலித் தலைவர் பார்த்தசாரதியின்;
கைவண்ணம்....
இவ்வகை மிக அரிது.....
(புகைப்படம் 6)

வானொலித் தலைவரோடு;
இந்த கணத்தை பதித்தேன்,
வானளவு வளர்ச்சியின் ஒத்திகைக்காக.....
இரு ராஜாக்கள் நெஞ்சிலும் ரோஜாக்கள்....

(புகைப்படம் 7)

உன்னோடு நானும்
என்னோடு நீயும்;
பயணிப்பது நாவல் அல்ல....
உங்களோடு நாங்களும்
எங்களோடு நீங்களும்
பயணிப்பது நாவல் அல்லாமலல்ல....
ஆறு அடி வாக்கியத்தை அரைமணி தாண்டி
விளக்கிய எழுத்தாளர் ஜெயமோகனின் சந்திப்பில்...
மீண்டும் நாம் சந்திப்போம்;
என்பதை நினைவுக்கூறும் பதிவு.....

(புகைப்படம் 8)

எப்போதும் என்னைக் கவரும்
பேச்சாளர்...
பர்வின் சுல்தானா....
பெண்கள் சளைத்தவர்களில்லை என்ற
மூச்சாளர்...
இவரின் இந்த கணப்பதிவு;
‘பேச்சு என்பது வெறும் பேச்சல்ல’
என்பதை அவ்வபோது எனக்கு நினைவுப்படுத்த....

(புகைப்படம் 9)

இது கணப்பதிவு இல்லை,
என் காத்திருப்பின் கனாப்பதிவு....
கற்பது நீச்சலென்றாலும்,
கடல்பயணம் எனக்கு மிக விருப்பம்..
இதுபோன்ற கவிப்பயணமும்
என் பழக்கம்...

(புகைப்படம் 10)

அத்தனைக்கும் முத்தாய்ப்பாய்,
இத்தனையோசனைக்கும் ராஜன்...
என் ஆசான்;
சுஜாதா என்கிற ரங்கராஜன்...
இவ்வாண்டு தீபாவளியின்
மிகச் சிறந்த பரிசு...
வாழும்போது வணங்கியிருக்க வேண்டியவரை
வாழ்வைத் தாண்டியப் பின் சந்திக்கின்றேன்....
கணங்களை நிறுத்தும் காமிரா...
காலத்தால் பேசப்படும்......
காலத்தையே பேசவைக்கும்;
பிரசுரிக்கப்படும் படைப்புகள்....
என்னது;
காலத்தாலும் பேசப்படும்;
காலத்தையும் பேசவைக்கும்;
நம்பிக்கையான தீபாவளி எனக்கு......

அக்டோபர் 20, 2010

நானும் மகான் அல்ல.....


எங்கள் திருமணம் ‘காதலாகி கல்யாணத்தில் முடிந்தது’. இந்த வாக்கியம் எல்லோர் வாழ்விலும் வந்து போகிற சாதாரண ஒன்றாக இருக்கலாம். ஆனால் எங்களை பொருத்தவரை இந்த வாக்கியத்தின் மூலத்தைக் கேட்டால்..... சொல்லச்சொல்ல இனிக்கக் கூடியது. பள்ளிப்பருவம்தான் அவளை எனக்கு அறிமுகம் செய்தது. காலையில் நிற்கும் வரிசையிலோ, உணவு உண்ணும் போதோ, திடலில் விளையாடும் போதோ ஒரு சராசரி சந்திப்பாக அல்லாமல் நான் கோவிலாக கருதும் பள்ளி நூல்நிலையத்தில்தான் எங்களின் சந்திப்பு அமைந்தது.

வழக்கம்போல் காலணியை கழட்டி அதை ஒரு மறைவிடம் தேடி வைத்து, காலுறை ஓட்டையை எப்படியோ மறைத்து நூல்நிலையம் புகுந்தேன். வழக்கம் போல் முதல் அடுக்கு புத்தகங்களை கடந்து மூன்றாவது அடுக்குக்குச் சென்றேன்.

அட்டைகள் கிழிந்த நிலையில் சில புத்தகங்களும் ,அட்டைகளே இல்லாத நிலையில் சில புத்தகங்களும் இருந்தன. அதில் கடந்தமுறை நான் படித்து மறைத்து வைத்த புத்தகம் ஒன்று பத்திரமாக இருந்தது, யார் கையும் படாமல். புத்தகத்தை எடுத்ததும் நான் மடித்த இடத்தை ஒரு முறை சரி பார்த்தேன். அப்பாடா நிம்மதி....

நாற்காலியில் அமர்ந்து படிக்கத்தொடங்கினேன். என் அருகில் அமர்ந்தாள் வகுப்புத் தோழி சித்தி பாத்திமா, அவளின் கைபேசியை என்னிடம் கொடுத்து வீட்டிற்கு பொகும் போது கொடுக்கச் சொன்னாள். அன்று வகுப்பில் திடிர் சோதனை நடக்கும் என அவளது தோழி கொடுத்த உடனடித் தகவலால் இந்த ஏற்பாடு. நானும் வாங்கி வைத்து கொண்டேன்.

இதை யாராவது கவனித்தார்களா என கண்களால் தேடினேன். மீண்டும் படிக்கத்தொடங்கிய போது என்னை அறியாமலேயே என் எதிரில் பார்த்தேன். தன் இடது கையால் காதோரத்தில் முடியைச் சொருகி, கண் சிமிட்டியபடி என்னை மின்னல் பார்வையில் பார்த்தாள். அதுதான் எங்கள் முதல் சந்திப்பு. ஆனால் அவளை இதற்கு முன் நான் பார்த்திருக்கின்றேன்.

எங்கே....?

இருங்கள் யோசிக்கிறேன்....

ம்.....ஆம் நினைவுக்கு வந்துவிட்டது. சில தினங்களுக்கு முன் இவளை எங்கள் தோட்டபுற கோவிலில் சந்தித்திருக்கிறேன், நிச்சயம் இவள்தான்.

முதலில் ‘புனிதக்கல்’ இருக்குமிடத்தில் சந்திப்பு அடுத்து ‘புத்தகச்சொல்’ இருக்கும் இடத்தில் மறு சந்திப்பு. அந்த மின்னல் பார்வை, காதோரம் சுருண்ட முடி, கூரான மூக்கு, ஊடுருவும் பார்வை.... இன்னும் எவ்வளவோ சொல்லலாம். இனி அதற்கெல்லாம் அவசியமில்லை. எங்கள் காதலுக்கு தூதாக இருந்தவர்கள் என் சக தோழிகள் ஆனந்தியும்
சிவனேஸ்வரியும்.

இவர்கள்தான் என்னை பற்றிய உயர்ரக கருத்துகள் சொல்லி அவளை என்பால் ஈர்க்கவைத்தார்கள். அதாவது வகுப்பில் என்னைப்பார்த்துதான் இவர்கள் பரிட்ச்சை எழுதுவார்களாம், ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு நான்தான் முதலில் பதில் சொல்வேனாம்....அடக் கடவுளே என் கதை எனக்குத்தானே தெரியும்...!

அதைவிடுங்க எப்படியோ காதலுக்கு பிள்ளையார்சுழி போட்டாகிவிட்டது. எங்கள் காதலை வீட்டில் சொல்லவும் பெருதாக ஒன்றும் கஷ்டமில்லை. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு நாங்கள் பல இடங்களுக்குச் செல்ல, அதைப் பார்த்தவர் எங்கள் இரு வீட்டாருக்கும் சொல்ல, கல்யாணப் பேச்சு தொடங்கியது மெல்ல.. எங்களின் ,அந்த ஆர்ப்பாட்டம் இல்லாத ஆரம்பத்தின் முடிவை நாங்கள் யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. ஏன் நீங்கள் கூட எதிர்ப்பர்த்திருக்கமாட்டீர்கள்.

‘செம்மொழியான தமிழ் மொழியாம்....’

கொஞ்சம் பொருங்கள் என் கைபேசியை கவனித்து, என் கதையைத் தொடர்கின்றேன்.

“வணக்கம், சொல்லு தேவி”

“வணக்கம், மணி எங்கடா இருக்கே...?”

“கே.எல்-லதான் இருக்கேன்”

“ஓ...ஏதும் வேலையா இருக்கியா...? இல்லைனா... கொஞ்சம் பேசனும்..”

“ம்.... எங்க அம்மா ஏதும் சொன்னாங்கலா...?”

“இல்ல.... நான் தான் பேசினேன்.. அவங்க சொல்றதும் நியாயமாதான் படுது..”

“அப்படியா.. உங்க வீட்டுக்காரர் கணேஷ் என்ன சொன்னாரு...”

“அவருக்கும் விருப்பம்தான், இங்க எல்லாம் தயார்தான்...நீதான்; அம்மாகிட்ட முடியாதுன்னு சொல்லிட்டியாம்...அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க...உன் வாழ்க்கை நல்லா இருக்கனும்னுதானே அம்மாவும் சரி நாங்களும் சரி....கேட்கறோம் இப்படி நீ மறுத்தா எப்படிடா...”

“அதுக்காக...... ‘சுஜாதா’ இருந்து இடத்துக்கு இன்னொருத்தியை நான் கொண்டுவருனும்னு சொல்றியா....அம்மாதான் அப்படின்னா...நீயுமா என்கிட்ட இதைக் கேக்கற.... உனக்கு தெரியும்தானே சுஜாதாவும் நானும் வாழ்ந்த வாழ்க்கை...அந்த...அந்த...இடத்தை யராலயும் ஈடு செய்யமுடியாது தேவி..”

“தெரிஞ்சிதாண்டா நாங்க கேக்கறோம்.... சுஜாதா-க்கு ஈடு யாரும் இல்லைதான். ஆனால் உனக்கு என்னடா வயசு இப்பதானே 28. இன்னும் எவ்வளவு காலம்டா நீ தனியா வாழ்வ...சொல்லு”

“தேவி, நாளைக்கே சாவுன்னாகூட எனக்கு சந்தோசம்தான்”

“வாயை மூடுடா...அப்படியெல்லாம் நீ நெனைச்சோ இல்ல நான் நெனைச்சோ சாவு யாருக்கும் வந்திடாது. வாழ்க்கை வாழ்றதுக்குதான்... கணேஷ் தங்கச்சிகிட்ட உன்னை பத்தி எல்லாம் சொல்லிட்டோம். அந்த பொண்ணுக்கு சம்மதம். எங்களுக்கும் உங்க அம்மாக்கும் சம்மதம் உன் வருங்காலத்தை நெனைச்சிப்பாருடா..”

“அது சின்ன பொண்ணுடா....அதுக்கு இதெல்லாம் புரியாது. அந்த பொண்ணை முதல்ல மேற்படிப்பு படிக்கச்சொல்லு.....”

“சரிடா அதைவிடு..ஒன்னு சொன்னா கோவிச்சிக்கமாட்டியே..”

“என்ன கேட்ப...காயத்ரி பத்திதானே..”

“ம்..அதையாச்சும் கல்யாணம் செய்துக்கடா.... நீயும் ஆசைபட்ட பொண்ணுதானே அது..”

“தேவி...சுஜாதா இருக்கும் போது; நான் காயத்ரி மேல ஆசைபட்டது என்னமோ உண்மைதான். அது என்னையே அறியாம நான் செய்த தப்பு. அதுக்காக ரொம்ப அவமானப்பட்டாச்சி, அசிங்கப்பட்டாசி அதுக்கப்பறம் சுஜாதாதான் எனக்கு எல்லாம்னு முடிவெடுத்து வாழ ஆரம்ப்பிச்சபிறகு மறுபடியும் காயத்ரியைப் பத்தி பேசறது நல்லாவா இருக்கு....? ”

“சரிதான் மணி. ஆனால் இதெல்லாம் சுஜாதா இருக்கும் போதுதான் சாத்தியம். இப்போ நிலைமை வேறடா.. சுஜாதா இப்போ இல்லை அதை நீ முதலின் புரிஞ்சிக்கோடா மணி....”

“சரி தேவி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு......”(முடிப்பதற்குள்)

“தெரியும். இப்படி சொல்லுவன்னு. எங்கடா இன்னும் சொல்லலையேன்னு பார்த்தேன் பெரிய வேலையாம் வேலை...சுஜாதா எழுதன எதாவது புத்தகத்தை எடுத்து படிச்சிகிட்டு உன்னோட சுஜாதா போட்டோகிட்ட பேசற வேலைதானே. ”

“(சிரிக்கிறேன்)”

“இந்த நிலையிலும் சிரிக்கிறது உன்னால மட்டும்தான் முடியும். அடுத்த வாரம் நானும் உங்க அம்மாவும் உன்னை பாக்க வரோம். Bye.”

“சரி, அதுவரைக்கும் நான் இருக்கனான்னுப் பார்க்கலாம்.”

“அறை வாங்க போற.....போனை வை.”


அவள் தேவி, என் பால்ய வயது தொல்லைகளில் இரண்டாவது, முதல் தொல்லை புத்தகம் படிப்பது (இந்த தொல்லை மற்றவர் பார்வைக்கு).இரண்டையும் என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. சரி நான் தொடக்கத்தில் விட்ட கதையிருந்து சொல்றேன்....

சுஜாதா. நான் ரசித்து ரசித்து படிக்கும் எழுத்தாளரின் பெயர் மட்டுமல்ல; நான் துரத்தி துரத்தி காதலித்து கைபிடித்தவளின் பெயரும்தான். தொடக்கத்திலிருந்து என் தனிமையை புத்தகங்களோடு கழித்த நான்; இவளின் வருகையால் தனியை இருவருமாய் கொண்டாடினோம். அந்த கொண்டாட்டம் நீடிக்கவில்லை. நானும் அதற்கு ஒருவையில் காரணம் என்பதை ஒப்புக்கொள்கின்றேன்.

அவளின் ‘கடவுள் நம்பிக்கையும்’ என் ‘ஆங்கில அறிவும்’ பலமுறை எங்களின் படுக்கையைப் பிரித்தது. இன்று ஒட்டுமொத்தமாய் சுஜாதா என்னைவிட்டு போய்விட்டாள். அவள் இருக்கும்போது வேண்டுமானால் நான் அவளுக்கு துரோகம் செய்திருக்கலாம். இன்று அதற்கு என் மனம் இடம் தரவில்லை....

என் மனம் முழுவது அவள்தான் சஞ்ஜாரம் செய்கிறாள்.


ஆனால்....


ஆனால்......


நேற்றுதான் மீண்டும் சில ஆணுறைகளை வாங்கியுள்ளேன். என்னை பொறுத்த வரையில் எனது மனமும் எனது உடலும் வேறுவேறுதான்.

செப்டம்பர் 01, 2010

படித்ததைப் பகிர்கின்றேன் 2


புத்தகம் என்பது என்ன..?

வெறும் அச்சுக்கோர்வை,

வெள்ளைத்தாள்களின் கூட்டணி,

அறிவுப்பெட்டகம்,

மறைமுக விளம்பர யுக்தி,

...............

.............

.........

.....



இப்படி அடிக்கிக்கொண்டு போவதில் விருப்பமில்லாமல் சொல்லிவிடுகின்றேன். புத்தகம் என்பது ஒரு கடத்தல்காரன்/கடத்தல்காரி. புத்தகத்தில் நீங்கள் மூழ்கும் நேரம் உங்களையறியாமல் உங்கள் மனம்; அச்சடிக்கப்படிருக்கும் வார்த்தைகள் மீது பயணித்துக் கொண்டிருக்கும். அந்த பயணம் கடத்தலாக மாறி உங்கள் இருக்கும் இடம் விட்டு, வேறு இடம், வேறு உலகம், ஏன் வேறு யுகம் வரை உங்களை கடத்திச் செல்லும்.



அந்த கடத்தலால் அடிக்கடி வேவ்வேறு வகையில் ,பல்வேறு முறையிலும் நான் பயணிக்கின்றேன். இந்த முறை அண்ணன் நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவன்.

(குறிப்பு , நா.மு-வின் பால காண்டம் கட்டுரை தொகுப்பை படித்ததும் நான் செய்த முதல் வேலை அவருக்கு தம்பியாக என்னை தத்துக் கொடுத்தது)


"பட்டாம்பூச்சி விற்பவன்" புகழ்பெற்ற ஒரு பாடலாசியரின் புத்தகத்தைப் பற்றி இவன் என்ன சொல்லப் போகின்றான்..?? இப்படி உங்களில் எந்த ஒரு தேர்ந்த அறிவாளியும் கொடி பிடிக்கத் தொடங்கினால் ஒரு வேண்டுகோல் எனக்கும் உங்கள் முன்வரிசையில் இடம் கொடுங்கள். நான் யார் கவிதை தொகுப்பைப் பற்றி கட்டுரை எழுத.....!!


கவனிக்க இது ஒன்றும் கவிதை பற்றியக் கட்டுரை அல்ல. இதன் வாசிப்பால் கடத்தப்பட்டு, அந்த கடத்தலால் பயணிக்கப்பட்டு அதன் தாக்கங்களை மனதால் சுமக்கும் சராசரி வாசகன் என்ற முறையில் என்னை பாதித்ததை பதிவு போட எனக்கு உரிமை இருக்கின்றது.


இனி சொந்த கதை வேண்டாம்.


பாலுமகேந்திரா, பாரதிராஜா, அறிவுமதி வாழ்த்துகளுடனும் 'புத்தகம் வெளியிட முடியாமல் தவிக்கும் சக கவிஞர்களுக்கு சமர்ப்பணம்' என்ற தொடக்கத்திலும் ஆரம்பமாகின்றது இந்த பயணம்.


‘ தூர்’ என்ற தலைப்பில் தன் வீட்டுக்கிணற்றில் தூரெடுத்து தூய்மைப்படுத்திய அப்பா, அம்மாவின் மனதில் இருப்பதை அறியாமலிருப்பதை சொனல்லி கடத்தல் முயற்சியை ஆரம்பிக்கின்றர். பூக்களை ரசிப்பது ஒரு கலை;அதை செடியில் இருந்து ரசிப்பது பெரும்கலை. இந்த கருத்தினை முன்னிருத்தி ‘பூ நுகரும் காலம்’’ -தில் பூக்களை நேசிப்பவனை பூக்களுக்கு பிடித்திருக்கின்றது இப்படியாகத் தொடங்கும் வாக்கியம் இப்படி முடிகின்றது; ‘பூக்களுக்கும் அவனை ரொம்ப பிடிக்கும், விரல்களால் உயிர் பறித்து அவன் நுகர்வதற்கு முந்தைய காலம் வரை’
‘சுண்டுவிரல் தாத்தாக்கள்’ –லில் இப்படி ஒரு வாக்கியம் வருகின்றது. “வாத்துகள் விட்டுச்சென்ற நட்சத்திரக் கால் பதிவை அழிக்காமல் தொடர்வோம்….” நீங்கள் வாத்துகள் பின்னால் நடந்த அனுபவம் உள்ளவரென்றால் நிச்சயம் நீங்கள் யோசிப்பீர்கள் இத்தனை நாளாய் வாத்துகளை பின் தொடர்ந்தோமே தவிர, அவை விட்டுச்சென்ற நட்சத்திர பதிவை கவனிக்க மறந்தோமே..

“டென்த் ஏ காயத்ரிக்கு” . இவரின் பால்ய சினேகதி !. இந்த பெயர் இவரின் “அ’னா ஆ’வன்னா” கவிதை தொகுப்பிலும் இடம்பெறும். பள்ளிப்பருவத்தில் தன்னை ஈர்த்த ஒருத்தி வளர்ந்து, மாற்றான் வீட்டில் வாடுகிறாள். இதை சொன்னவர் இப்படி முடிக்கின்றார், ‘காயத்ரி எங்கே இருக்கா மாப்ள..?’ என் பதில் “பத்து வருடத்துக்கு முந்தைய டென்த் ஏ கிளாஸ் ரூம்ல”. இவர் வரையில் இவரை ஈர்ந்த அந்த பெண் அப்படியேத்தான் இருக்கின்றாள். எனக்கும் ஒருத்தி இருக்கின்றாள். என் 8 வயது குட்டி தேவதை அவள். இப்போது வளர்ந்து விரைவில் திருமணம் செய்விருக்கின்றாள். 8 வயதில் அவள் சொன்ன தேவதைகள் கதைதான் , கதைகேட்கும் ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியது. இன்னும் கூட அவள் வளந்துவிட்டால் என்பதை என்னால் நம்ம முடியவில்லை. மன்னித்து விடு குட்டி தேவதையே.. நாளை உனக்கே ஒரு தேவதை பிறந்தாலும்.. சத்தியமாய் நீ, அப்போதும் இவனுக்கு குட்டி தேவதைதான். நன்றி நா.மு-வின் காயத்ரிக்கும் எனது கோமதிக்கும்.

‘அப்பாவின் உலகம்’ என் அப்பாவில் DNA இங்கிருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்க வைத்தை கவிதை. தன் தந்தையின் புத்தக ஆர்வத்தை சொல்லிக்காட்டியவர் நிறைவு வரிகளில் தனக்கான பயத்தை பதிகின்றார் இப்படி, “ஒரு மூட்டை புத்தகம் கிடைத்தால் என்னையும் விற்றுவிடுவார்” இப்படி சொல்லக்கூடிய தகுதி என் தந்தைக்கும் இருக்கின்றது. நாளை என்னை தந்தையாக்கும் பிள்ளைக்கும் இருக்கும். நீங்கள் எப்படி….?

இன்னமும் பல கவிதைகள் நமக்கு கேள்வியாகவும் நமது மனதின் பதிலாகவும் இவர் பேனா படைத்திருக்கின்றது. புத்தகத்தின் நிறைவாக இவர் சொல்லியிருக்கும் ஹைக்கூ பற்றி சொல்லவேண்டுமெனில் பக்கங்கள் போதாது. இருந்தும் சிலவற்றை பகிர்கின்றேன்.

'பொருட்படுத்தா மனிதர்களை
நாற்றத்தால் அரைந்தது
குடல் சரிந்த நாய்’‘

இறந்த நாயைக் கண்டும் கண்டுக்கொள்ளாமல் செல்லும் பொருப்பற்றவர்களை இந்த வரிகள் அரையும், நாயின் நாற்றத்தைப் போல.

’பன்றிகளின்
காய்ந்த கழிவுகளில்
தக்காளிச் செடிகள்’’


தொடக்கத்தில் இதை எழுத எனக்கு தகுதி உண்டா…? யார் இவன்..? போன்ற கேள்விகள் இன்னமும் உங்கள் மனதில் இருக்குமென்றால் அண்ணன் நா.மு-வின் இந்த சவுக்கடி உங்களுக்குத்தான் சொந்தம்.

இறுதியாக அண்ணன் சொல்லும் “ஒப்புதல் வாக்குமூலம்”

நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கான
மூன்று குறிப்புகள்.
ஒன்று
நான் கவிதை எழுதுகின்றேன்;
இரண்டு
அதை கிழிக்காமல் இருக்கின்றேன்:
மூன்று
உங்களிடம் படிக்கச் சொல்கின்றேன்…’’

இவர் சொல்வதை பார்த்தால் நானும் நல்லவனில்லை என்பதற்கு நான்காவது காரணம். படித்த கவிதையை உங்களோடு பகின்ர்கின்றேன் நீங்களும் வாங்கிப் படித்து கருத்தை பகிரும் நோக்கத்தில்.

இதனுடன் விடைபெறுகின்றேன்

அடுத்த புத்தகத்தில் சந்திப்போம்
நன்றி,
தயாஜி






ஆகஸ்ட் 30, 2010

படித்ததைப் பகிர்கின்றேன்


என்னை கவர்ந்த படைப்பாளர்களில் ஒருவரான பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய புத்தகங்களை சமீபத்தில் வாங்கினேன். பட்டாம்பூச்சி விறபவன், கண் பேசும் வார்த்தைகள், பாலகாண்டம் என்று முறையே கவிதைகள், பாடல் பிறந்த கதை, கட்டுரைகள் தொகுப்பு . தற்போது படித்து முடித்தது 'பால காண்டம்' எனும் கட்டுரை நூல். குங்குமம் வார இதழில் இவர் எழுதிய இவரின் பால்ய வயது அனுபவம்தான் இந்தக் கட்டுரையின் சாரம்.

பால்யம் என்பது தனக்கு ஏற்படுத்திய பாதிப்புகளையும் தனக்கு விடை கிடைக்காத கேள்விகளையும் நம்மோடு பகிர்கின்றார் நா..முத்துக்குமார் சினிமா பாடல்கள் மூலமும், கவிதை தொகுப்புகளின் மூலமும் என்னைக் கவர்ந்தவர் இந்த கட்டுரைத் தொகுப்பிலும் வழக்கம் போல் கவர்கின்றார்.

இவரின் சொல்விளையாட்டு (சொல் நயம்) இவரின் கட்டுரை தலைப்புகளில் தெரிகின்றது. இளமை நினைவுகளி மாய சிலேட்டுப்பலகை என்றும் சாலைக் குழிகளை, நிலா மிதக்கும் பள்ளம் என்றும் வர்ணிக்கின்றார்.

அதிலும் அக்காவை இரண்டாம் தொப்புள் கொடி என்று தனக்கு இல்லாத அக்காவால் தனக்கு அக்காக்களான தோழர்களில் அக்காக்களைப் பற்றிக் கூறுகின்றார். இவரின் பால்ய நண்பன் கேசவனைச் சொல்லும் போது, எனது பால்ய நண்பன் கேசவனை நினைக்கமுடிகின்றது.

காலம் எழுதும் கடிதம் என்ற தலைப்பில் இவர் கடிதத்தூது சென்ற காதல் கடிதம் பற்றி சொல்லி இப்போது அந்த காதலர்களை சொல்லும் போழுதினில் நம் முன்னும் சிலரைக் காணமுடிகின்றது.

கடவுளைக் கண்ட இடங்களில் என்ற தலைப்பில் இவரின் எழுத்து நடை இப்படி வருகின்றது........

"சில சமயம் விளையாட நண்பர்கள் இல்லாத நேரங்களில் என் பொழுதுபோக்கு எறும்புகளைக் கொல்வதாய் இருந்தது, ஒரு பேரரசன் போல என்னை உருவக்கித்துக் கொண்டு சுவற்றில் ஊறும் எறும்புகளை என் கோட்டைக்கு வருகிறாயா..? என்ன செய்கிறேன் பார் உன்னை...? என்று கர்ஜித்தப்படி ஒவ்வொன்றாக பிடித்து தரையோடு தேய்த்து கொன்றுவிடுவேன் " இதை படிக்கும் போது என் கண்முன் ஒரு காட்சி ஒலி/ளி-யேறியது. அதில் நான் எங்கள் வீட்டின் பின் புறத்தில் அமர்ந்து எறும்பு புத்தை கலைத்து அதிலிருந்து பெரிய உருவம் கொண்ட எறும்புகளைத் தேடிப்பிடித்து கொல்கின்றேன். அம்மா; இது பற்றி அப்பாவிடம் புகார் சொல்லும் போது , அப்பா வெகு சாதாரணமாய் நானும் அப்படித்தான் என்கிறார்..........

நாய் வளர்த்ததையும் நா.மு. இப்படி சொல்கின்றார். புலி வளர்க்க காடும்,காசும் இல்லாததால் நாங்கள் நாய் வளர்த்தோம். அதற்கு டைகர் என்றே பெயரிட்டோம். இந்த வரியில் நான் கொஞ்சம் சத்தமாகத்தான் சிரித்தேன்.

மொத்தம் பதினைந்து தலைப்புகளில் தனது பால்ய காலத்திற்கு நம்மை அழைத்து சென்ற நா.மு. அதன் கடைசி அத்தியாயத்தில் இப்படி சொல்கின்றார், ஒரு சம்பவத்தை மேற்கோள்காட்டி;

"ஒரே சம்பவம் பால்யத்தில் இரண்டு வெவ்வேறு விதமாக பதிவாகின்றது. பாலகாண்டம் ஒரு நதியைப் போன்றது. தண்ணீர் வற்றிவிட்டாலும் மணலுக்கடியில் நதி ஓடிக்கொண்டிருக்கின்றது"


இந்த புத்தகம் என் பாலகாண்ட பயணத்திற்கு பாதை கொடுத்துள்ளது. நீங்களும் படித்துப்பாருங்கள் என்று சொல்லமாட்டேன். நீங்களும்படித்து உங்கள் பாலகாண்ட பாய சிலேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பதிவுகளை நினைவுக்கூறுங்கள்.

நன்றி

வணக்கம்.

அடுத்த புத்தகத்தில் சந்திப்போம்,


இப்படிக்கு தயாஜி

ஆகஸ்ட் 14, 2010

புத்தகக்காதலிகள்....


கொஞ்ச இடைவேளைக்கு பிறகு "காத்திருந்து" வாங்கிய புத்தகங்கள் இவை.

# சிவமயம் பாகம் இரண்டு

- என் அபிமான எழுத்தாளர் இந்திராசௌந்திரராஜன் எழுதிய புத்தகம் இது. சில ஆண்டுகளுக்கு முன் இந்த முதல் பாகம் படித்து மிகவும் அதிசயித்தேன்.அதன் பின் இதன் இரண்டாம் பாகம் இருப்பத்தை சமீபத்தில்தான் இணையம்வழி தெரிந்துக் கொண்டேன்.இப்போது வாங்கியும்விட்டேன்.சிவமும் சித்தர்களும் செய்யும் விளையாட்டில் மனிதர்களின் பங்களிப்பு குறித்து தனக்கே உரிய எழுத்தாளுமையில் சொல்லியிருப்பார் இந்திரா சௌந்திரராஜன்.


# ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதிங்க


- இந்த தலைப்பால் ஈர்க்கப்பட்டு கையில் எடுத்தேன் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி . இதன் எழுத்தாளர் கோபிநாத். விஜய் தொலைக்காட்டி தொகுப்பாளர். இவரின் 'நீயும் நானும்' எனும் ஆனந்த விகடன் இதழ் தொடரின் தீவிர வாசகன் நான்.


#அம்பலம்


-நம்ப தலைவர் சுஜாதா வழிநடத்திய இணைய இதழின் தொகுப்பு இந்த நூல். இணையத்தில் தவறவிட்ட நான் இப்போது வாங்கிவிட்டேன். கடைக்காரர் ஒவ்வொரு சுஜாதாவின் புத்தகத்தை காட்டும்பொழுதும் "வாங்கிட்டேன்".."வாங்கிட்டேன்" எனும் என் பதிலுக்கு அவர் "அப்போ இந்தா நீங்களேத் தேடிக்கோங்க.." என்று தந்த ஆசிவாதத்தால் கிடைத்த புத்தகம் இது.


# பட்டாம்பூச்சி (பரிசு பெற்ற கவிதைகள்)

# பாலகாண்டம் (கட்டுரைகள்)

# கண்பேசும் வார்த்தைகள் (பாடல் பிறந்த கதை)


இவை மூன்றும் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். பாடல்களின் வரிகள் மூலம் என்னைக் கவர்ந்த இவர் இதிலும் கவர்வார் என்பதில் ஐயமில்லை.


# பூமிப்பந்தின் புதிர்கள்


- எழுத்து க.பொன்முடி. நமது பூமியில்..! ஆங்காங்கே நடக்கும், இருக்கும் அதிசயம் , ஆச்சர்யம் குறித்து சொல்லும் புத்த்கம் இது. நான் எழுதும் கதைகளில் வரும் அமானுஷ்யங்களுக்கும், ஆச்சர்யங்களுக்கும் இவ்வகை புத்தகங்கள் உதவும். என கதையில். கதையையும் தாண்டி ஏதோ தகவல்கள் இருப்பதாக படித்தவர்கள் சொல்கின்றார்கள்.


# உனக்குள் இருக்கும் வைரத்தை கண்டுபிடி


-இதன் படைப்பாளர் அரிந்தம் சவுத்ரி. வாழ்வில் போராடவும் தொடர் வெற்றிக்கும் தேவையான ஒன்பது குணங்களைச் சொல்லும் நூல். இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த புத்தகங்களை ஒரே கோட்டில் வைக்க முடியாது. அதே போல்தான் என் வாசிப்பையும் என்னால் வகைப்படுத்த இயலவில்லை.சில புத்தகங்கள் என் கொள்கைக்கு முரணானவை சில புத்தகங்கள் என்னையே எனக்கு வேறாகக்காட்டுது.. எது எப்படியோ நான் தேடி வாங்கிய புத்தகங்களைவிட என்னை தேடிய புத்தகங்கள்தான் அதிகம். எதற்கும் ஒரு காரணம் உண்டு என்ற என் சிந்தாந்தத்தை நோக்கியே என் தேடலை வைக்கின்றேன் இப்போதும்.

விரைவில் இந்த புத்தகங்களை வாசித்து நேசித்து... வழக்கம்போல் உங்களோடு பகிர்கின்றேன். நன்றி


தயாஜி

ஆகஸ்ட் 13, 2010

தமிழன்.....

தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
தாய்க்கு மகனாய் பிறந்தவன் தமிழ்........
தாய்க்கு தன் உயிர் கொடுப்பவன்....
மொழியே இல்லா பொழுதினின் இலக்கணம் வளர்த்தவன்,
தொல்காப்பியன்...
எழுத்தாய் இருந்த இலக்கணத்தை ஈரடியாக்கி.....
நேரடிச் சொன்னான் திருவள்ளுவன்...
உலகப் பொதுமுறை..
திருக்குறள் உண்மையின் விதை....
ஈரடி விதைதான் காவியமானது இளங்கோவடிதான்,
மீண்டும் புதுமைப் படைத்தது...
ராஜராஜாக்கள் ஆண்ட காவிய உலகை....
குடியானவன் ஆண்டான்...
அவன் கோவலன் ஆவான்....
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
சிலம்பும் செய்தான்..
பெண்ணின் உரிமை சொன்னான்...
விஞ்ஞானம் பிறக்காத போதே...
மெஞ்ஞானம் பெற்றான்...
அண்டம் என்றான்..
பிண்டம் என்றான்...
ஆணும் பெண்னும் ஆதிசிவன் என்றான்...
ஆணுக்கு பெண்ணும்..
பெண்ணுக்கு ஆணும்..
சரிசமம் செய்தான்.. ஏறாத போதே....
இளனியின் தண்ணி கண்டான்...
கிரகம் ஒன்பது என்றான்....
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
தேய்பிறை குறித்தான்...
பேய் மழைத் தடுத்தான்...
காடுகள் காத்தான்..
மரங்களை மதித்தான்....
உண்மையை சொன்னான் அதை.....
உறுதியால் வென்றான்....
எமனையும் எதிர்த்தான்..
பரம் பொருளையும் துதித்தான்....
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
இப்படி,
இப்படியாய் ..
இமயம் தொட்டவன்....
இருக்கும் நிலையைச் சொல்லவோ...
நம் இதயம் அதனைத் தாங்குமோ......
பொக்கிஷம் பல பார்த்தவன் இன்று..
பொருளுக்கு வழியின்றி தவிக்கிறான்...
பொருமையும் இன்றி திரிகிறான்...
பிறர் பார்த்தால் கூட,
ரத்தம் கொதிக்கிறான்...
அடுத்தவன் ரத்தம் வர ரசிக்கிறான்...
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
இப்படி,
இப்படியாய் ..
இமயம் தொட்டவன்....
இருக்கும் நிலையைச் சொல்லவோ...
நம் இதயம் அதனைத் தாங்குமோ......
இயலாமையிக்கு அடிமைதான்...
காரணம்,....
முயலாமை என்பதை மறந்திட்டான்....
எங்கே செல்கின்றோம் மறந்திட்டான்...
உயிரை மதியாது மறிக்கிறார்....
இன்னும் இருக்குது...
இருந்தும் என் கண்ணீர் தடுக்குது...
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
இப்படி,
இப்படியாய் ..
இமயம் தொட்டவன்....
இருக்கும் நிலையைச் சொல்லவோ...
நம் இதயம் அதனைத் தாங்குமோ......
இந்த நிலமை மாறனும்..
இனிதே விரைவில் நடக்கனும்...
அசைக்க முடியாதிருக்கனும்....
ஆண்டவெனும் தமிழனை மதிக்கனும்....
மீண்டும் இமயம் தொட்டிட......
தமிழனின் பயணம் தொடரனும்....
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
...........தயாஜி..........

ஜூலை 28, 2010

மரணம் நெருங்கியவனின் மன்றாடல்...













"மரணம் வந்தால் என் செய்வீர்..?"





"மரிப்பேன்.. வேறென்ன செய்ய..!"


இந்த கேள்வி பதிலோடு இனி;
பயணிக்க இயலாது...
மனம் திறந்த வாக்குமூலம் கொடுக்கின்றேன்,
நிறைவேற்றுங்கள்....
கடைசி ஆசை...

இதுவரை நான் சேமித்த;
பணத்தின் எண்ணிக்கை காட்டிலும்;
புத்தகங்கள்தான் அதிகம்.....
எனது படைப்பிற்காகவும்;

அவளிடம் படித்துக் காட்டவும்....

என்;
இறுதிச் சடங்கில் அவள் இருக்கமாட்டாள்,

அவள்.

இறுதி எனக்கில்லை என்பதை இன்னமும் நம்புகின்றாள்;

பாவம்....

'என்' பிறகு என் புத்தகங்களை

அவளிடம் கொடுத்துவிடுங்கள்,

என் மனைவியை விடவும்

அதனை அவள்;

அதிகம் நேசிப்பாள்;

நான் இல்லாத போதும்;

என் புத்தகங்கள் அவளோடு,

சண்டையிடும்;

சமரசம் செய்யும்;

கட்டிலில் படுக்கும்;

கட்டிப் பிடிக்கும்;

கோவம் கொடுக்கும்;

ஜோக்கும் அடிக்கும்;

அதிலும் நான் கோடிட்ட இடங்கள்.....

அவளை என்னோடு ;

பேசவைக்கும்

காதோரம் கூச வைக்கும்;

கவிபாட ஆசை வைக்கும்'

உடலோடு உரசவைக்கும்;
வார்த்தைகளால் அசரவைக்கும்;

இன்னும் இன்னும் எல்லாம் செய்யும்.,


என் துரோகம் உட்பட........

அப்போதும்,

எனக்காக எதையாவது செய்வாள்;

என் மனைவி மீது கோவம் கொள்வாள்....

அதும் என்னை புரியாமல் இருக்கின்றாளே எனதான்;

அவள் யார்..?

எல்லோர் வாழ்விலும் வந்து போகின்ற;
பெயர் குறிப்பிட தெரியாத;
பெயர் குறிப்பிட முடியாத;.........

அப்பாவி பெண்..!
இருக்கும் போது சொல்ல வக்கில்லாதவன்.....
இறுதி சடங்கிற்கு;
முன்னதாக சொல்வதில் கொஞ்சம் நிம்மதி;
மறவாமல் அவளிடம் புத்தகங்களைக் கொடுத்துவிடுங்கள்...












இப்படிக்கு தயாஜி

ஜூலை 01, 2010

ரசித்தவை 1

படைப்புலக பெண்பாரதியும்,, என்வரையில் முன்மாதிரியும் ஆகிய என்னவள் "கவிஞர் தாமரையின்" கவிதை இது.
'ஆண்கள் அறிக' என்ற தலைப்பில் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த படைப்பு. (30062010)
இதை படிக்கும் போதே நான் செய்த தவறுகளையும், செய்யக்கூடாத தவறுகளையும் புரிந்துக் கொண்டேன். இதன் கடைசி நான்கு வாக்கியம் என்னுள், என் எண்ணத்துள்.... ஊசியை துளைத்தது.
'நன்றி கவிதாயினி தாமரை'
இப்படிக்கு தயாஜி.....

ஜூன் 26, 2010





காது;
உங்களுக்காக கேட்கின்றது,

மூக்கு;
உங்களுக்காக சுவாசிக்கின்றது,

நாக்கு;
உங்களுக்காக ருசிக்கின்றது,

வாய்;
உங்களுக்காக பேசுகின்றது,

கண்.......
உங்களுக்காகவும் பார்க்கும்....

ஒருவர் செய்யும் கண்தானம் இருவர்க்கேனும் பார்வை கொடுக்கும், கண்தானம் செய்ய கைகோர்ப்போம் வாரீர்.......

'மன'யொப்பம்....


1.8.2007-லில் நயனம் வார இதழிலில் வெளிவந்த கவிதை இது. அப்போது எனக்கு வயது 20. இந்த கவிதையில் என் "பெயரை" டைப் செய்யாமல் என் கையெழுத்திலேயே அதனைப் பிரசுரம் செய்தார் இதன் ஆசிரியர். அவருக்கு என் நன்றி.படிட்யுங்கள் கருத்து பறிமாறுங்கள், விரைவில் புத்தகம் வெளியிட எண்ணம் கொண்ட எனக்கு உதவியாக இருக்கும்....
இப்படிக்கு தயாஜி....

விழிமொழியுடையாள்.....


24/10/2007-ல் நயனம் வார இதழில் வெளிவந்த என் படைப்பு.....
படித்து கருத்து பறிமாறலாம் வாருங்கள் உள்ளங்களே...
விரைவில் நூல் வெளியிட எனக்கு உங்கள் கருத்து தேவை.......
இப்படிக்கு,
தயாஜி........

ஹெலோ சொல்லேன் pls....


எனது இந்த கவிதை, 1.7.2010 மன்னன் மாத இதழில் வந்துள்ளது. என் படைப்புத்திறனுக்கு பிள்ளையார்சுழி போட்டது இந்த மாத இதழ்தான்...
இந்த கவிதை புரியவில்லை என்று என் நண்பர் ரொம்ப மனசு ஒடிஞ்சி போய்ட்டார்....
பாவம் கவிதை என்பது பாடமல்ல அனுபவம் என்று அவருக்கு யாரும் சொல்லவில்லை போலும்....
நீங்கள் இந்த கவிதையை படித்து உங்களுக்கு தோன்றுவதை சொல்லுங்கள் நாம் கருத்து பரிமாறலாம்.....
இப்படிக்கு தயாஜி...

ஜூன் 22, 2010

21/6/2010 இன்றோடு ஓராண்டு நிறைவை நாடுகின்றதுஇந்த விருது நிகழ்வு . விருது பெற்ற எழுத்தாளர்கள்...
எம்.கே.ஞானசேகரன் (கவிதை)
இ.தெய்வானை (சிறுகதை)
வே.சபாபதி (கட்டுரை)
சந்திரா சூரியா (நாடகம்)
இளையத் தலைமுறை விருது பெறுவோர்கள்...
தயாஜி (கவிதை)
முருகையா மூத்துவீரன் (சிறுகதை)
எஸ்.பி.சரவணன் (கட்டுரை)
கானா (நாடகம்)
இத்தனை பேர் மத்தியில் இத்துனைச் சின்னவனான தயாஜி இருக்க காரணம் ஒன்றுதான்
பேனா....
பேனா உன்னை மறப்"பேனா"....
உன்னால்தான் அப்பா....
இப்படிக்கு தயாஜி.........

கடந்த ஆண்டு இதே நாள், மலேசிய எழுத்தாளர் சங்கம் எனக்கு டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் இலக்கியப் பரிசை, கவிதைத் துறைக்காகக் கொடுத்தனர். இதற்கு நான் தகுதியானவனா என்பதெல்லாம் நான் யோசிக்கவில்லை....

என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய திருப்தி எனக்கு இதில் உண்டு.....

இன்று, அடுத்த ஆண்டு நான் வெளியிடப்போகும் என் படைப்புகள் அடங்கிய புத்தகத்திற்காக வெலையைத் தொடங்கியுள்ளேன்....

என் முதல் புத்தகத்தை வாங்கும் கரங்கள் அப்பா "வெள்ளைரோஜாவே" உன் கரங்களாகத்தான் இருக்கும்....

இப்படிக்கு தயாஜி.........

மே 20, 2010

அவள் தேவதை..?


காதலியை எல்லாரும் தேவதை என சொல்லுவார்கள் ஆனால் என்வரையில் அது நிஜமாகிப்போனது. என்வரையில் நடந்ததைச் சொன்னால் உங்களுக்கும் அவள் தேவதையாகத்தான் தெரிவாள். அவரவருக்கென்று ஒரு கனவு காதலி இருப்பாள். சிலருக்கு நடிகையாக இருப்பாள், சிலருக்கு வீராங்கனையாக இருப்பாள். எனக்கும் அப்படி ஒரு கனவு காதலி இருந்தாள். தனியே அவளுகென்று புகைப்படமோ விபரமோ என்னிடம் இல்லை. என் மனதில் திடிரெனத் தோன்றி, தாÉ¡கவே உருவம் பெற்றவள்தான் என் கனவு காதலி. தானாகவே உருவம் பெற்றவள் சில நாள்களில் என் கனவில் வரத்தொடங்கினாள்.


சொல்லும்போது கனவுதான், ஆனால் அந்த நேரம் அது கனவா என யூகிப்பது அவ்வளவு சுலபமல்ல. கனவு கலைந்தது எனக்கே குழப்பம் வரும் இது என்ன கனவா இல்லை நனவா..? அன்னிக்கு ஒரு நாள் நான் தனியா நடந்துக் கொண்டிருந்த சமயம். வானில் என்னமோ மாதிரி ஒளி வந்தது. நானும் இதை பெரிசா எடுத்துக்கலை. ஆனால் பாருங்க நான் நின்னு அதையே கவனிச்சேன். அந்த ஒளி என் தலைக்கு நேரே வந்தது . அதனுள் நான் இழுக்கப்பட்ட மாதிரி ஒரு உணர்வு. அங்கு¸தான் என்னோட கனவு காதலியை சந்தித்தேன்.


அந்த ‘மின்சார பார்வையாள்’ என் ‘சம்சாரமானதெல்லாம்’ என்னால் யூகிக்க முடியாமல் நடந்தது . அங்கு பாருங்களேன், கட்டிலில் என் தேவதை எப்படி, எந்த ஒரு சலனமும் இல்லாமல் தூங்குகின்றாள். என்ன..., தூங்கும் நேரம் எந்த இடைஞ்சலும் இல்லாமல் இருக்க காதையும் கண்ணையும் அதோ அங்க தெரியுதே அந்த பெட்டிகுள்ள வச்சிடுவாள். என்ன யோசிக்கிறிங்க..?

இதுக்கே இப்படின்னா நேத்து தலையைக் கழட்டி அந்த பெட்டிகுள்ள வச்சா தெரியுமா.. இப்போ சொல்லுங்கள் அவள் தேவதைதானே..?


............தயாஜி............

மே 18, 2010

மீண்டும் நள்ளிரவு மணி 12.00..


நள்ளிரவு மணி 12.00 ஆழ்நிலை தூக்கத்தில் மிதந்துக் கொண்டிருந்தேன். ‘செல்லம்...ஐ..லவ்....யூ’ என பிரகாஷ்ராஜ் குரல் என்னை எழுப்பியது. கைபேசியின் சத்தம்தான் அது. தூக்கம் கலிந்தும் கண்களை மூடியவாறுப் பேசத் தொடங்கினேன்.
“வணக்கம் யார் பேசறிங்க..?”
“வணக்கம் மணி, நான் தான் தேவி பேசறேன்.”

பெயரும் குரலும் பரிட்சயமில்லாததால், தொலைபேசி எண்ணை கவனித்தேன், ‘ப்ரைவட் நம்பர்’ என இருந்தது.
“ம்.. நீங்க...”

“பார்த்திங்களா மறந்துட்டிங்க...என்னங்க நீங்க..”
“...................”
அந்த குரல் மீண்டும்,

“நீங்களும் மறந்துட்டிங்களா..?” அவள் அழுதாள். அது அழுகையா சிணுங்களா எனத் தெரியவில்லை.
நான்,
“அப்படியில்லைங்க.. எனக்கு ஞாபக சக்தி குறைவு அதான் நீங்களேச் சொல்லுங்களேன்.”

சலிப்புடன்,

“ம்.. நானே சொல்றேன். நான் தேவி. ஒரு தடவை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சந்திதிருக்கோம். நீங்கதான் அறிவிப்பு செய்தீங்க... அப்பறம் கவிதைகூட சொன்னீங்க. நான், கடைசியா உங்ககிட்ட வந்து பேசி உங்கள் கையொப்பம் கேட்டேன். நீங்களும், ‘நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் மணி’ அப்படின்னு எழுதி கொடுந்தீங்க..”
அந்தப் பெண்ணின் முகம் எனக்கு லேசாக நினைவுக்கு வந்தது. சிரித்தேன். கண் திறக்காமல்.

“ஓ, நீங்களா..? உங்களுக்கு மட்டுமில்லை நான் எல்லார்க்கும் அப்படித்தான் கையொப்பம் இடுவேன். சரி என்னங்க இந்த நேரத்தில்..?”
“உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் பேசலாமா..?”
தூக்கம் ஒரு புறம் இழுத்தாலும் அந்த நேரத்தில் தேவியின் குரல் என்னைக் கவர்ந்தது.

“ம்.. என்ன பேசப் போறிங்க..?”
“தற்கொலை செய்துக்கிறது கோழைத்தனமா..?”
“ஏங்க திடிர்னு இந்த கேள்வி..?”
“பதில் சொல்லுங்களேன்..”
“தற்கொலை செய்றது தைரியமான செயல்..”
“அப்படியா..?!”
“ஆமாங்க, வாழ்க்கையை முழுமையா வாழ பயந்து சிலர் எடுக்கிற சில நிமிட தைரியமான முடிவுதான் தற்கொலை”
“வாவ்.. பதிலை கூட கவிதையாய் சொல்ல உங்களால் மட்டும்தாங்க முடியும்...”
(கவிதையா..?எனக்கு அப்படியேதும் தெரியவில்லை.உங்களுக்கு..?)
நான் தொடர்ந்தேன்,
“அப்படியா..! சரிங்கா ஏன் இப்படி ஒரு கேள்வி..?”
“நான் அப்படி செய்ய நினைச்சேன்”
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.
“என்னங்க சொல்றிங்க..?”
“அவசரப்படாதீங்க..இன்னும் சொல்லி முடிக்கல..தற்கொலை செய்யலாம்னுதான் போனேன். அப்போ ஒரு ஆசிரமத்தின் தொலைபேசி எண் கிடைச்சது..சரி கடைசியா என் பிரச்சனைக்கு இங்க தீர்வு வரும்னு நினைச்சி போன் செய்தேன். அவங்க பேசினது எனக்கு ஆறுதலா இருந்தது. இப்போ அந்த ஆசிரமத்துலதான் இருக்கேன்.”
சட்டென்று ஒரு குரல்,
“மாமா இன்னும் தூங்கலையா மணி என்ன மாமா...?”
“போன் பேசறன்.. மணி ஒன்னாவப்போது. நீ தூங்கு நான் அப்பறம் தூங்கறேன்..”
“ச..ரிமாமா..” வார்த்தைகள் உளறி தூக்கம் தொடர்ந்தது.
அது என் அத்தை மகன். அத்தை வீட்டில் வேலை நிமித்தமாக தங்கியிருப்பதால் அவனோடு படுக்கையைப் பகிர்ந்துக் கொண்டிருந்தேன்.(பின்குறிப்பு; படுக்கையை மட்டும்..!)

“சோரிங்க...பக்கத்துல அத்தை மகன் தான். உங்களுக்கு அப்படியென்னங்க பிரச்சனை.?”

“அதை தெரிஞ்சி நீங்க ஒன்னும் செய்ய முடியாதே.. ஏன் கேட்கறிங்க..?..ம்..”

“என்னைப் பொறுத்தவரைக்கும், நம்மை சுற்றி நடக்கும் எல்லாவற்றுக்குமே.. ஒரு காரணம் இருக்கும்னு நம்பறேன்.. இப்போ நீங்க இந்த நேரத்தில் என்கிட்ட பேசறதுகூட ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்னாதான் இருக்கும்னு நம்பறேன்..”
சிரித்தவாறே

“பரவாயில்லையே கவிஞருக்கு நிறைய விசியம் தெரிஞ்சிருக்கே.. சரி..சரி என் கதையைக் கண்டிப்பா சொல்லனுமா..?”
“தேவி. அது உங்கள் விருப்பம்.. நாளைக்கு காலையில நான் அலுவலகத்தில் இருக்கனும்.அதுக்கு சீக்கிரம் படுக்கனும். நாம நாளைக்குப் பேசலாமா..?”

அவள் சிணுங்கியவாறே,
“ம்..சரி நாளைக்குப் பேசலாமா..?”
“நானும் அதைதானே சொன்னேன்..”
“சரிங்க மணி நாளைக்கு நானே ‘கோல்’ செய்றேன். குட் நைட்..”

பேசி முடித்த பின்னரும் அன்று சந்தித்த வள் முகம் எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. மீண்டும் ஒரு முறை பார்த்தால் போதும் ஞாபகத்தில் வந்துவிடும். கொஞ்சம் குழப்பம். அப்படி என்ன தற்கொலை செய்யும் அளவுக்கு தேவிக்கு பிரச்சனை..? ஒரு நாள் தானே பார்த்தோம், அதை ஏன் என்கிட்ட சொல்லனும்..? இப்படி பலக் கேள்விகளுக்கு நாளை பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தலையணையைக் கட்டியணைத்தேன்.

.................................................................................................................


மறுநாள் காலை நாளிதழ் படித்ததும் அதிர்ச்சி. இளம் பெண் தற்கொலை என்றிருந்தது. உடனே கைபேசியை எடுத்து நேற்று இரவு பேசிய எண்ணை தேடினேன். கிடைக்கவில்லை. குழப்பம் என்னை சூழ, நேற்று தேவியிடம் அவளது பிரச்சனையை கேட்டிருக்கலாமே என தோன்றியது. ஒரு வேலை அவளது தற்கொலைக்கு நானும் மறைமுக காரணமாக இரிப்பேனோ..? அவள் தற்கொலைக்கு முன்தான் என்னிடம் பேசினாளோ..? ஒருவேலை போலீஸார் அந்த கைபேசியை பரிசோதித்தால், என் மீது சந்தேகம் திரும்புமோ..?

தற்போதுதான் வெலையில் சேர்ந்து குடும்பப் பாரத்தை குறைக்கத் தொடங்கியுள்ளேன். இந்த நேரத்தில் இப்படியோர் இடியை என குடும்பம் தாங்காது. இன்றைய தினம் சீக்கிரமே வீடு திரும்பிவிட்டேன். சீக்கிரம் என்பது எங்களைப் பொருத்தவரை இரவு மணி 10.00.

இரவும் எனக்கு பகல் போலதான் தோன்றியது. ஏனெனில் காலையில் ஏற்பட்ட குழப்பம் என்னை யோசிக்கவிடாமல் தடுத்தது. நள்ளிரவு மணி 12.00.
“செல்லம்..ஐ..லவ்..” கைபேசியைத் தொடர்ந்து கத்தவிடாமல் உடனே எடுத்தேன். மறுமுனையில் அவள்தான்..

“என்ன மணி பயத்தில் இருக்கிங்கலா...?”
“என்ன...எ...ன்...ன... செல்றிங்க..?”
“இல்ல.. எப்போதும் வணக்கம் சொல்லுவிங்க.. இன்னிக்கு அமைதியா இருக்கிங்க அதான் கேட்டேன்”
பெருமூச்சுடன் ஆரம்பித்தேன்,
“இப்போதாவது உங்கள் பிரச்சனை என்னன்னு சொல்லுங்களேன் ப்லீஸ்”
அவள் சிரித்தாள். எப்படியும் இன்று அவளது பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொடுத்தேயாகவேண்டும் என தற்சமயம்தான் முடிவெடுத்தேன். அவள் இன்னும் உயிரோடு இருப்பது எனக்கே என் உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது.
“எல்லாத்தையும் ‘போன்ல’ சொல்ல முடியாது மணி. வேணும்னா நான் தங்கியிருக்கும் ஆசிரமத்துக்கு வாங்களேன்....”
“அதுக்குள்ள நீங்க ஏதும் செய்துக்க மாட்டிங்களே.?”
“ச்சே..ச்சே.. முகவரி கொடுக்கறேன் எடுத்துக்கோங்க...”

தேவி சொன்ன முகவரியைக் குறித்துக் கொண்டேன்.
“நாளைக்கு வரட்டுமா..?” என கேட்டதற்கு, சற்றே தயங்கி
“ம்.. நாளைகேவா.. வேற நாள் முடியுமா..?”
என கேட்டு கடைசியில் நாளைய சந்திப்பிற்கு பச்சைக் கொடி காட்டினான்.
“மணி நீங்க வந்தது நான் நெறைய பேசனும். ஏன்னு தெரியலை உங்ககிட்ட சொன்னா மனசுக்கு நிம்மதி கிடைக்கும்னு தோணுது அதான்.. தப்பா எடுத்துக்காதிங்க.. நான் தப்பான பொண்ணு கிடையாது..!”

அவள் அழத் தொடங்கினாள். இப்படி இரவில் பெண்களோடு பேசுவது எனக்கு ஒன்றும் புதிதல்ல.. என் காதலிக்குத் தெரியாத வரை இது எனக்கு பிரச்சனையுமில்லை.
“தேவி. நான் அப்படி நிணைக்கலை, கவலைப்படாதிங்க. உங்கள் பிரச்சனைக்கு என்னால தீர்வு கிடைக்கும்னு நீங்க நம்பறீங்க. உங்கள் நம்பிக்கை உங்களுக்கு நல்லதையே செய்யும். நிம்மதியா இருங்க நாளைக்குச் சந்திப்போம்.”
இவ்வாறு பேசி முடிக்கவும், என் அத்தை மகன் படம் பார்த்துவிட்டு படுக்க என் அறைக்கு வரவும் சரியாக இருந்தது.
“என்ன மாமா.. இப்போல்லாம் ராத்திரி அடிக்கடி ஏதோ பொண்ணுகிட்ட பேசறிங்க.. இதெல்லாம் நல்லாயில்லை..”
“ஏன் ரவி..?”
“இல்ல..! எனக்கும் ஒரு நம்பரைக் கொடுத்தா நாங்களும் பேசுவோல..”
“அடப்பாவி .. அதான் மாமான்னு கூப்டியா..?”
“அப்புறம் என்ன மாமா.... நீங்க. பொண்ணுங்களைப் பார்த்தோமா.. பேசினோமா... அப்பறம்... மு....”
“போதும்.போதும். அடுத்து நீ என்ன சொல்லப் போறன்னுத் தெரியும் படுத்துத் தூங்குடா...”

................................................................................................................

அதிக சிரம்மில்லாமல் தேவியின் வீட்டை அடைந்தேன், இல்லை... இல்லை... ஆசிரமம்தான் ஆனால் பார்ப்பதற்கு வீடு போல் இருந்தது. இப்பொ பல இடங்களில் வீட்டை வாங்கி சில பிள்ளைகளை வைத்து இது ஆசிரமம்னு சொல்லி வசூலிக்கும் கூட்டம் பெருகி வருவதுதான் என நினைவுக்கு வந்தது.


ஆசிரமத்தின் வெளியே நின்றேன்.
“தேவி” என அழைத்தேன்.

“பரவாயில்லையே , சொன்ன மாதிரி வந்துட்டிங்களே..?”
தேவியின் குரல்தான் அது. என் பின்னால் இருந்து கேட்டது.

“வாங்க வாங்க என்னங்க உள்ளே இருந்து வருவிங்கன்னு பார்த்தா என் பின்னால இருந்து வரிங்க...! ”
அவள் சிரித்தாள். அன்று நான் பார்த்ததைக் காட்டிலும் இன்று அவள் முகம் இருளடைந்துக் காணப்பட்டது.


அவள்,
“கொஞ்சம் வெளியே போயிருந்தேன். நல்லவேளை சீக்கிரமா வந்துட்டேன்... வாங்களேன்... நடந்துகிட்டே பேசலாம்... ”
நடக்கத் தொடங்கினோம், பல நாட்கள் பழகியவள் போல் அவளது அந்தரங்க விசியங்களைப் பகிர்ந்துக் கொள்ளத் தொடங்கினாள்.
“ஏன்னுத் தெரியலை மணி..! உங்ககிட்ட என் சோகத்தை சொன்னாக்கா... எனக்கு ஆறுதல் கிடைக்கும்னு தோணுது, அதான் சொல்றேன்.. நான் உயிருக்கு உயிரா காதலிச்சவன் என்னை ஆபாசமா படமெடுத்து எனையே பயமுறுத்தினான். எனக்கு வேற வழி தெரியலை..அதான் தற்கொலைக்குத் தயாரானேன்..ம்... ஆனா அது முடியலை.... இப்போ இந்த ஆசிரமத்தில் இருக்கேன் .அதும் எவ்வளவு நாள்னு தெரியலை..”
பேசிக்கொண்டே வந்தவள் திடிரென அமைதியானாள். நடந்துக் கொண்டே அவளுக்கு ஆறுதலாகப் பேச ஆரம்பித்தேன்.

“தேவி, இப்போ இந்த மாதிரி ரொம்ப நடக்குது. காதலிக்கறதா சொல்லி பொண்ணுங்களை இப்படி படமெடுத்து அந்த பொண்ணுங்க வாழ்கையையே நாசமாக்கிடறாங்க.. அவங்களை..” நான் முடிப்பதற்குள்,
ஆவேசமாக,
“கொல்லனும்... கொல்லனும்... நிச்சயம் கொல்லனும்..”
தேவியின் குரல் மட்டும் கேட்கின்றது. இதுவரை என்னுடன் நடந்து வந்தவளைக் காணவில்லை. ஆம் சுற்றிலும் தேடிவிட்டேன். அவளைக் காணவில்லை.
இது எப்படி சாத்தியம்...!
என் கழுத்தில் இருக்கும் முருகனின் படத்தைப் பிடித்தவாறே மீண்டும் ஆசிரமத்தின் வாசலில் நிற்கின்றேன்..ஒருவர் உள்ளிருந்து வந்து,
“அப்படி யாரும் இங்க இல்லைங்க தம்பி. இங்க சின்ன பிள்ளைங்கதான் இருக்காங்க..” என் பயத்திற்கு அணைவெட்டினார். பயம் என் உடலில் பரவி வியர்க்க ஆரம்பித்தது.
ஆமாம்...ஆமாம்... ஒரு முறை அத்தை மகன் ரவியின் கைபேசியில் ஏதோ ஒரு பெண்ணின் நிர்வாணப்படம் இருந்தது. அது..அது.. தேவியின் முகம்தான். அன்று இளம் பெண்ணின் தற்கொலை என வந்த படமும் இவளுடையதுதான். அப்படியென்றால் ரவிதான்.....!
குழப்பத்துடன் வீடு திரும்பினேன். இரவு மணி பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்க, அத்தை புலம்பினார்,
“என்ன புள்ளியோ எப்பப் பார்த்தாலும்... விடிஞ்ச பிறகுதான் வீட்டுக்கே வரான்..என்னதான் செய்யறதோ தெரியலை..”
ரவி இன்னும் வீடு திரும்பவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டும் கிடைக்கவில்லை. காலையில் நடந்த எல்லாம் என் சிந்தனையைக் கட்டிப்போட்டது.
நள்ளிரவு மணி 12.00. தூக்கிவாரிப்போட்டது எனக்கு... என் கட்டிலுக்குப் பக்கத்தில் ரவியின் கைபேசி அலறியது. முன்பு நான் பல முறை முயற்சித்தும் தொடர்பு ஏற்படாத அதே கைபேசி.
அலறிக் கொண்டிருக்கும் கைபேசியில், அழைப்பவரின் பெயர, ‘ பிரைவட் நம்பர் ’ என இருந்தது..!


.........தயாஜி.........

மே 06, 2010

அம்மா என் அம்மா...


அம்மா என் அம்மா...

தெய்வம் நீயம்மா...


ருவறையில் சுமந்த..

கற்பக்கிரகம் நீ....


தேயாத நிலவும்

மறையாத சூரியனும்


குறையாத அன்பும்

கொண்டவளே அம்மா...


என் தெய்வம் நீயம்மா.....

கண்விழிப்பென் என்றும்


உந்தன் பெயர் சொல்லி.....

இரவுக்கும் பகலுக்கும்

வானம் வழிகாட்டி..


சரி தப்பை புரியவைப்பாய்

என் தோழி....


எனக்கான உடலைக் கருவாக்கித் தந்தவளே.....

உதிரத்தைப் பாலாக்கி

எனக்காகச் சுரந்தவளே.....


என் தெய்வம் நீயம்மா...


எனக்குள்ளே என்றும் தெய்வம் நீயம்மா...

பசி தூக்கம் துறந்து,

என்னை வளர்த்தெடுத்தாய்....


செய்திடுவேன் உனக்கு

என் உயிரை சமர்பணமாய்...


செய்திடுவேன் உனக்கு என் உயிரைசமர்ப்பணமாய்.....

இருந்தும் ஈடாகாது.....

என் தெய்வம் நீயம்மா....

ஏப்ரல் 12, 2010

உலக நாயகனுடன் இன்னொரு நாயகன்...




















நடிகனா..?










பாடகனா..?

நடன இயக்குனனா..?










கவிஞனா..?










கதாசிரியனா..?










தயாரிப்பாளனா...?










எழுத்தாளனா..?










ஆத்திகவாதியா..?










நாத்திகவாதியா..?





விமர்சகனா..?

வில்லனா..?










நகைச்சுவையாளனா..?

துணைக் கதாநாயகனா..?










இலக்கியவாதியா...?










பேச்சசளனா...?










இவ்வளவு ஏன்..........!










”நல்லவரா கெட்டவரா” என்ற கேள்விகள் உடபட எல்லா,





அடைப்புகுறிகளையும்....
அடக்கி ஆள்பவன்......















கலையில் ஆலமரம் ஆகியவன்...
உலக நாயகன்.....










கமலஹாசன்,





இவன் கலைத்தாயின் உன்னத நேசன்....

இப்படிக்கு,

“உன்னைப் போல் ஒருவன்”

“இவனும் வருவான்”




















தயாஜி வெள்ளைரோஜா

ஏப்ரல் 05, 2010

தெரிஞ்சா.. சொல்லுங்களேன்..!!



தெரிஞ்சா சொல்லுங்க...


இதை நான் சொல்லக் கூடாது. என்ன செய்வது எனக்கு வேற வழி தெரியலை. ஒரு வேளை உங்களில் யாருக்கும் இப்படி ஓர் அனுபவம் ஏற்பட்டிருக்கும் அல்லது இப்படி ஒரு அனுபவம் உங்களுக்காகக் காத்திருக்கும். அப்படி காத்திருக்கும் யாருக்காவது இது முன்னெச்சரிக்கையாக இருக்கட்டுமே என்றி இதனை எழுதுகின்றேன்.
பேய் இல்லாவிட்டால் ஆத்மாக்கள் என்பதனைப் பற்றி உங்களின் கருத்து என்ன..?

ச்சே...அப்படியெல்லாம் ஒன்னுமில்லை எல்லாம் ‘காதுல பூ’ சுத்தும் வேலைன்னு சொல்றிங்களா..? பரவாயில்லை. ஒன்னு சொல்லட்டுமா ஆரம்பத்தில் நானும் உங்கள் கட்சிதான்? இப்போ என் நிலையைப் ‘பாருங்க...’ மன்னிக்கவும் படிங்க. அப்போதுதான் தெரியும். உங்கள் யாரையும் பயமுறுத்துவது என் நோக்கம் அல்ல. அதற்கு நான் ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்..! ஆனால் ஏன் எழுதுகிறேன்..? எனக்கே தெரியலை..



சரி, ரொம்ப குழம்பாடாதிங்க, நானே சொல்றேன். ஆரம்பத்தில் நான் கேட்ட கேள்விகளுக்கான உங்களின் பதிலை மனதில் வைத்து தொடர்ந்து படிக்கனும் என்ன...


எனக்கு ஒரு நண்பன் இருந்தான்.(அது என்ன ஒரு நண்பனு கேள்வியெல்லாம் கேட்டா நான் எழுதமாட்டேன்.. அதனால சும்மா கேள்வி கேட்காம படிங்க... சரியா..)

அந்த நண்பனோட பெயர் காளிதாசு. அவனை எனக்கு நாலு வருசமா தெரியும். இது இப்போ அவசியமான்னு கேட்கறிங்கலா..? நான் சொல்லப் போறதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கு. சம்பந்தம் இல்லாம பேச நான் என்ன அர...(எதுக்கு வம்பு விடுங்க..!!)

தொடர்ந்து எழுதுவதற்கு முன்னாடி, ஒரு சின்ன தகவல். அது என்னான்னா.. ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு மேல் யார் எனக்கு ‘போன்’ எடுக்கமாட்டேன்.அதும் அன்னிக்கு பிரைவட் நம்பர்-னு இருந்தா, தூக்கம் போச்சி. ஏன்னு கேட்கறிங்கலா..? அப்படின்னா, என்னோட ‘நள்ளிரவு மணி’- என்ற கதையை (நயனம் 26/7/2010) படிங்கத் தெரியும். அதும் பெரிய கதைதான்.

இப்போ சொல்ல வந்ததை சொல்றேன். ஆம் அந்த காளிதாசு எப்போதும் எனக்கு ‘போன்’ செய்து பேசுவான். அப்பப்போ வந்தும் பார்ப்பான்.இப்போ என்னான்னா.. மூனு மாசமா, ஆளையே காணோம்.போன மாசம்தான் இன்னொரு நண்பன் மூலம் தெரிஞ்சது, காளிதாசு இறந்துட்டான்னு. உங்களுக்கு இது அதிர்ச்சியா இருக்காது. ஆனால் அடுத்து நடந்ததை சொன்னா நீங்க என்ன நினைப்பீங்கன்னு எனக்கு சொல்லத் தெரியலை.

கடந்த ஒரு வாரமா என்னால அவனைப் பார்க்கமுடியுது. அட ஆமாங்க, அந்த காளிதாசைதான். அவன்தான் இறந்துட்டானே அவனை எப்படி பார்க்க முடியும்னு உங்களுக்கு வர சந்தேகம் எனக்கும் வந்தது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒரு நாள் என்ன நடந்தது தெரியுமா..? ஓ.. நான் சொன்னாதானே தெரியும்னு சொல்றிங்கலா..? சொல்றேன் அதுக்குதானே எழுதவே ஆரம்பிச்சென்.

எப்போதும் போல பேருந்துக்குக் காத்திருந்தேன். என் அருகில் நால்வர் நின்றுக் கொண்டிருந்தனர்.கவனித்தேன். தூரத்தில் ஒரு உருவம் என்னையே பார்ப்பதாக உணர்ந்தேன். ஏற்பட்ட உணர்வு உண்மையாகிப் போனது.என்னையேப் பார்த்து கொண்டிருந்த உருவம் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் வரத்தொடங்கியது. அது்..அது.. காளிதாசு.என்னால் உறுதியாய் சொல்ல முடியும். அப்பறம் நாலு வருச பழக்கமாச்சே.. சும்மாவா..!
அவன் செத்துட்டான்னு சொன்னாங்கலே..... இங்க எப்படி..... ?


எனக்குள் பல கேள்விகள். உங்களுக்கும் ஆரம்பிச்சிருக்கும்னு நினைக்கிறேன். காளிதாசு, இருக்க இருக்க நெருக்கத்தை அதிகரிச்சான். எனக்கோ லேசான நடுக்கும் ஆரம்பிச்சிருக்கும். நானும் பயத்தில் புதுப்புது சாமி பெயர்களையேல்லம் சொல்லிக்கிட்டேன்.



கொஞ்சம் அருகில் வந்தான் .@ கொஞ்சம் அருகில் வந்தது.

“நீங்க மணிதானே..?” என்றான். @ என்றது.

நானும் நடுங்கியவாறு,

“ஆமாம் .. நீ.. நீங்க..க்க்காளிதாசு”

“இல்லைங்க நான் காளிதாசோட அண்ணன். ஒரு தடவை வீட்டுக்கு வந்திகலே , மறந்துட்டிங்கலா..?”

“ம்..ம்,.. காளிதாசு”

“ம்.. என்ன செய்யறதுங்க கஷ்டன்மாதான் இருக்கு. அம்மாதான் இன்னும் அவன் நினைப்பாவே இருக்காங்க.. நானும் அங்கயே இருக்க முடியாம. கோலாலும்பூருக்கு வந்துட்டேன். இங்க கூட்டாளி வேலை இருக்குன்னு சொல்லியிருக்கான். எல்லாம் சரியா வந்தா.. அம்மாவையும் கூட்டி வந்திடுவேன். அங்கயே இருந்தா தம்பி ஞாபகமாவே இருக்கும் பாருங்க..!”

இவ்வாறு பேசி பக்கத்தில், இருக்கும் கடையில் சாப்பிட்டோம். காளிதாசும், அவனோட அண்ணனும் ஒரே மாதிரிதான் இருப்பாங்கன்னு எனக்கு தெரியாம போயிருச்சி. நல்ல பையன் காளிதாசு. இப்படி அற்ப ஆயுசில போவான்னு யாருக்குத் தெரியும்.

அதற்கு பிறகு பேருந்துக்காக போகும்போதும், காத்திருக்கும் போதும் காளிதாசின் அண்ணனைப் பார்த்தா மரியாதைக்காக கை காட்டுவேன்.அப்படி கையை காட்டும் போது பக்கத்தில் இருக்கிறவங்க என்னை ஒரு மாதிரியாப் பார்ப்பாங்க. ஏன்னு எனக்குத் தெரியலை.உங்களுக்கு ஏதும் யூகம் இருக்கா..? அந்த யூகத்தை அப்படியே வச்சிக்கோங்க. நான் சொல்ல வந்ததை சொல்றேன்.மன்னிக்கவும் எழுதறேன்.

“தேவி எங்க இந்த பக்கம் .. சொல்லவேயில்லை..?”

“ஹாய், மணி எப்படி இருக்கே.. ஒரு வாரம் லீவு அதான் அத்தை வீட்டுக்கு வந்தேன். உன்னையும் பார்க்கனும்ன்னு இருந்தேன் நீயே வந்துட்டே..”

“அத்தை வீடா இங்கயா..?”

“ம்.. செர்டாங் செரி கெம்பாங்கந்ல இருக்கு . எல்லாம் வேலைக்கு போயிருக்காங்க அதான் அப்படியே பஸ் ஏறி வந்தேன். கொஞ்சம் சுத்திட்டு இப்பதான் கிளம்பப் போறேன்..ஆமா நீ என்ன பஸ்ல போறயா..?”

சிரித்தேன்.

“என்னோட கார் கொஞ்சம் பிரச்சனை அதான் இன்னிக்கு பஸ். இரு தேவி காளிதாசோட அண்ணன் வர நேரம் அபப்டியே அவரையும் பார்த்த மாதிரி இருக்கும்.”

தேவி அதிர்சியில்,

“என்ன மணி சொல்ற. நீ பார்த்தியா..?”

“ஆமாம் தேவி . இவரும் பார்க்க காளிதாசு மாதிரியெ இருந்தாரா. நானும் செத்துப் போன காளிதாசுன்னு நெனைச்சி பயந்துட்டேன்.”

“காளிதாசு இறந்துட்டான்னு யார் சொன்னா உனக்கு..?”

“கேசவன்தான் சொன்னான், காளிதாசு இறந்துட்டான்னு.. ஏன் தேவி என்ன ஆச்சி..?”

“அடக்கடவுளே, மணி செத்துப் போனது காளிதாசு இல்லை. அவனோட அண்ணனும் உன்கிட்ட சொன்னதா சொன்னியே அந்த கேசவனும்தான். மோட்டர் விபத்துலதான் ரெண்டு பேரும் இறந்தாங்க. ”

“என்னது..!!!!”

இதை தேவி மூலம் கேட்ட நான் என்ன செய்யனும்னு தெரியாம / புரியாம முழிச்சேன்.இப்பகூட பாருங்க பஸ்லதான் போய்கிட்டு இருக்கேன்.இன்னும் குழப்பம் தீரலை. அப்போ எனக்கு தகவல் சொன்ன கேசவன் , காளிதாசோட அண்ணன் ..இது எப்படி சாத்தியம்.

அங்க பாருங்க கேசவனும் காளிதாசின் அண்ணனும் கை காட்டறாங்க. உங்கள் யாருக்கும் தெரிஞ்சா சொல்லுங்களேன்..... நான் கை காட்டட்டுமா வேண்டாமா..?






தயாஜி வெள்ளைரோஜா

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்