பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 18, 2009

சுஜாதாவின் வழி, தனிவழி புது வழி...





சுஜாதாவின் "சிறு சிறுகதைகள்" என்ற புத்தகத்தில், என்னைக் கவர்ந்தவற்றை இங்கே இடுகின்றேன்..... இது கொஞ்சம் சுவாரஸ்யமான ஒன்று நீங்களும் முயற்சிக்கலாம்.....(நான் இன்னும் ஆரம்பிக்கலை.. வேலை அதிகம்) கதையின் தலைப்பு நீளமாக இருக்கலாம்..


ஆனால் கதை இரண்டே இரண்டு வரிகளில்தான் இருத்தல் வேண்டும்.. கவனியுங்களேன்.. இரண்டு வரிகளின் தான் கதை எழுதப்பட வேண்டும்........ இரண்டு வார்த்தை கதைகள்:



1. தலைப்பு : கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்

கதை : "ஐயோ சுட்டுடாதே!"


2.தலைப்பு : சுவரில் ஆணியடிப்பவன் கேட்ட கடைசி வார்த்தைகள்.

கதை : "கன்சீல்ட் வயரிங்ப்பா"


3.தலைப்பு : ஆராய்ச்சி சாலையிலஇருந்து ரோபோ வெளியே வந்தது

கதை : "டாக்டர் க்ளோஸ்"


4.தலைப்பு : வசந்தாவின் கணவன்

கதை : "சுசீலாவோடு எப்படி?"


5.தலைப்பு :விடுமுறைக்கு வந்த கார்கில் வீரனும் கிராமத்து

நண்பர்களும்

கதை : "ரம் கொண்டாந்திருக்கியா?"


6.தலைப்பு : மகன் தந்தைகாற்றும்

கதை : "இ.மெயில்"


7.தலைப்பு : என்னை யாரோ பார்க்கிறார்கள்

கதை : கண்ணாடி



8.தலைப்பு : ஆபிஸில் எத்தனை ஆம்பளைங்க?

கதை : முதலிரவில் கேள்வி.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்