பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 04, 2009

மழைச் சாரளும் மனிதக் கீறளும்....?




மழை வேகமாகவும்...
கொஞ்சம் மெதுவாகவும்...?!?!?
பெய்துக் கொண்டிருந்தது;

நான் மட்டும்,
தனியாய்
இருப்பதால்இந்த ஆசை!!!


....ஆசை மட்டும்தான்அதை யாரும்,
பேராசையாக்க முயற்சிக்காதவரை.........
அது ஆசை மட்டும்தான்...

தனியாய் இருப்பதால்;
சூடானத் தேநீருக்கு,
உத்தரவு போட இயலவில்லை....!
போட்டால் மட்டும்உடனே வந்துவிடும் ,
என்ற எந்த...

உத்தரவாதமும் இல்லை....

அட...
மழை இப்போதுவேலை நிறுத்தம் ,
செய்யத் தொடங்குகின்றது....!!
இதைவிட,
சந்தர்ப்பம் வேறு வாய்க்காது,

ம்ம்ம்...,,.,...ம்ம்..ம்.ம்.ம்.ம்.
மழையில் நனைந்தால் சந்தோஷம்தான்...!

கூடவே அந்த பாழாய்ப்போன,
ஜலதோஷ்மும் வந்துவிடும்;

அப்புறம் தொல்லை எனக்குத்தான்.....??
இருந்தாலும்,
இன்று வேறு வழியில்லை..

அப்புறம் என்ன..?
நேற்றைக்கு வந்தவன்;
புது "வாடிக்கையாளன்"....??
எதுவுமேத் தெரியலை...

அங்கங்கே கடிச்சிவைச்சிட்டான்...!!
நகக்கீறல் வேறு...?
வயது பதினாறுதானே..!!!
அவனும் என்ன செய்வான்..

தினம் தினம் ;
இந்த ஆண்கள் கொடுக்கும்..!
அடையாளங்களுக்கும்... காயங்களுக்கும்.....

இது போன்ற;
லேசான,
மழைத்தூறல்கள்தான் என்
போன்றோருக்கு'மருந்து'

ஆண்களுக்கு விருந்தாகும் எங்களுக்கு
ஆண்டவன் தரும் மருந்து....

நனைய வேண்டி ;
கதவைத் திறக்கின்றேன்.....

இரண்டு வாடிக்கையாளர்கள்..!
இன்றும் எனக்கு;

மருந்து இல்லை....



................தயாஜி வெள்ளைரோஜா.............

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்