பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 05, 2009

விழிமொழியுடையாள் (எனக்கானவள்..!)




"உன்னை நான் காதலிக்கின்றேன்"

வெறும் மூன்று வார்த்தைகள்தான்;
வெளியில் இருந்துப் பார்க்கும்வரை.......

உன்னைப் பார்த்தவுடன் இந்த வார்த்தையின் விலாசம் தொலைந்துவிடுகின்றது.....!

கண்ணாடி முன்னாடிநின்றும்;
நண்பர்கள் பின்னாடிநின்றும்;

தினம்............
தினம்............

நான் பழகும் 'வக்கியம்';
இன்னும் உன்னை சேரவரவில்லை
அதற்கான 'பாக்கியம்'

சொல்லியேவிடுகின்றேன்..!

முடிவுடன் வந்தால்

வேர்க்கின்றது...வெடவெடக்கின்றது....
எனக்கல்லைஅந்த வார்த்தைக்கு....

உனக்கும் தெரியும்..!
ஆனால்;
என்னை சொல்லவிடுவதில்லை..
உன் விழிகள்

உன் ' விழியின் ' முன்
என் ' மொழியின் ' பலம் எடுபடவில்லை....

எப்படியும் சொல்லிடுவேன்....;

அதற்காகத்தான்,
பழகத் தொடங்கியுள்ளேன்..

வாய்மொழி பேச அல்ல..
உன் போல்

" விழிமொழி " பேச

காத்திரு......

...............தயாஜி வெள்ளைரோஜா...............

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்