பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 05, 2009

ஐந்தாவது மனிதன் (தேடிப்பாருங்கள்)


ஐவர்;
தியானம் மேற்கொள்கின்றர்

....................................................
.................................
......................
...........
...
..
.


எங்கும் அமைதி....
எல்லாம் ஆனந்தம்.....

.
..
.....
.................
............................
.....................................
............................................


கொஞ்ச நேரம் கழித்து...

முதல் மனிதன்;
கண்திறக்கின்றான்...!
இரண்டாம் மனிதனின்;
மூடியக்கண்ணைப் பார்த்ததும்

' இவனும் '
கண்மூடுகின்றான்..!

இரண்டாம் மனிதன்;
கண்திறக்கின்றான்....!
மூன்றாம் மனிதனின்;
மூடியக்கண்ணைப் பார்த்ததும்

' தானும் '
கண்மூடிகின்றான்...!

மூன்றாம் மனிதன்;
கண் திறக்கின்றான்...!
நான்காம் மனிதனின்;
மூடியக்கண்ணைப் பார்த்ததும்

' மீண்டும் '
கண்மூடுகின்றான்.....!

நான்காம் மனிதன்;
கண்திறக்கின்றான்...!
ஐந்தாம் மனிதனின்;
மூடியக்கண்ணைப் பார்த்ததும்

' தியானம் ' தொடர்கின்றான்

....................
...........................
...........................
.........
..............

இவர்கள்;
நால்வரும் இனி....!
இப்படித்தான் இருப்பார்கள்

அந்த;
'ஐந்தாம் மனிதன்'
தூங்கிவிட்டான்;
எனத் தெரியும்வரை........


..............தயாஜி வெள்ளைரோஜா..................

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்