பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 06, 2009

தேவதையானவள் (நிரந்தரமானவள்..)



தோழியே,
என்னைக் 'கரு'வாக்கியவள்...
அன்னை;
என்னை 'உரு'வாகியவள்...
நீ..;


பாறையென இருந்தவனை;
வார்த்தை உளியால்,
பல சிற்பம் காட்டியவள்....
நீதான் தோழியே..!


உன்னின் இருந்துதான்;
காதலைவிட மேலான ,
நட்பை உணர்ந்தேன்......!

அன்று அடைக்கலமின்றி,
இருந்தவன் நான்...?
தங்களை "சமுதாயம்" என,
அடையாளம் காட்டி
வசைபாடினார்கள்...!


இன்று,
உன் மொழியால்தனி
அடையாளமே...!
உருவாக்கியுள்ளேன்......

இதற்கும்;
அதே பெயரில் ;
வசைபாடுகின்றனர்.....!

இவர்கள்;பார்வையில்...
இல்லையில்லை....

"இதுக்கள்"
பார்வையில் நீயும் நானும்

"காதலர்களாம்...?"

விட்டித்தொலைப்போம்...!
ஜந்துக்களுக்கு தெரியுமா...?
நட்பின் ஆழம்;


இதுக்கள் தாயைகூட ;
சந்தேகிக்கும்

கேவலங்கள்...

நீயாக நீ......
நானாகும் நீ..........
நீயாகும் நான்...........

நாமாகும் நட்பு........



..............தயாஜி வெள்ளைரோஜா.............

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்