பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 25, 2009

என் முதல் தவறு..






எப்படியெனத் தெரியவில்லை,
அது....!!
நடந்துவிட்டது

இன்னமும் எனக்கு குழப்பம் ஒயவில்லை....
என்ன செய்வது
நம்மை மீறிய
பல விசயங்களை
நாம்தான் சந்திக்கின்றோமே....

எனக்கு இது..!
தேவைதானா...
நானா இப்படி...??

இது என்ன,
தொற்று நோயா..?

பரம்பரை வியாதியா...?

இதன் ஆரம்பம் எங்கே..?

எல்லா கேள்விக்கும்ஒரே பதில்

""தெரியாது""

தற்காலிக பதில் மட்டுமல்லஎன் தற்காப்பு பதில்....

வெளியில் தெரிந்தால்
.....?.....?.........?......??...........

என்ன செய்ய...?
மறக்கவா...??
மறைக்கவா....?

தலைமறைவாகிவிட்டால்
எப்படி..?

சரி,,!
நடந்தது
நடந்துவிட்டது.....
என்னால் எப்படியோ,

இது என் அடையாளமாகட்டும்..
இதை அடைக்காக்கப் போவதும் இல்லை,

துணிவோடு ஏற்கின்றேன்
எதிர்ப்பையும் சமாளிகின்றேன்...

ஆம்..!!


"அது என் முதல் கவிதை"


இப்படிக்கு தயாஜி வெள்ளைரோஜா

எப்படி வெல்வது...


இங்கே வெளிச்சம்,
தேவையானதால்....
இருட்டு இல்லாமல் போய்விட்டது....

இப்படித்தான்
இங்கு பணம்
தேவையானதால்
என் குணம் நிராகரிக்கப்பட்டது......

விழிகள் தோறும்
வாசனை தெளித்தாள்...
என் விழியின் ஓரம்
வலியை விதைத்தாள்.....

கண்ணாடியும் என்னை
ஏளனம் செய்கிறது முன்னாடி....

என் காதலைஎப்படிச் சொல்ல....!!??

பணம் தந்தால்
பஞ்சணையில்.......
இல்லையெனில்
நஞ்சணையில்........

"மனைவியாகிவிடு"
என்றேன்

""ஒரு இரவுக்கு 100 வெள்ளி"
என்றாள்
அவளுக்கு தேவை
தாலியல்ல
ஆணுறை!!???


ஏன் இன்னமும் அவள் நினைவாய் நான்.

எப்படி ஜெயிப்பேன்..

"என் ஐம்பது வெள்ளி கொண்டு"



இப்படிக்கு,
தயாஜி வெள்ளைரோஜா

நண்பனுக்கு ஒரு கடிதம்.....




அன்புள்ள நண்பனுக்கு,
நலமா..........??


இக்கடிதம் ஒரு வேலை,
இன்று அவசியம் அற்றதாய்,
இருக்கலாம்...
ஆனால் இதன் தேவை,
தொலைவில் இல்லை.....


நண்பா,!
நீ வெற்றி பெறுகின்றாய்
என் வாழ்த்துகள்,
உன் வெற்றிக்கு உன்னைக் காட்டிலும் உழைத்தவன்
"நான்"
என்பதை மறந்துவிட்டாயே.........


உன் திறமைகளை வெளிகொண்ர,
என் வேலைகளை நிராகரித்தேன்,
அது என் தவறுதான்
என்ன செய்வது....??

படியாய்....ஏணிப் பாடியாய்
நான் மாறி உன்னை ஏற்றினேன்
மேலே ஏறியதும் எனக்கு கைக்கொடுக்காமல்

''ஏறிவிட்டேன்''

என,
இரு கைகளையும் மேலே
உயர்த்திவிட்டாயே....!!!

சேர்ந்தே நாம் பல
சாதனை செய்திருந்தாலும்....
இது நாம் பிரியவேண்டிய கட்டாயம்....
பிரிவு..!!
இயற்கையாய் ஏற்பட்டதோ, நமது
செயற்கையாய் ஏற்பட்டதோ..??

என யோசிப்பது அநாவசியம்....

என் முடிவுதான் ,
இருந்தும் உன் நன்மைக்கும் சேர்த்துதான்....
இருவர் திறமையிலும்
வித்தியாசம் உண்டு..
நான் பயனாவேன்.......
நீயும் பயனாவாய்...


புரியாவிட்டால் பரவாயில்லை
தெரியக்கூடவா இல்லை
உனக்கு ?

இனி நம் பயணத்தை
இரண்டாக்குவோம்....!!
நீ தனியாய் செல்
நானும் இனி தனியாய்

தனித்தன்மையை வளர்க்க...
நம் நட்பை பலி கொடுக்கவில்லை,
கொஞ்ச காலம்......
அடமானம் வைக்கின்றோம்....


ஓடும் குதிரையில்
முன் குதிரைக்குதான் மதிப்பு
குழுவுக்கு எந்த நாளும் கிடையாது,,,,,,


அலுவலகத்தில்,
என் எதிரில் நீ அமர்ந்தாலும்...
என் கண்ணுக்கு இனி தெரியப் போவது..
என் பாதையும்
என் பயணமும்....


உன் வாய்ப்பைக் காட்டி மகிழும்
உனக்கு
என் தோல்விகள்
புரியாத போது ...!


இந்த கடிதம் மட்டும்
எப்படி புரியும்... நண்பனே.....?

எங்கோ படித்தேன்

"நானும் அவனும் நகமும் சதையும்தான் வெட்டி விட்டான் என் வளர்ச்சி பிடிக்காமல்"


நம்மில் யார் நகம்
நம்மில் யார் சதை....


இப்படிக்கு தயாஜி வெள்ளைரோஜா

டிசம்பர் 19, 2009

ப(பி)டித்த ப(மு)த்து கட்டளை.... சுஜாதாவிடமிருந்து....


சுஜாதாவின் பத்து கட்டளைகள் (இது அவரின் முத்து கட்டளைகள்)

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.
குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும்

(பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்).
எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.


தொகுப்பு தயாஜி வெள்ளைரோஜா

டிசம்பர் 18, 2009

x-சும் y--யும்










அந்தத் தினம் வென்றது ஒரு எக்ஸ்! அந்தப் புள்ளி முட்டையின் அருகில் வந்து சேர்ந்தது அதன் மேல் அழுத்தி அதனுள் ஒரு துளையிட்டு உள்ளே புகுந்து வாலைப் புறக்கணித்துவிட்டு தலை மட்டும் உட்புறத்தில் சென்று சற்று விரிந்து முட்டையின் உட்கருவுடன் ஜோடி சேர்ந்து கொள்ள இனிமேல் மற்றவர் எவரும் உள்ளே வர வேண்டாம் என்று முட்டை தன்னைச் சுற்றி திரை அமைத்துக் கொள்ள…
அப்போதுதான் அவள் பிறந்தாள். அவள் அவளான ஒரு பெண் என்று நிர்ணயிக்கப்பட்ட அந்தக் கணம். மறுதினம் அம்மா காலை எழுந்து காப்பி போட்டு, மூத்தவனைப் படிக்க எழுப்பி, பாத்திரம் தேய்க்கப் போட்டு, வாசல் தெளிக்த்துக் கோலம் போட்டு, பாட்டிக்கு ஓட்ஸ் கஞ்சி வைத்து, வென்னீர் போட்டு, அப்பா பேப்பர் படித்து, ரேடியோவில் பக்தி கேட்டு, பல் தேய்த்து, காப்பி சாப்பிட்டு, குளித்து கந்தனை முணுமுணுத்து விட்டு…
அவர்கள் தினசரி அவசரங்களில் அதை முழுவதும் மறந்து விட்டார்கள். அந்த முட்டை பேராசை பிடித்தது போல் வளர ஆரம்பித்தது.

- (நன்றி) எப்போதும் பெண், மங்கையர் மலர் – 1982.

(கரு, உரு, பெறுதலையும், மனித மறதிகளையும்,..... சுஜாதாவால் மட்டுமே இப்படி சொல்ல முடியும்...!)

சுஜாதாவுக்கு...ஜே....

படித்ததை பகிர்கின்றேன்,,,


படித்ததைப் பகிர்கின்றேன்.....



எப்படி எழுதணும்?



– சுஜாதா தமிழ் எழுத்துலகில் பலருக்கும் ஆதர்ஸ நாயகன் அமரர் சுஜாதா அவர்கள். அவரிடம் ஒரு மணிநேரம் பேசிய அனுபவத்தை மட்டுமே மூலதனமாக வைத்து எழுத்துலகில் ஜெயித்த பலரை அடையாளம் காட்ட முடியும். மிகச் சிறந்த உதாரணமாக பாலகுமாரனைச் சொல்லலாம். அவரும் இந்த உண்மையை எந்த மேடையிலும் தயக்கமின்றி ஒப்புக் கொள்வார். அப்படி என்னதான் சொன்னார் சுஜாதா…


புதிதாக எழுத வருபவர்கள்…


அல்லது ஏற்கெனவே எழுதியும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என துவண்டு போகிறவர்களுக்காக அவர் தந்த சில குறிப்புகள்.


இதை ப்ரேம் போட்டும் வைத்துக் கொள்ளலாம், தப்பில்லை!



1. தப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். ‘துருவனும் குகனும்’ என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, ‘போலீஸ் செய்தி’க்கு அனுப்பாதீர்கள்.



2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். ‘பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்’ என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.



3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி…



4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.



5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். ‘உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.’ என்று சொல்வதை விட ‘துப்பினான்’ என்பது மேல்.



6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். ‘அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்… இத்தியாத்திக்குப் பதிலாக, ‘அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.



7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதை மாந்தர்களுக்குச் சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித் தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.



8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதைவிட ‘போனான்’ என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக ‘னான்’ என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.



9. இரண்டு பக்கமும் நெருக்கமாக எழுதாதீர்கள். நிறைய இடம் விட்டுப் பளிச்சென்று நல்ல பேப்பரில் எழுதுங்கள். முதல் பக்கத்தை மட்டும் மூன்று நான்கு பிரதிகள் வைத்துக் கொள்ளுங்கள். திரும்பி வந்தால் உடனே மற்றப் பத்திரிக்கைக்கு அனுப்ப செளகரியம்.



10. பத்திரிக்கை ஆபீசுக்கு நேராகப் போய்க் கதை கொடுக்காதீர்கள். அங்கே கிடக்கும் கதைக் குப்பைகளைப் பார்த்தால் ரொம்பச் சோர்வாக இருக்கும்.



11. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது. எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.



-சுஜாதா எழுதிய ‘தோரணத்து மாவிலைகள்’ புத்தகத்திலிருந்து!



.......தயாஜி வெள்ளைரோஜா.......

சுஜாதா சொன்னது....


கீழ்க்காணும் கேழ்விகளின் அருகில் ஒரு பென்சிலால் விடை எழுதிப் பாருங்கள்.
(பேனாவால் எழுதினால், அப்புறம் மாற்ற முடியாது )

1. 01.சம்பளத்தில் தர்ம காரியங்களுக்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள்?

2. 02.எத்தனை கடிதங்களுக்கு பதில் எழுதுகிறீர்கள்?

3. 03.எத்தனை மணி நேரம் வீட்டை ஒழித்து சுத்தப் படுத்துகிறீர்கள்?

4. 04.எத்தனை மணி நேரம் குடும்பத்துடன் செலவிடுகிறீர்கள் ?

5. 05.எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?

6. 06எத்தனை முறை வாக்களித்துள்ளீர்கள்?

7. 07.அரட்டை அடிக்காமல் எத்தனை மணி நேரம் உண்மையாக வேலை செய்கிறீர்கள்?

8. 08.உங்களுக்கு எத்தனை ஆப்த நண்பர்கள்?

9. 09தினம் எத்தனை மணி நேரம் வேண்டாத வேலைகளைச் செயகேறீர்கள்?

10. 10.எத்தனை மணி நேரம் புத்தகம் படிக்கிறீர்கள்?

11. 11.எத்தனை மணி நேரம் தொலைக் காட்சி பார்க்கிறீர்கள்? என்ன பார்க்கிறீர்கள்?

12. 12.போனவருடம் எத்தனை பேருக்கு புத்தாண்டு,பொங்கல் வாழ்த்து அனுப்புநீர்கள்?

13. 13.பாடல்கள் மட்டும் எத்தனை மணி நேரம் கேட்கிறீர்கள்?

14. 14.தினம் எத்தனை மணி நேரம் செய்திப் பத்திரிக்கை படிக்கிறீர்கள்?

15. 15.எத்தனை மணி நேரம் சும்மா இருக்கிறீர்கள்?

16. 16.தினம் எத்தனை மணி நேரம் பேருந்து,ஈருருளிகளில் பயணிக்கிறீர்கள்?

17. 17. பாடசாலையில் உங்களுக்கு பிடித்த பாடம் எது?

18. 18. இப்போது, தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகை யார்?


இந்த பதினெட்டுக் கேள்விகளுக்கும் பதிலை எழுதிவிட்டு ஒருவாரம் கழித்து அவற்றைப்பாருங்கள், உங்களை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.கீழ்க்கண்டவற்றில் ஒன்றை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.


1. 01.சோம்பேறி


2. 02.சாதாரண மனிதன்


3. 03.நல்ல குடிமகன்


4. 04.அறிவு ஜீவி


(என்னங்க கண்டுபிடிச்சாச்சா......???? பார்த்துங்க யாருக்கும் 5-வதா ஏதும் வந்திட போகுது........!!)


நன்றி : ஆனந்த விகடன்


தொகுப்பு . தயாஜி வெள்ளைரோஜா......

சுஜாதா....


சுஜாதா பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம்...

1935ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சுஜாதா என்கிற ரங்கராஜன் ஒரு பொறியியல் பட்டதாரி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் இளங்கலைப் படிப்புக்குப் பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மின்னணுவியல் படித்தார். மத்திய அரசு விமானப் போக்குவரத்து இலாகாவிலும் பங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலும் 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார். ‘பாரத் எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும் ப்போது இரண்டு நிறுவனங்களில் ஆலோசகராக பணிபுரிந்தார். அம்பலம் என்னும் இணைய இதழுக்குப் பொறுப்பாசிரியராக தனது இறுதிக் காலம் வரை பணிபுரிந்தார். தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இவரது முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக பிரசித்தி பெற்ற ‘வாஸ்விக்’ விருது பெற்றார். 1993இல் மைய அரசின் அறிவியல், தொழில்நுட்ப விருதானNCTC விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையை பரப்பியதற்காக சுஜாதாவிற்கு அளிக்கப்பட்டது. தனது மகத்தான படைப்பாற்றலால் 50 ஆண்டுகாலம் தமிழ் வாசக பரப்பை ஆக்ரமித்திருந்த சுஜாதா 27.2. 2008ல் சென்னையில் மறைந்தார். அவரது மனைவி சுஜாதா ரங்கராஜன். மகன்கள்: ரங்க பிரசாத், கேசவ பிரசாத்.

(நன்றி உயிர்மை)

இப்படிக்கு தயாஜி வெள்ளைரோஜா..

சுஜாதாவின் வழி, தனிவழி புது வழி...





சுஜாதாவின் "சிறு சிறுகதைகள்" என்ற புத்தகத்தில், என்னைக் கவர்ந்தவற்றை இங்கே இடுகின்றேன்..... இது கொஞ்சம் சுவாரஸ்யமான ஒன்று நீங்களும் முயற்சிக்கலாம்.....(நான் இன்னும் ஆரம்பிக்கலை.. வேலை அதிகம்) கதையின் தலைப்பு நீளமாக இருக்கலாம்..


ஆனால் கதை இரண்டே இரண்டு வரிகளில்தான் இருத்தல் வேண்டும்.. கவனியுங்களேன்.. இரண்டு வரிகளின் தான் கதை எழுதப்பட வேண்டும்........ இரண்டு வார்த்தை கதைகள்:



1. தலைப்பு : கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்

கதை : "ஐயோ சுட்டுடாதே!"


2.தலைப்பு : சுவரில் ஆணியடிப்பவன் கேட்ட கடைசி வார்த்தைகள்.

கதை : "கன்சீல்ட் வயரிங்ப்பா"


3.தலைப்பு : ஆராய்ச்சி சாலையிலஇருந்து ரோபோ வெளியே வந்தது

கதை : "டாக்டர் க்ளோஸ்"


4.தலைப்பு : வசந்தாவின் கணவன்

கதை : "சுசீலாவோடு எப்படி?"


5.தலைப்பு :விடுமுறைக்கு வந்த கார்கில் வீரனும் கிராமத்து

நண்பர்களும்

கதை : "ரம் கொண்டாந்திருக்கியா?"


6.தலைப்பு : மகன் தந்தைகாற்றும்

கதை : "இ.மெயில்"


7.தலைப்பு : என்னை யாரோ பார்க்கிறார்கள்

கதை : கண்ணாடி



8.தலைப்பு : ஆபிஸில் எத்தனை ஆம்பளைங்க?

கதை : முதலிரவில் கேள்வி.

டிசம்பர் 17, 2009


21 வயதில் "கெடா மாநில எழுதாளர் சங்கம்" நடத்திய சிறுகதை போட்டியில் "ஆறுதல் பரிசு" கிடைத்தது, ஆறுதல் அடையாத "கை" இன்னமும் எழுதுகோளை இயக்குகின்றது.....

அம்மா காட்டிய அடையாளம்....


அன்று வாங்கிய முத்தம்...இன்னமும் ஈரம் காயாமல் ...இதயத்தை இயக்கிக்கொண்டு இருக்கின்றது...அம்மா

நம்பிக்கை என்பது நம்புவது மட்டுமல்ல.... நம்பிக்கையோடு இருத்தல்...

டிசம்பர் 11, 2009


டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் இலக்கிய விருது, இளம் கவிதை துறைக்காக எனக்குக் கொடுத்த மலேசிய எழுத்தாளர் சங்கத்திற்கு நன்றி...
௨௦௦௯ (23வயதில்//)

எழுத படிக்க தெரியாதா அம்மா...
நான் பிறக்கும் முன்னே எழுத ஆரம்பிச்சா அப்பா.....
என் எழுத்து இவர்களுக்கு சமர்ப்பணம்...

இப்படிக்கு ,
தயாஜி வெள்ளைரோஜா

நவம்பர் 21, 2009

ஹலோ சொல்லேன்...



ஒரு நொடியில்,
இறந்து பிறந்த......
அனுபவம் உண்டா.....?

எனக்கு இன்றுதான்
வாய்த்தது.....
முதல் பாதி நொடியில்
இறந்தேன் ...
மறு மீதி நொடியில்
பிறந்தேன்.......

எப்போதும் இல்லாத
‘அந்த’
எண்ணத்தின் , திடிர் உபயத்தால்........

கைபேசியில் அழைக்கத்
தொடங்கினேன்..,;
ஒரு பதிலும் வருவதா இல்லை..,
கலவரம் மேலோங்க.....

சம்பந்த.. சம்பந்தா..
எண்களை அழுத்தி.. என்னமோ
பேசினேன்,

இனம் புரியாத பதட்டம்....
அடிவயிற்றில்..... தாக்கம்..
விளங்காத நோக்கம்...

மீண்டும் அவளுக்கு
அழைப்பை அனுப்பினேன்..

“வணக்கம் சொல்லு..டா..”

“அப்பாடா....!!!”

தயவு செய்து இனி அழைத்ததும் ,
எடுத்திடேன்.....
தோழியே...
இன்னொரு முறை தாங்காது......

.........தயாஜி வெள்ளைரோஜா.......

செப்டம்பர் 21, 2009

ஞானப்பார்வை

சூரியன் விழிப்பதற்குள், விழிப்பவர்களால் பல காரியங்கள் சாதிக்க முடியும் என்பதை ஏதோ புத்தகத்திலிருந்து படித்து........
கவனிக்க..! படித்துதான் தெரிந்துக்கொண்டேன்.

இது என் தந்தையின் பழக்கம், இன்று என்னால் புத்தகத்தை அனைக்காமலும் படிக்காமலும் துங்குவது இயலாத காரியம்.
இயன்ற காரியம் கைத்தொலைபேசியை கண்டுக்கொள்ளாமல் இருப்பது இல்லையேல் என் புத்தகக்காதலிகள் கோவம் வந்துவிடும்.
அப்புறம் திருப்பும் பக்கமெல்லாம் புரியாத மொழிகளைக் காணநேரும்.

இப்போதெல்லாம் இரவில் மூக்கடைப்பு பிரச்சனை இருப்பதால், சுவாசத்தை சீராக்கும் முயற்சிக்குப் பின் துங்க மணி இரண்டுக்கு மேல் ஆகும். புத்தகக்காதலிகள் இதற்கு பேருதவி புரிகின்றார்கள்.

அப்படி ஒரு நாள் விடிந்து விட்டதென அறியாமல் தூங்கிய என்னை, அதிரடியாக எழ வைத்தது ஒரு குறுஞ்செய்தி (கடுஞ்செய்தி..!)

‘இன்று அலுவலகச் சந்திப்பில் அனைவரும் 9.00க்கு வந்திவிடவேண்டும், சில முக்கிய முடிவுகள் எடுக்க................’

அதை தொடர்ந்து படிக்க நேரமில்லை, இன்னும் எஞ்சி இருப்பது முப்பது நிமிடம் மட்டும். சாதாரணமாக எப்படியும் இருபது நிமிடப்பயணம். பத்து நிமிடத்தில் தயாராக வேண்டும்..!

சாத்தியமா..?
யோசிக்காமல் அதீத வேகத்தில் புரப்பட ஆயுத்தமானேன்.

எடுக்க வேண்டிய பொருட்கள்பற்றி கவலையில்லாமல் மோட்டாரில் பயணிக்கத் தொடங்கினேன்

(ஏனோ என் வாழ்க்கை பயணம் நிறைந்ததாகவே இருக்கின்றது)

வீட்டிலிருந்து ஐந்தாவது நிமிட தூரத்தில் இருக்கும் அந்த பெரிய மரம் என் தலையில் விழ்ப்போவது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தெரியாத ஒன்றுதான்....

இதோ இன்னும் ஐந்து வினாடியில் அச்சம்பவம் அரங்கேற்றம் காணப்போகின்றது. இன்னும் மூன்று வினாடிகள்....
........................................................................................................



சில தினங்களுக்கு முன்பு,

“அத்தை கதை தெரியுமா..?”
“என்ன கதை...? ஆரம்பிச்சிட்டியா..!”

அத்தைக்கு எப்பவும் நான் பேச ஆரம்பிச்சா கொஞ்சம் பயம் தானாகவே வந்துவிடும். அதும் அவங்களோட நம்பிக்கையைப் பற்றி பேசிட்டா...... அவ்வளவுதான்.
அவங்களும் என்னதான் செய்வாங்க.., ஆரம்ப காலத்திலிருந்தே ஊறிப்போன நம்பிக்கைகள். சடங்கு சம்பிரதாயம் , காணிக்கை... இன்னும் சிலர் அவங்க ஏமாற அவங்களே பணம் தரும் சின்னப்பிள்ளைத்தனம். இப்படி அடிக்கிக்கிட்டே போகலாம்.

எதைக் கேட்டாலும் ஒரே பதில்...'.எல்லாம் அவன் செயல்’
இங்கு எல்லாம் ‘அவனவன் செயல்’ என்பதை எப்போ புரிந்துக்கப் போறாங்க...

கடவுளே....! பாருங்க அவங்களோட பழக்கம் எனக்கும் தொத்திக்கிச்சு. எல்லாத்திக்கும் ஆகாயத்தைக் காட்டி தன் மேல் தப்பில்லைங்க.. கோழைத்தனம். வேற என்ன சொல்ல..?
அங்கப் பாருங்க எங்க அத்தையை அவங்களோட குரு படத்துக்கு பூஜை போடப்போறாங்க..!

ஒரு கூட்டம் கடவுள்னு சுத்துது.. மற்றது இப்படி மனுஷங்க பின்னை குருன்னு சுத்துது.

பள்ளியில் ஆரம்பக்கல்வியை கத்துக் கொடுத்த ஆசானை தெரியாது, எங்கயோ ஒரு மூலையிலெ இருக்கிற கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத மனுஷனுக்கு இங்க இருக்கறவங்க செய்ற வேலை இருக்கே,, கேட்டா சேவையாம்....

அன்னிக்கு அப்படித்தான் வேலை முடிஞ்சி வரும்போது ஒரு விபத்து. நானும் யாரா இருக்கும்னு பார்க்கபோனேன். ரத்தவெள்ளத்தில் துடிக்கிறவனுக்கு தூக்கிவிட ஒருத்தர்தான் முயற்சி செய்தாரு.

மத்தவங்கெல்லாம் அங்க பேசின வார்த்தை என்ன தெரியுமா.. அந்த பையன் அந்த ரோட்டிலே வேகமா மோட்டரை ஒட்டிகிட்டே இருப்பானாம் , அங்கவுள்ளவங்க கொடுத்த சாபம்தான் இப்படி பலிச்சிருச்சாம். இதே உயிர் பொயிட்ட சொல்லுவாங்களா சாபம் பலிச்சிருச்சி தான்தான் சாபம் கொடுத்தேன்னு ஒப்புக்குவாங்களா...?
சாமி பேரை சொல்லி உயிரை பலி கொடுக்கும் இவங்களைப் பொருத்தவரை...இதெல்லாம் சாதாரணம்.. காச்சள் வந்தா கண்ணாரு.. வீடு எரிஞ்சா செய்வினை.. காணாபோனா வெத்தலை பார்த்து தேடறது..

“அத்தை நீங்க குரு..குருன்னு சொன்றிங்களே..அவரைப்பத்தத இனையத்துல ஒருத்தர் எழுதியிருக்காரு”

“ம்...அப்படியா என்ன எழுதியிருக்காரு.... அவரோ சீடரா..?”

“ஆரம்பிச்சுட்டிங்களா..? முழுசா கேளுங்க அப்புறம் தெரியும் அவர் சீடரா.. நல்ல மனுசனான்னு”

“புரியும்படியே நீ பேசமாட்டியா..? எப்பப்பாரு ஏதோ சாமியாரு மாதிரி பேசர..!!”

“அத்தை என்னை அந்த பட்டியலில் சேர்த்துடாதுங்க.. சரி சொல்றேன் கேளுங்க, உங்க குரு கையில் விபூதி எடுக்கிறது மோதிரம்... தங்க சங்கிலி.. எடுக்கிறது எல்லாம் எப்படி தெரியுமா..? ”

“அது அவங்க.. செய்த தவத்துக்கு கடவுள் தந்த அருள்.. மறந்துட்டியா உங்க மாமா சாவபொழைக்க இருந்தாரு அவரை குணமாக்கினது அந்த குரு கொடுத்த விபூதிதான்.. ”

“மருந்து கொடுத்த டாக்டரை மறந்துட்டிம்க்களே.. அத்தை..?”

“உன்கிட்ட பேசமுடியாது..”

“நல்லது ,! அப்போ கேளுங்க. சில ஒரு மூலிகை வேர் இருக்கு அதை அரச்சி கையில் பூசி காயவைச்சா... அது கையில் இருக்கிறது கண்ணுக்குத் தெரியாது.. ஆனா... அதை தடவனப்பிறது ரெண்டு கையையும் உரசினா.. விபூதி வரும்..!!”

“அப்படின்னா... அவரு செய்றது கண்கட்டு வித்தைன்னு சொல்றயா..? நான் நம்பலை”

“எப்பதான் நம்பறிங்க..? அடுத்ததா இன்னொன்னு சொல்றேன்.. சொல்றேன் என்ன காட்டுறேன் பாருங்க.. அந்த குரு செய்ற வேலையை..”

அத்தையிடம், எனது மடிக்கனினியில் நண்பன் அனுப்பியுள்ள வீடியோப் படத்தைக் காட்டினேன். அதில் ஒருவர் காவியுடையுடன் மக்களுக்கு ஆசி வழங்கியப்பின் ஒருவருக்கு தன் கையில் தங்ககிலியை வரவைத்துக் கொடுத்தார்.... பொருமை இழந்த அத்தை.

“இது எப்பவும் நடக்கிறது தானே இதில் என்ன இருக்கு,,?
அவருக்கு கிடைக்கனும்னு விதி இருக்கு..”

“விதி இருக்கா,..? இதெல்லாம் சதி அத்தை சதி..! நல்லாப் பாருங்க.. ஒருத்தர் இவர் கையில் தட்டை கொடுக்கறாரா..?”

“ம்”

“இவரும் தட்டை வாங்கி நிக்கிறாரா..?”
“ம்”

“நல்லா பாருங்க.. அத்தை அந்த தட்டின் கீழ் இருந்துதான் ஏற்கனவே ஒட்டி வைச்சிருந்த சங்கிலையை இவர் எடுத்து கையில் வச்சி..... கொஞ்ச நேரம் ஏதோ பேசி திடிர்னு சங்கிலி வந்த மாதிரி வந்தவருக்கு கொடுக்கிறாரு தெரியுதா..?”

“அப்படின்னா....???!!!”

“அதான் தெரியுதே இதெல்லாம் ஏமாத்து வேலைன்னு .. இப்பவாவது நம்பறிங்களா..?”

“எது எப்படியோ , எல்லாத்திற்கும் காரணம் இருக்கும் குரு இப்படி செய்றானுன்னா.. கண்டிப்பா காரணம் இருக்கு உனக்கு தெரியலை அவ்வளவுதான்..”

“உங்களுக்கு தெரியுதா..?”

“நான் நம்பறேன் அவரை. அதனால அதைப் பத்தி தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் இல்லை”

“ஆமா அத்தை காரணம் இருக்குதான் உங்களையெல்லாம் ஏமாற்ற...........அதோ அங்க பாருங்க அந்த பயித்தியக்காரனை...! எப்பவும் இந்த ரோடிலேதான் சுத்துது அதுக்கும் ஏதும் காரணம் இருக்குமா...?”
எங்கள் பேச்சை முற்றவிடாமல் மாமா வந்ததால் பேச்சை அத்தோடு நிறுந்தினோம்.
.....................................................................................................






இன்னும் இருப்பது இரண்டு வினாடிதான். வேகாமாக மோட்டாரில் சென்றுக் கொண்டடிருந்த சமயம் சட்டென்று அந்த பயித்தியக்காரன் குறுக்கே வந்து தடுத்தான்..!!!

அவனை மோதாமல் இருக்க மோட்டாரை நிறுத்த அதும் கொஞ்சம் இழுத்தவாரு அவனருகில் நின்றது. அப்போது அவனுக்கு பின்னால் அந்த பெரிய மரம் விழுந்தது..!

இன்னும் நான் இரண்டு அடி முன்பு சென்றிருந்தால் நிச்சயம் அந்த மரம் என் தலையில் விழுந்திருக்கும்.
இவனுக்கு எப்படித் தெரியும்..? யாரிவன் பயித்தியம்தானே..?

ஒரு வேலை அத்தை சொல்வது போல அனைத்திற்கும் எதாவது காரணம் இருக்குமா..?
அதை எப்படித் தெரிந்துக் கொள்வது..?


...................தயாஜி வெள்ளைரோஜா....................

செப்டம்பர் 18, 2009

கேசவன்............

கேசவன்............


யார் இந்த கேசவன்..? என்பதை தெரிந்துக் கொள்ளும் முன்பாக..... என்னைப் பற்றி சொல்லிவிடுகின்றேன். சமீக காலமாக, என் பார்வைக்கு தெரிபவர்கள் எல்லோரும் ஏற்கனவே பழகிய முகமாய் தெரியத்தொடங்கினர். அதை நம்பி சிலரைப் பார்த்து... முறைப்பை பரிசாகவும் பெற்றுள்ளேன்.

சாப்பாட்டு கடையில் ஒருவரை பார்த்து எங்கோ பார்த்த நினைவில் சிரித்து வைத்தேன் .அவரும் பதிலுக்கு அருகில் இருப்பவரிடம் ஏதோ சொல்லிவைத்தாள்.இதற்க்குப் பிறகு அதைப்பற்றி விவரிக்கவேண்டாம், (மானப்பிரச்சனைதான்..!)

என் பள்ளிக் காலம் முதல் இன்று வரை நான் நினைவில் வைத்துக் கொள்ளாத முகங்கள் எத்தனையோ.... என் முகமே எனக்கு சரியாக ஞாபகம் இல்லை.


சிலர் செய்யும் செயல்களும் ,நடவடிக்கைகளிலும், பேசும் மொழியிலும் என்னால் பழைய முகங்களை கொஞ்சம் மயக்கநிலையில் உணர முடிகின்றது. நீங்களே கூட என்னுடன் பேச ஆரம்பித்தால், உங்கள் செயலோ,நடவடிக்கையோ எனக்கு என் பழைய முகங்களை நினைவுக்கூரும்.அதிலிருந்து உங்கள் முகம் மாறுபடும். நாளை வேறு முகம் தேவை உங்கள் முகத்தை எனக்கு நினைவுப்படுத்த..!

அப்படி எனக்கு பல முகங்களை நினைவுப்படுத்தியது கேசவனின் முகம். நம்புவீர்கலா.... எட்டு வயதில் நான் பார்த்து, பழகி, சண்டையிட்டு, சேர்ந்து, கிண்டல்செய்து, அடிவாங்கி, அடித்து, ......... விளையாடிய முகம் ,மீண்டும் பார்க்கின்றேன் பதினைந்து வருடம் கழித்து.....!

இவனை மீண்டும் பார்த்தது.. பெர்ரிரிரிரிரியய்யய
இ டை வே ளை யிலிருந்து மீண்டு பார்த்தது.....12.9.09 RTM-ல் நடைபெற்ற தீபாவளிக்கான ஓலி/ஒளிப்பதிவில்.

அந்த வயதில் அதிகம் பேசிய நான் இன்று அறிவிப்பாளராக பேசி உங்களோடும் இப்போது பேசுகின்றேன்..

அந்த வயதில் அதிகம் ஆடிய அவன் இன்று புகழ்பெற்ற நடனக்குழுவில் நடனமாடுகின்றான்.

அவனோடு பேசிய நான் மறுபடியும் நினைவால் பள்ளி சீருடை அணிந்தேன். இரண்டு வாரம் தோய்க்காத சப்பாத்து.
(நினைவில் மட்டும் சுத்தம் எதற்கு)........

எங்கள் உரையாடல்
“அதாண்டா காதுக்கு வெளியெகூட முடி இருக்குமே..?”

“அது ராமச்சந்திரன் சார்...... அவருகிட்ட வாங்காத அடியா..? என்னா அடி வாங்குவோம்”

“அந்தாளு பரவாயில்லை அந்த ‘சொட்டை’ (ஐயா மன்னிக்கவும் நண்பருடன் இப்படித்தான் உரையாடினேன்) அடிப்பாகப்பாரு... முதுகிலயே .. கடவுளே... சாவடிச்சாருடா.. ”

“ஞாபகம் இருக்கா அப்பவே நாம பாட்டுக்கு டான்ஸெல்லாம் ஆடினோம்.”

“ம்....அதான்....ம்.. ஆ... ‘நீ கட்டும் சேலை மடிப்பிலே’ அந்த பாட்டுக்குதானே நீ, நான் காளிதாஸு,திலகா, சரோஜினி அப்புறம் இன்னொரு பிள்ளை ..!பேரு மறந்துட்டேண்டா..!!!”

“விடு,..விடு.. அப்பயே ஆடினவண்டா நீ இப்பவும் ஆடற..ஓகேதான்..!”

“நீ மட்டும் கதை சொல்லி கதை சொல்லியே இப்போ கதை எழுதற..”

“எப்படா கல்யாணம்..?”


இதற்குமேல் எங்கள் அந்தரங்கம் .அது வேண்டாம் உங்களுக்கு.

பள்ளியில் நாங்கள் ஆடிய நினைவு மட்டுமல்ல அந்த நிழற்படமும் (மன)கைவசம் உள்ளது. என் வரையில் என்னை சுற்றிலும் நடப்பவைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்டுவிட்டது..!
யாரால் என்பது தெரியாது..
நானாகக் கூட இருக்களாம்..
ஏன் நீங்களாகவும் இருக்களாம்..?

பார்த்த அவன் முகம் எனக்கு பல முகத்தைக் காட்டியது..

மலர் - இவள் அழகானவள் . கேசவன் யோசிச்சன் நடக்கலை.
காதலிக்கத்தான் ,!

கோமதி - இவளுக்காக இவளின் தம்பிக்கெல்லாம் சாப்பாடு வாங்கி
தந்திருக்கேன்

புஸ்பா - என் மீது அதிக அக்கறைக் கொண்ட ஆசிரியை

சுப்ரமணியம் - எங்கள் செல்ல ஆசிரியர்.

இன்னும் இருக்கின்றது பல முகங்களும் பல மனங்களும்.....

இதைப் படிக்கும் நீங்கள், என் நினைவிற்கு வர வாய்ப்புள்ளது. தேடிக் கொண்டிருக்கின்றேன். நீங்களாக இருந்தால் வேலை மிச்சம்..!

யோசித்துப்பாருங்கள் நான் உங்களுக்கு எதையும் நினைவுப் படுத்துகின்றேனா..?

................................தயாஜி வெள்ளைரோஜா........................................

செப்டம்பர் 17, 2009

அடுத்தது நீ......

...... #3/8 முதல் 14/8 வரை மின்னல்fm (மின்னல் பன்பலையில்) நாள் ஒன்றுக்கு 2 நிமிடம் முதல் 3 நிமிடம் வரை ' எண்ணங்கள் வண்ணங்கள் ' தொகுப்பில் பிற்பகல் மணி 2.30க்கும், ' நட்சத்திர மேகம் ' தொகுப்பில் இரவு மணி 9.55க்கும் ஒலியேறிய தொடர் குறு நாடகம் இது. இதன் கடைசி முடிவை நேயர்கள் அழைத்து சொல்லவேண்டும்...அவர்களின் முடிவும் இக்கதையின் முடிவும் ஒத்துப்போகுமனால்... சொன்னவருக்கு மடிக்கனினி கிடைக்கும் (எழுதியவருக்கு .......?????? )இதற்கு சிரமம் பாராமல இசையாக்கம் செய்து மேலும் மிரட்டியவர் நண்பர் ஆனந்த....நடித்தவர்கள் தேன்மொழி.லோகேஷ்வரி கணேசன்,பொன் கோகிலம், சரஸ், சித்ரா.ஆனந்த.... அவரோடு கதைசொல்லியாக "நான்".
மர்மக்கதை எழுதும்படி மேலதிகாரிக் கேட்டுக் கொண்டதற்கினங்க.... ஒரே நாள் இரவில் எழுதி முடித்தேன்..! எனக்கே இது சற்று ஆச்சர்யம்தான். இருந்தும் , என் வாழ்வில் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தால் ........இதுபோன்ற கதைகள் பெரிய ஆச்சர்யத்தை எனக்கு ஏற்படுத்துவதில்லை.....
என் கதைகளிலும் கவிதைகளிலும்..... ஏதாவது ஒரு மூலையில் 'நான்' (நானாகா முயற்சிக்கும் நான் ) ஒலிந்திருப்பேன்.......
படைத்தவன் இத்துடன் விடைபெறுகின்றேன்.... இனி படியுங்கள்......வாய்ப்பிருந்தால் கருத்து சொல்லுங்கள்இல்லையேல் விடைபெறுங்கள்.......! .............................#

#....................................#....................................................#




அடுத்தது நீ.............(1)


யாரும் எதிர்ப்பார்க்கவில்லை இப்படி நடக்குமென . அவளைத்தவிர.இது ஒன்றும் அவளுக்கு புதிதும் அல்ல....!
ஆரம்பத்திலிருந்தே அவளால் பலவற்றைச் சரியாக யூகிக்க முடிந்தது.
சில உதாரணங்கள்..........
சிலரைப் பார்த்ததும், அவர்களின் பிறந்த தேதிகளைச் சரியாகச் சொல்லுவாள்.திரைப்படங்களும், வெற்றி பெறுமா இல்லையா என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுவாள்.சாலையில் செல்லும் போது அது விபத்துக்குள்ளாகும் என இவள் சொல்லும் ஐந்தாவது நிமிடம் குறிப்பிட்ட வாகனம் விபத்துக்குள்ளாகும்.
இவ்வாரு பலவற்றை சரியாக யூகித்தவள்தான் தேவி
அவள் நடப்பதை யூகிக்கின்றாளா..?அவள் யூகிப்பது நடக்கின்றதா...?
என்ற கேள்வி அவளது தோழிகளுக்கு வந்தது ........ அபாயம்....... அன்றுதான் ஆரம்பித்தது..
அபாயம் எப்படி ஆரம்பித்த்து என்பதை தெரிந்துக் கொள்ள காத்திருங்கள் நாளைவரை....................

#-------------------------------------#-----------------------------------------------#



அடுத்தது நீ .........(2)


அன்று ஞாயிறு, தேவியும் அவளின் இரண்டு தோழிகளான....
கஸ்தூரியும் கவிதாவும் தேவியின் வீட்டில் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அந்த இரண்டு தோழிகளின் பேச்சு எங்கோத் தொடங்கி தற்சமயம், முழுக்க முழுக்க தேவியின் அந்த அபூர்வ சக்தியை சுற்றியே இருந்தது. ஆம் அன்றுதான் அவர்கள் தேவிக்கு இருக்கும் யூகிக்கும் சக்திக்கு அபூர்வ சக்தி என்று பெயரிட்டனர்.
அவர்களின் பேச்சு இப்படியாக தொடர்ந்தது, “ சரி தேவி இப்போ நான் இந்த புத்தகத்திலே ஒரு பக்கம் திருப்புவேன்,........ அது எத்தனையாவது பக்கம்னு நீ சரியா சொல்லனும்....அப்படி சொல்லிட்டா..... உனக்கு அபூர்வ சக்தி இருக்குன்னு 100% நாங்க ஒப்புக்கொள்வோம் இல்லைனா..... அது அப்படி ஒன்னும் அபூர்வ சக்தி கிடையாது....எதார்த்தமா நடக்கறதை நீ சொல்றே அவ்வளவுதான்...சரியா..?’
என கேட்டாள் கஸ்தூரி.
அதற்கு கவிதா, “என்ன கஸ்தூரி அப்படின்னா நீ தேவியை நம்பலையா..?”
“சும்மாதான்..... நாமும் சோதிச்சுதான் பார்ப்போமே.... என்ன தேவி சம்மதமா..?”
தேவி சிரித்தவாரே,
“ஆமா பெரிய கண்டுபிடிப்பு உனக்கு என்ன நோபல் பரிசா கொடுக்கப் போறாங்க.......இந்த அபூர்வ சக்தியால நான் படும் கஷ்டம் எனக்குதான் தெரியும்...... ” “அப்படியென்ன பொல்லாத கஷ்டம்..?”
என இருவரும் வினவ....
அதற்கான பதிலை அந்த இருவரோடு செர்ந்து நாமும் தெரிந்துக்கொள்வோம்..
அதற்கு நாளைவரை காத்திருங்கள்.........
#-------------------------------------#-----------------------------------------------#



அடுத்தது நீ.....(3)



சமையல் அறையில் இருந்து மூவறும் வரவேர்பறைக்கு வருகின்றனர்.
கஸ்தூரி, “ஆமா ஏதோ கஷ்டம்னு சொன்னியே என்ன தேவி அது..?அந்த சக்தியால் நீ நடக்கறதை சொல்லிடற.....
அவ்வளவு ஏன் பரீட்ச்சைக்கு வரும் கேள்விகளைக் கூட சரியா கணிச்சு படிச்சு ‘பாஸ்’ ஆகிடற......
(சாப்பாட்டு தட்டின் சத்தம்.வானொலி சத்தம்)
உன் புண்ணியத்தில நாங்களும் ‘பாஸ்’ ஆகிடறோம்..!”
கஸ்தூரியின் இந்த கேள்விக்கு,
“ஹலோ நாங்கன்னு எதுக்கு என்னையும் சேத்துகற..நான் படிச்சுதான் பாஸ் ஆகிருக்கேன்..!” என்றாள் கவிதா.
அதற்கு தேவி,(லேசாக இருமிவிட்டு)
“படிச்சுதான் பாஸ் ஆகிருக்கியா...... சொல்லவே இல்லை....”
கவிதா,
(சிரித்தவாரே)
“இல்ல நாம் எல்லாம் படிச்சுதான் பாஸ் ஆகிருக்கோம்னு வேளியே சொல்லியிருக்கேன் அதான்..”
சட்டென்று தேவி,(அதிர்ச்சியுடன்,நடுக்கமானக் குரலில்) “அதான்..... அதான்...... என்னோட கஷ்டம் அதான் என்னோட பயம்........ ”
கஸ்தூரி,
“அப்படி சொல்றதுல என்ன கஷ்டம்..பயம் உனக்கு....... அதுக்கு ஏன் உன் கை இப்படி நடுங்குது.....?”
கவிதாவும் கஸ்தூரியும், (கத்துதல்)
“தேவி...தேவி..”
தேவிக்கு என்ன நடந்தது , அவளின் பயத்திற்கு என்னதான் காரணம்....
தெரிந்துக் கொள்ளக் காத்திருங்கள் பயமில்லாமல் நாளைவரை..........
#-------------------------------------#-----------------------------------------------#

அடுத்தது நீ.....(4)


ஏதோ பேச ஆரம்பித்த தேவி, பேச்சுத் தடுமாற மயக்கமடைந்து விழுகிறாள்.
இருவரும் , “தேவி.... தேவி....”
கஸ்தூரி , “கவிதா நீ பார்த்துக்கோ நான் போய் தண்ணி கொண்டுவறேன்..”
கஸ்தூரி,
“முருகா..முருகா தேவிக்கு ஒன்னும் ஆகக்கூடாது... ஒன்னும் ஆகக்கூடாது..காப்பாத்து ... காப்பாத்து.....”
கஸ்தூரியின் மடியில் படுத்திருந்த தேவியின் எடை கூடியது. அவள் தன் சுயத்தன்மையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தாள்.
கஸ்தூரி,
“கவிதா...... கவிதா..... தண்ணி எடுக்க அவ்வளவு நேரமா.. சீக்கிரம் இங்க வா......?”
(பக்கத்தில் இருக்கும் கடிகாரம், சட்டென்று கீழே விழுகின்றது.....)
(சூழ்நிலை மிக பதட்டமாக மாறுகின்றது......)
மீண்டும் கஸ்தூரி,
“கவிதா..கவிதா.. சீக்கிரம் வா.....” (காற்றின் வேகம் ஜன்னலை மோதியது..விசித்திர சத்தம் அறை முழுக்க பரவியது.....கண்ணாடிக்கிண்ணம் விழுந்து சுக்கு நூறாகின்றது.)
அப்போது தேவி கொஞ்சமும் தனக்கு சம்பந்தம் இல்லாதக் குரலில்,
“அவ..வரமாட்டா..அவ வரமாட்டா....”
பேசியது யார்..? தேவிக்கு என்ன ஆனது..? கவிதா எங்கே..?தெரிந்துக்கொள்ள கத்திருங்கள் நாளைவரை.....

#-------------------------------------#-----------------------------------------------#




அடுத்தது நீ.....(5)



(காற்றின் அழுத்தம் ஜன்னலை வேகமாக மோதியது...)
சட்டென்று வானொலியும் தொலைக்கட்சியும் மாறி மாறி இயங்க ஆரம்பித்தது.....
எதிர்பாராத வண்ணம் மின்சாரத்தடை ஏற்படுகின்றது
சமையல் அறையில் இருந்து கவிதாவின் குரல்.... “கஸ்தூரி எங்கே இருக்கே..... ”
தேவியிடமிருந்து விசித்திர சிரிப்புச் சத்தம்.
(சிரிப்புச் சத்தம் அறையெங்கும் எதிரொலித்தது )
கவிதா,
“கடவுளே இங்கே என்ன நடக்குது... ஒன்னுமே புரியலையே”
கவிதா தன் மடியில் படுக்கவைத்திருந்த தேவியை தள்ளிவிட்டு எழுந்தாள்.
(சத்தம் கெட்டல்)
அவள் செய்வதறியாது ,கஸ்தூரியையும் காணாது வெளியே ஓடத் தொடங்கினாள்,
வாசலை நெருங்கியவள், ஓடும் வேகத்தில் எதோ கால் தடுக்கி....கீழே விழுந்தாள்.. மின்சாரத்தடையால் சுற்றிலும் இருட்டு சூழ்ந்திருந்தது.
(இடி இடிக்கும் சத்தம்,அடை மழை சட்டென்று தூறும் சத்தம்)
மின்னலின் வெளிச்சத்தில் அவள்..அவள்... பார்த்தது....!
ஏதோ ஒரு உருவம் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்துக் கிடந்தது.இவளுக்கு மிக நெருக்கமான..பழக்கப்பட்ட ஒரு உருவம்தான் அது....
அந்த உருவம் கஸ்தூரியா..?
தேவியா..?
இல்லை வேறு யார் அந்த நேரத்தில் ரத்தவெள்ளத்தில்..?
தெரிந்து கொள்ள காத்திருங்கள் நாளைவரை......

#-------------------------------------#-----------------------------------------------#




அடுத்தது நீ.....(6)


(அலுவலக மதிய உணவு வேலை..)
“எங்க தேவா நீ சொல்லு அது யாரா இருக்கும்..? கேசவன் உனக்கு தெரியுமா அது யார்னு...? தெரிஞ்சா சொல்லேன் பார்க்கலாம்...?”
தேவா, “எங்களுக்கு எப்படி மணி தெரியும் ..! நீயே சொல்லேன்..”
மணி,“அட..அது எப்படி முடியும்....நான்தான் அப்பவே சொன்னேனே..கதை மட்டும்தான் சொல்லுவேன் முடிவை பேப்பர்ல கதை பிரசுரம் ஆனதும் வந்த நீங்களே படிச்சு பார்த்து தெரிஞ்சிக்கோங்கன்னு.. சரின்னுதானே சொன்னிங்க....... நீங்களே கண்டு பிடிங்க..?”
கேசவன், “மணி.....” (முடிப்பதற்குள்)

மணி தொடர்ந்து,
“உனக்கு மட்டும் என்ன ஹிந்தில சொல்லனுமா..? கதை பேப்பர்ல வந்ததும் படிச்சுப் பார்த்து தெரிஞ்சிக்கோ..என்ன..!”
கேசவன்
“அதுல்ல மணி.. ” மணி கொஞ்சம் சிரித்தவாறே
“அதுல்லனா வேற எது.....?”
தயங்கியவாறு கேசவன்,
“ஒன்னு கேட்கனும்..?”
“கடனைத்தவிற வேற என்ன வேணும்னாலும் கேளு நண்பா..?”
கேசவன், “இந்த மதிரி கதை உன்னால எப்படி யோசிக்க முடிந்தது..?அதும் நீ சொல்லும்போதே அப்புறம் என்ன நடக்கும்னு..எங்க மனசு பதபதக்கற மாதிரி எப்படி எழுத முடிந்தது..?”
மணி, “சொன்னா நம்புவியா..?”
“ம் சொல்லு..!”

“எனக்கும் அந்த அபூர்வ சக்தி இருக்கு.....!”
கேசவன் ,(ஆச்சர்யமாக)
“என்ன மணி சொல்ற உனக்கும் அந்த சக்தி இருக்கா..?அப்பொ உனக்கும் அப்படி நடக்குமா..?”
மணி சொல்வது உண்மையா..?
அபூர்வ சக்தி இருக்கின்றதா..?
இப்படி ஒரு கதை எழுத அந்த அபூர்வ சக்திதான் காரணமா..?ஒருவேளை அப்படியொரு அபூர்வ சக்தி மணியிடம் இருப்பது..
அவன் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்காதா..?
அதன் விளைவைத் தெரிந்துக் கொள்ள காத்திருங்கள் நாளைவரை......

#-------------------------------------#-----------------------------------------------#



அடுத்தது நீ.....(7)

(மோட்டார் சத்தம்)
மணி மனதிற்குள் பேசக்கொண்டே மோட்டாரில் பயணிக்கத்தொடங்கினான்.
(மணி மனதில்,)
கேசவனின் கேள்வி அவன் மனதில் அலைமோதத் தொடங்கியது
(அடுத்தது நீ 6)
கேசவன் ,(ஆச்சர்யமாக)
“என்ன மணி சொல்ற உனக்கும் அந்த சக்தி இருக்கா..?அப்பொ உனக்கும் அப்படி நடக்குமா..?”
(கேசவனின் குரல் எதிரொலித்தது..மோட்டார் சத்தத்தோடு..)
மணி,“ஆமா எப்படி எனக்கு இப்படி ஒரு கதை சாத்தியம்..? நான் இந்த மாதிரி கதைகளை படிக்கிறதும் இல்லை இந்த மாதிரி திகில் படங்களையும் பார்க்கிறதும் இல்லை..?
..ஆம்.. அன்னிக்கு இப்படித்தான் கதை எழுதலாம்னு.. உட்கார்ந்தேன்..! என்னோடக் கை... ம்.....என்னோடக் கை சொந்தமாவே எழுத ஆரம்பிச்சது..! ”மீண்டும் கேசவனின் குரல்,
கேசவன் ,(ஆச்சர்யமாக)
“என்ன மணி சொல்ற உனக்கும் அந்த சக்தி இருக்கா..?அப்பொ உனக்கும் அப்படி நடக்குமா..?”
மணி,
“ஒரு வேலை உண்மையாவே எனக்கு அந்த அபூர்வ சக்தி வந்திருச்சா..? கூடவே ஆபத்து வருமா...? என் உயிருக்கு ஏதும்..?”
குழப்பத்தில் மோட்டாரில் பயணித்தவனின் கண்ணில் பட்டது அந்த கைபேசி,
பேருந்து நிலையம் காலியாக இருந்தது, மணி இரவு வேலை முடிந்து செல்வதால்... அந்த கைபேசியின் வெளிச்சம் அவனுக்கு தன்னை அறிமுகப்படுத்தியது..
அந்த கைபேசி இவன் கண்ணில் பட என்ன காரணம்..?ஒருவேளை அபூர்வ சக்தியின் விளையாட்டா..? கேசவன் சொன்னது பலிக்கப் போகின்றதா...?
அதன் சூட்சுமம் அறிந்துக்கொள்ள காத்திருங்கள் நாளைவரை.....

#-------------------------------------#-----------------------------------------------#


அடுத்தது நீ...(8)

(மோட்டார் சத்தம் ,மோட்டர் நிறுத்தும் சத்தம்)
அந்த பேருந்து நிலையத்தில் யாரும் இருக்கவில்லை.. தனியாய் இருந்த கைபேசியை மணி கையில் எடுக்கவும் அது அதிர்ந்து ஒலியெழுப்பவும் சரியாக இருந்தது....
(கைபேசியின் சத்தம்)
மணியின் கைபேசி உரையாடல்,
“ஹலோ .....ஹலோ....!”
கொஞ்சநேரம் கழித்து, மறுமுனையில், தயங்கி தயங்கி..ஒரு பெண்ணின் குரல்....
“ஹலோ யார் பேசரா....ஹலோ..?”
“நான் மணி பேசறேன்.. இது உங்க ‘போனா..’?”
“ஆமா அது என்னோட ‘போன்’தான்.. நான்தான் தவறவிட்டுட்டேன்..? நீங்க எங்க இருக்கிங்க நான் உடனே வரேன்...பிலீஸ்..கொடுத்துடுங்க... ”
“இது என்னங்க வம்பா போச்சி...? ஏதோ கீழேகிடந்த போனை எடுத்தா..இப்படிப்பெசறிங்க..?”
(அழுதவாறு) “மன்னிச்சுடுங்க..மன்னிச்சுடுங்க.. நான் எங்க வரட்டும் சொல்லுங்க வரேன்”
(கடுப்புடன்) “சரி சரி .... அங்காசாப்புரி வழியா வந்திங்கன்னா ஒரு ‘பஸ் ச்தோப்’ இருக்கும் பாருங்க அங்க வாங்க ..சீக்கிரமா வாங்க.. காத்திருக்கேன்..என்ன... ”
“நன்றிங்க ...நன்றிங்க... உடனே வரேன்..”
“ஆமா உங்க பேரு..?” “தேவி......! காத்திருங்க வந்திட்றேன்...!!”
“தேவியா..?!”
மணி அதிர்ச்சியடைந்தான்..
அந்த தேவி இவன் கதையில் வந்தவளோ..? அவளும் அபூர்வசக்தி கொண்டவள்தானே.. இவனை ஏன் காத்திருக்கச் சொல்கின்றாள்...
அந்த காத்திருத்தலில் நோக்கமும் ,அந்த அபூர்வ சக்தின் பாதிப்பையும் தெரிந்துக்கொள்ளக் காத்திருங்கள் நாளைவரை...
#-------------------------------------#-----------------------------------------------#



அடுத்தது நீ.....(9)

மணி காத்திருந்தான்...அவனது காத்திருப்பின் நீளம் அதிகரித்தது..சாலையில் வாகனங்கள் வேகமாக செல்ல ஆரம்பித்தன.
இவனும் மேலும் காத்திருக்காமல் மோட்டாரை நோக்கி நடக்க அந்த கைபேசி மீண்டும் ஒலித்தது.
(விபத்துக்குள்ளாகும் சத்தம்)
அவனின் பார்வை இருண்டது..ஏதோ பிகைமண்டபத்தில் தான் இருப்பதாக உணர்ந்தான்..இரு கண்ணையும் நன்றாக தேய்த்துக் கொண்டு பார்க்க ஆரம்பித்தான்..
தன் கண் எதிரில் தனது மோட்டார் ஒரு பெரியா கனரக வாகனத்தின் கீழ் ஒரு உருவத்தோடு ரத்தவெள்ளத்தில் கிடந்தது.
அது யார் என எட்டிப்பார்க்க எழுந்தவனின் தோளில் ஒரு மெண்மையானகை பட்டது..
அந்த மெண்மையானக் கைக்கு சொந்தமான பெண்ணின் குரல்
“பதட்டப்படாதே அது வேரயாரும் இல்லை..........??????”
அந்த கைக்குச் சொந்தாக்காரர் யார்.....? என்ன சொன்னார்..?விபத்துக்குள்ளாகி ரத்தவெள்ளத்தில் கிடப்பது யார்..?கைபேசியை வாங்க தேவி வந்தாளா..?





#................................#....................................................#
......இதுவரை படித்தவற்றின் முடிவு எப்படி இருக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்..?நீங்கள் எதிர்ப்பாராத முடிவைத் தரத்தான் என் ஆவல்...........அதில் எனக்கு வெற்றியா... என்பதை நீங்கள்தான் சொல்லனும்.....தொடர்ந்து முடிவைப் படியுங்கள்....................
#................................#.....................................................#



அடுத்தது நீ----முடிவு (10)

“பதட்டப்படாதே அது வேரயாரும் இல்லை.. நீதான்...!”
அதிர்ச்சியில் மணி,
“இல்லை..இல்லை.. நீ பொய் சொல்ற...யார் நீ..”
(சிரித்தவாறே) “நான் தான் தேவி நேத்து இங்க அடிப்பட்டு செத்து என்னோட போனைத் தொலைதச்சேன்..?
எங்க என் போன்..?கொடு நான் போகனும்...!!!!!
நீயும் வாயேன்...?இனி உனக்கு இங்க வேலை இல்லை.....?”



ஆக்கம் ,................தயாஜி வெள்ளைரோஜா..................
ஊக்கம் ..............படித்து கருத்துரைப்போர்....................
ஏக்கம்...............அடுத்த வாய்ப்பு.....................
தாக்கம்....................சுஜாதா.............................

செப்டம்பர் 06, 2009

தேவதையானவள் (நிரந்தரமானவள்..)



தோழியே,
என்னைக் 'கரு'வாக்கியவள்...
அன்னை;
என்னை 'உரு'வாகியவள்...
நீ..;


பாறையென இருந்தவனை;
வார்த்தை உளியால்,
பல சிற்பம் காட்டியவள்....
நீதான் தோழியே..!


உன்னின் இருந்துதான்;
காதலைவிட மேலான ,
நட்பை உணர்ந்தேன்......!

அன்று அடைக்கலமின்றி,
இருந்தவன் நான்...?
தங்களை "சமுதாயம்" என,
அடையாளம் காட்டி
வசைபாடினார்கள்...!


இன்று,
உன் மொழியால்தனி
அடையாளமே...!
உருவாக்கியுள்ளேன்......

இதற்கும்;
அதே பெயரில் ;
வசைபாடுகின்றனர்.....!

இவர்கள்;பார்வையில்...
இல்லையில்லை....

"இதுக்கள்"
பார்வையில் நீயும் நானும்

"காதலர்களாம்...?"

விட்டித்தொலைப்போம்...!
ஜந்துக்களுக்கு தெரியுமா...?
நட்பின் ஆழம்;


இதுக்கள் தாயைகூட ;
சந்தேகிக்கும்

கேவலங்கள்...

நீயாக நீ......
நானாகும் நீ..........
நீயாகும் நான்...........

நாமாகும் நட்பு........



..............தயாஜி வெள்ளைரோஜா.............

செப்டம்பர் 05, 2009

வேண்டுதல் .... வேண்டாமை....!!

'போகச்' சொல்லும்,
உதடு;
'வரச்' சொல்லும்;
கண்கள்

எதை நான்கேட்க...?

நான் 'இருக்கும்' போதும்,
'இறக்கும்' போதும்....
அருகில் நீ;
இருந்தால் போதும்....

உனது ஸ்பரிசங்கள்தான்
எனது தற்போதைய
சுவாசம்;

உறங்காததாலோ,
என்னமோ;
உளறலாய் உன் பெயர் இல்லை....!!

இருந்தும் முயற்சிக்கின்றேன்,
உறங்க அல்ல..

உன் பேர் சொல்லிஉளற...!

என் இதயக் கருவறையில்நீதான்
கடவுள்...!?

இங்கு என்னைத் தவிர..
யாரும் உட்பிரவேசிக்கக் கூடாது.....

நான் பூஜிக்கநீதான்

தகுதியானவள்;

உன்னை பூஜிக்க ;

தகுதியானவனாக.......

நான் மட்டுமே வேண்டும்....!!

வரம் கொடு.......!



...............தயாஜி வெள்ளைரோஜா................

விழிமொழியுடையாள் (எனக்கானவள்..!)




"உன்னை நான் காதலிக்கின்றேன்"

வெறும் மூன்று வார்த்தைகள்தான்;
வெளியில் இருந்துப் பார்க்கும்வரை.......

உன்னைப் பார்த்தவுடன் இந்த வார்த்தையின் விலாசம் தொலைந்துவிடுகின்றது.....!

கண்ணாடி முன்னாடிநின்றும்;
நண்பர்கள் பின்னாடிநின்றும்;

தினம்............
தினம்............

நான் பழகும் 'வக்கியம்';
இன்னும் உன்னை சேரவரவில்லை
அதற்கான 'பாக்கியம்'

சொல்லியேவிடுகின்றேன்..!

முடிவுடன் வந்தால்

வேர்க்கின்றது...வெடவெடக்கின்றது....
எனக்கல்லைஅந்த வார்த்தைக்கு....

உனக்கும் தெரியும்..!
ஆனால்;
என்னை சொல்லவிடுவதில்லை..
உன் விழிகள்

உன் ' விழியின் ' முன்
என் ' மொழியின் ' பலம் எடுபடவில்லை....

எப்படியும் சொல்லிடுவேன்....;

அதற்காகத்தான்,
பழகத் தொடங்கியுள்ளேன்..

வாய்மொழி பேச அல்ல..
உன் போல்

" விழிமொழி " பேச

காத்திரு......

...............தயாஜி வெள்ளைரோஜா...............

ஐந்தாவது மனிதன் (தேடிப்பாருங்கள்)


ஐவர்;
தியானம் மேற்கொள்கின்றர்

....................................................
.................................
......................
...........
...
..
.


எங்கும் அமைதி....
எல்லாம் ஆனந்தம்.....

.
..
.....
.................
............................
.....................................
............................................


கொஞ்ச நேரம் கழித்து...

முதல் மனிதன்;
கண்திறக்கின்றான்...!
இரண்டாம் மனிதனின்;
மூடியக்கண்ணைப் பார்த்ததும்

' இவனும் '
கண்மூடுகின்றான்..!

இரண்டாம் மனிதன்;
கண்திறக்கின்றான்....!
மூன்றாம் மனிதனின்;
மூடியக்கண்ணைப் பார்த்ததும்

' தானும் '
கண்மூடிகின்றான்...!

மூன்றாம் மனிதன்;
கண் திறக்கின்றான்...!
நான்காம் மனிதனின்;
மூடியக்கண்ணைப் பார்த்ததும்

' மீண்டும் '
கண்மூடுகின்றான்.....!

நான்காம் மனிதன்;
கண்திறக்கின்றான்...!
ஐந்தாம் மனிதனின்;
மூடியக்கண்ணைப் பார்த்ததும்

' தியானம் ' தொடர்கின்றான்

....................
...........................
...........................
.........
..............

இவர்கள்;
நால்வரும் இனி....!
இப்படித்தான் இருப்பார்கள்

அந்த;
'ஐந்தாம் மனிதன்'
தூங்கிவிட்டான்;
எனத் தெரியும்வரை........


..............தயாஜி வெள்ளைரோஜா..................

ஆறாவது விரல்....(இன்னும் முளைக்கும்)


இப்போதெல்லாம்
என்னைப் பின்தொடரும்;
நிழலை...
நான்....
அழிக்கவிரும்புகின்றேன்...!

பழைய முகங்கள்,
மீண்டும்;
இன்னொரு ஜனனம்....
எடுக்க வேண்டாம்......

இருக்கின்ற முகங்களே....
உருப்படியான ;
அடையாளம் தொலைத்தப் போது....?


,உத்தமானாய்
நான்;
இருந்திருந்தால்...!
வந்த பாதையைக் காட்டியிருப்பேன்.....!!

ம்......!

எனக்கு இனி...
போகும் இலக்கு மட்டும் தெரிந்தால் போதும்...


பழையத் தழும்புகளுக்கு
மீண்டும்வலி கொடுக்க...
தயாராகின்றது

"ஒரு கூட்டம்"

இவன்;முளைக்கமாட்டான்,
என்றோரே......!!
கேளுங்கள்....

நான் தழைத்தேக் காட்டுகின்றேன்.......

குட்டுபட்டவன் குணிந்தேதான்
இருக்கவேண்டுமா;
என்ன....?

'பூ' தோட்டம்
என
கை
நீட்டாதீர்....
இது
'தீ' தோட்டம்.....
எரித்திடுவோம்
கண்
அசைவால்.....!

இது ஆள்காட்டி விரல்;
அல்ல....

ஆறாவது விரல்...
இன்னும் முளைக்கும்......


.................தயாஜி வெள்ளைரோஜா.................

செப்டம்பர் 04, 2009

பெற்றால் மட்டும் போதாது.....




அந்த மீசைக்காரருக்கு அன்று,
அவ்வளவுக் கோவம்...
இருக்காதா..?

பெத்தப் பிள்ளை;
அப்பன் பேச்சைக் கேக்காட்டி....?

ஒரேக் குழப்பம்

"ஏன் கேக்கனும்...அவர் மட்டும் என்ன யோக்கியமா...?"

அவன்,
கேள்வியும் ஞாயம்தானே...!

அப்பன் வழியில் சுப்பன்....
தும்பை விட்டு,
வாலைப் பிடிக்கு;
இப்படி பலர் ,உண்டு.......
வளரும்போதுகண்டுக்கொள்ளாமல்...!
படிக்கும்போது பாசம் காட்டாமல்....!

பிள்ளைப் பெற்றும் ;
கல்யாணக்காளையாகத்திரியும்
'இந்த அப்பாக்கள்.....!?
பிள்ளைகளுக்கு,
அறிவுரைச் சொல்ல ,
அருகதையற்றவர்கள்....?


தன் கோவத்தைமனைவியை அடித்தும்...
வீட்டுப் பொருட்களை ஒடித்தும்.....
சேதப்படுத்தும் இவர்கள்;
என்று ;
புரிவார்கள்....?

தான் மாறினால்தன் சுற்றமும் மாறுமென்று....!

பெற்றால் மட்டும் போதாது...???

அவனில் செயல்களுக்குப்பொருட்பேர்க்கும் ப்க்குவமும் பொறுப்புணர்ச்சியும்வரவில்லையெனில்.......?

இவர்கள் தீருந்தும்காலமும்
அருகிள் இல்லை.........??

............தயாஜி வெள்ளைரோஜா.................

மழைச் சாரளும் மனிதக் கீறளும்....?




மழை வேகமாகவும்...
கொஞ்சம் மெதுவாகவும்...?!?!?
பெய்துக் கொண்டிருந்தது;

நான் மட்டும்,
தனியாய்
இருப்பதால்இந்த ஆசை!!!


....ஆசை மட்டும்தான்அதை யாரும்,
பேராசையாக்க முயற்சிக்காதவரை.........
அது ஆசை மட்டும்தான்...

தனியாய் இருப்பதால்;
சூடானத் தேநீருக்கு,
உத்தரவு போட இயலவில்லை....!
போட்டால் மட்டும்உடனே வந்துவிடும் ,
என்ற எந்த...

உத்தரவாதமும் இல்லை....

அட...
மழை இப்போதுவேலை நிறுத்தம் ,
செய்யத் தொடங்குகின்றது....!!
இதைவிட,
சந்தர்ப்பம் வேறு வாய்க்காது,

ம்ம்ம்...,,.,...ம்ம்..ம்.ம்.ம்.ம்.
மழையில் நனைந்தால் சந்தோஷம்தான்...!

கூடவே அந்த பாழாய்ப்போன,
ஜலதோஷ்மும் வந்துவிடும்;

அப்புறம் தொல்லை எனக்குத்தான்.....??
இருந்தாலும்,
இன்று வேறு வழியில்லை..

அப்புறம் என்ன..?
நேற்றைக்கு வந்தவன்;
புது "வாடிக்கையாளன்"....??
எதுவுமேத் தெரியலை...

அங்கங்கே கடிச்சிவைச்சிட்டான்...!!
நகக்கீறல் வேறு...?
வயது பதினாறுதானே..!!!
அவனும் என்ன செய்வான்..

தினம் தினம் ;
இந்த ஆண்கள் கொடுக்கும்..!
அடையாளங்களுக்கும்... காயங்களுக்கும்.....

இது போன்ற;
லேசான,
மழைத்தூறல்கள்தான் என்
போன்றோருக்கு'மருந்து'

ஆண்களுக்கு விருந்தாகும் எங்களுக்கு
ஆண்டவன் தரும் மருந்து....

நனைய வேண்டி ;
கதவைத் திறக்கின்றேன்.....

இரண்டு வாடிக்கையாளர்கள்..!
இன்றும் எனக்கு;

மருந்து இல்லை....



................தயாஜி வெள்ளைரோஜா.............

காத்திருங்கள்.....



.......ஸ்.....
சத்தம் போடாமல் அழுங்க....
அவன் தூங்கறான்....
பாருங்களேன் சிரித்த முகமாய்..

அவனின் தூக்கம்.....
என்ன,
குறட்டைதான்காணோம்...?!


.ம்........ம்.......ம்........ம்..
நீ இருந்து,
எனக்கு செய்யனும்..
நான் உனக்கு
செய்யும்படி செய்துட்டியே..?!?!?!!!?

ராத்திரிக்கு வரும்போது
....
இரகசியமாய்.......
ஒளிஞ்சிருப்பே.....
இனி எந்த கதவுக்குப் பின்னால்;
நான் வந்துப் பார்க்க....?

உனக்கு எப்படிதீ வைப்பேன்....?
உன் தூக்கம் கலைந்திடாதா....?

நேத்துக்கூட எனக்கு;
வேலை;
அப்போ......;


"அப்பா இன்னிக்கும் வேலையாநாளைக்காவது என்கூட இருப்பியா...?"


பெத்த மகன் கேட்டகடைசி வார்த்தை

ஏம்பா உன் ,
அம்மா தனியா...
இருக்காள்னு...;
துணையாய் போயிட்டயா..?


ஆமா....
அவளுக்கு தனிமைனா பயம்....??!!
சரி; நான்
வரவரைக்கும் அம்மாவை
பத்திரமாய் ;

...பார்த்துக்கோ..........!!!??



..................தயாஜி வெள்ளைரோஜா..............

திகைப்பு

என்றும் இல்லாமல்,
அன்று மழைபெய்தது.....

வழிநெடுகிலும்
சமிக்ஞை விளக்கு
வழிவிட்டது......

வீட்டிற்கு வந்ததும்
சாப்பாடு,

தயாராய் இருந்தது.....

அப்பா என்னை
அதிகக் கேள்விகள்
கேட்கவில்லை.......

அண்ணி கூட,
சிரித்தார்..

உறவினர்கள் சிலர் வந்தார்கள்....
அழைப்பிதல் கொடுத்து,
என்னையும்

"வா'
என அழைத்தனர்....!

மேலதிகாரி...
என் கருத்துக்கு
செவிசாய்த்தார்...!

எல்லாம் வழக்கத்துக்கு...
மாறாக நடக்க....

...........இன்றளவும்.........

ஒன்று மட்டும் நேராய்
நடந்தது....?

அவள் கடக்கின்றாள்
நான் திகைக்கின்றேன்....




........................தயாஜி வெள்ளைரோஜா...................

ஆகஸ்ட் 31, 2009

பிறந்தகத்தில் தீபாவளி (2008)

வேலை நிமித்தமாக..
கோலாலும்பூர் வந்திருந்தாலும்,
தீபாவளியன்று......
என் பிறந்தகத்தைப் பார்க்கவேண்டிய
பயணத்திற்கு 'டிக்கெட்' வாங்கியிருந்தேன்...

"ஆறுமுகம் பிள்ளைத் தோட்டம்"
என்றும்,
"யு.பி தோட்டம்"
என்றும்,
இருத்ரப்பினர புரிந்து வைத்திருந்தாலும்......
என் மனதில் தங்கியிருக்கும் பெயர்
"யு.பி தோட்டம்"

அங்குதான் என் தாயின் கர்ப்பப்பையில்,
எனக்கென்ற இடத்தை
ஓடிப் பிடித்திருந்தேன்....!

மாதம் இரண்டாம் ஞாயிறு,
எல்லோர் வீட்டிலும் நிச்சயம்....
கோழிக்கறி.....

அதற்கெனவே.....
இரு வியாபாரிகள்
கொஞ்சம் 'சீக்கு' பிடித்தக்
கோழிகளை விறக வருவர்...

மாதத்தின் கடைசி வாரங்களில்,
கூட்டு, பருப்பு, ரசம், தன்ணீர்
என வரிசையாக காத்திருக்கும்
எங்கள்ம் வயிற்றுப்பசியைப் போக்க........

நான் படித்த பள்ளிக்கு பெயர்,
'லாடாங் பெர்படானான் தமிழ்ப் பள்ளி'

இன்று பலரின் முயற்சியால்
சிறப்பாக வளர்ச்சிப் பெற்றுள்ளது.....

குடிகாரத் தகப்பன்களாலும்...
ஓடிப்போன சில மனைவியர்களாலும்..
என் நண்பர்கள்,

வளர்ச்சி எனற
கோட்டையை அடையும் முன்னரே....!

முதிர்ச்சி எனும் பாதாளத்தில்
விழுந்திருந்தனர்....!

இந்த தீபாவளிக்கு,
நான் வருவது அவர்களுக்குத்
தெரியாது...

அப்படித் தெரிந்திருந்தால்....?
அந்த ஒரு நாள்
எனக்காக்.....

பணக்காரர்களாக வாழ்ந்து,
அடுத்த் தீபாவளிவரை
வட்டிக் கட்டிக்கொண்டிருப்பர்...........

பக்கத்தில் இருக்கும்
பால்மரக்காட்டில்...........

'பேய்கதை' எழுதச் சென்றோம்...
நானும் அப்போதைய என் 'வாசக' நண்பனும்,

அங்கு அட்டைக் கடித்ததையும்
நாய்கள் துரத்தியதையும்
எப்படி எழுத முடியும்....?
என அந்த பேய்க்கதைக்கு
முற்றுப்புள்ளி வைத்தோம்

விடுமுறைக் காலங்களில்
பெற்றோருக்குத் தெரியாது
குட்டையில் குளித்து......
சிகரெட்டில் வகை வகையாய்
புகைவண்டி விட்டு.......!!??

கையில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு,
சமைத்த பொழுது
எங்களுள் இருந்த எதிர்ப்பார்ப்பு
ஒன்றுதான்.............!
இந்த குட்டையில்
"தண்ணீர் எப்பதான் சுத்தமா வரும்....?"

சில வயதுவரை.........
நான் காலணியோ-சிலிப்பரோபோட்டு
ரோடில் நடந்ததில்லை...?

அதனாலெயே எனக்கும் ..

ஆணிகளுக்கும் எனக்கும்,
ஒரு தொடர்பு உண்டு.......
இந்த தீபாவளிக்கு அப்படி செய்யவோ....?

சீ............சீ.........

இப்போ நான் பெரியப் பையன்....!
முன்பின் அறிமுகம் தெரியாதோர்
இல்லம் நாடினால்கூட.......

தீபாவளி உபசரிப்பும்
தீபாவளி பணமும் உறுதி...........

ஒரு தீபாவளியில் மழை வந்தும்....
பட்டாசு வெடித்தேன்

என் தாயும் வெடித்தாள்......
அறையில் பட்டாசு வெடிக்காக் கூடாதென்று.........

பூண்டு பட்டாசுக்கு மட்டும்,
பஞ்சம் இல்லை
அப்பாவுக்குப் பிள்ளிகளின் பாதுகாப்பு முக்கியம்.......

எனக்குத் தெரிந்த சில 'அப்பாக்களே'
இங்கு பாதுகாப்பாக இருக்கவில்லை.....!!

அப்போ நான் பார்த்த பெரிசுகள் இப்போது இருக்காது.....
அதுமட்டுமா...?

சில சிறுசுகளையும் என்னால்
பார்க்க முடியாதுபோலும்.....
அங்குதான் பல
திருவிழாக்கள் நடந்தனவே......!!!


பலிகொடுக்கும் விழாக்கள்மாறி......!
இன்று பலியாக்கும் விழாக்களாகியுள்ளதே........?!
தீபவளி என்றாலும்
என் சிந்தனையில்

என் தோட்டம்தான்.........!?
இப்போதுதான் தோன்றுகின்றது...
என் தோட்டம்

'துண்டாட்டப்பட்டுவிட்டது'

அங்கு இன்று வெறும் மண்ணோடு....
பாதி கட்டிய நிலைகளில்...!
கடைகளும்,
சில நல்லவர்களின் இல்லங்களும்.....

இருந்தும் நான் செல்வேன்
என் பிறந்த மண்ணில்தான்
என் தீபாவளி.............

என் கால்கள் ஏக்கம் கொள்கின்றது

எனது 'யு.பி தோட்ட மண்ணை மி(ம)திக்க.....

எனது பிறந்தகமான
'யு.பி' தோட்டத்திற்கு


இனிய தீபவளி வாழ்த்துகள் தாயே.....!




.............தயாஜி வெள்ளைரோஜா.............

ஆகஸ்ட் 30, 2009

பின்னழகு...!(முடிக்கும் வரை பொறுங்கள்....!)

முன்னே பிறந்ததனால்....
பல மூட்டை..
என் பின்னே....!

"தம்பிக்கும் தங்கைக்கும்
நீதான் உதாரணம்"


அம்மாவுக்குத் தெரிந்தது.....
இதுதான்
இது மட்டும்தான்...

என் தவறை ...
அவர்களும் தொடர்வானேன்..?
புத்திக்குத் தெரியுமே,

சரி எது..?
பிழை எது..?

முன்னவன் குழியில் விழ..
பின்னவனும் குழியில் விழுவானேன்....?

பாதையை மார்றினால்..
பயணங்கள் தொடருமே.....!!

என் தப்பை ..
அவன் செய்வானேன்...?
என் மீதுகுறை சொல்வானேன்...?

கடைக்கும் நானே..

கடனுக்கும் நானே..

ஏச்சுக்கும் நானே..
என் பின்னரின்..
வீழ்ச்சிக்கும் நானா....?

அவரவர் பாதை..
அதிலொரு பயணம்

உதாரணம் போதும்..
உடன் வருவதை..

தவிருங்கள்.....


................தயாஜி வெள்ளைரோஜா..............

காலனின் சேவகன்.... (யாரிவன்...?)


சாலைக் குழிகளைகடந்து,
சாதுவாகத்தான் போனேன்....

'முந்திப்' போன,
பல வாகனங்களைப்
'பிந்திப்' போனேன்..!

அரைகுறை,
அறிவிப்புப் பலகை......
சற்றே என்னைக் குழப்பியது..!


"சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"

அட யாரதுஇவ்வளவு வேகம்....?

...........ஓ.....................

மகளுக்கு பள்ளிக்கு,மணியாச்சோ...?
அதான் அவசரமாய்...!

நூறில் போகும் என்னை,
முந்திக்கொண்டு....
சரி....சரி....
போகட்டும்....
நாம் ஒதுங்குவோம்..

அதோ அவங்க ரொம்பதூரம் போயிட்டாங்க.....

அடுத்த சில
வினாடிகளில்ஒரே பதட்டம்...!, பரபரப்பு...!,குழப்பம்...!,

"@$#%$%$^%&*^*&^(*"
என்ற குழப்பத்தில் கூட்டம் கூடின....!!!??

சாலையில் விபத்து

ஆம்...

என்னை முந்திப்போன ,வாகனம்....ஏன் அவசரம்....?


................தயாஜி வெள்ளைரோஜா.................

ஆகஸ்ட் 28, 2009

வினாடியின் வேதனை...

ஒவ்வொரு வினாடிக்கும்,
நடப்பதை அளக்கும்......
பொறுப்பு எனக்கு ,

நடைப்பாதை முள்ளை
மிதித்தேயாக வேண்டும்...
இல்லையேல் கால்கள்
காணாமல் போகும் அபாயம்....
கண்ணருகிள் காணப்படும்...!!!

கண்ணிமைக்கும் நேரமும்..
கணநேரக் காமமும்....
கடக்க முயற்சித்து,
கையிடைந்தவன் நான்...?

இது பெறுமையல்ல..
இருந்தும்..
இது பெறுமைதான்...
காலத்தின் கணக்கிள்
கண்வைத்தால் தெரியும்.....

விமர்சணங்களும் எதிர்ப்பார்ப்புகளும்
காயத்தை ஆழமாக்குகின்றது....!!!!

ஆறியக் காயங்காளும் நோகும் தழும்பிகளும்.....!?
சொல்லிச் செல்வது என்ன.....?
சொல்லி வந்தது என்ன.....?
சொல்ல மறந்ததும் என்ன...?

விளக்கம் தெவையில்லை
அதன் அவசியம்
எனக்கு .......
அநாவசியம்.....!!!!!

வெள்ளைக் காகிதம் இருக்க..
கருப்பு மையும் நனைக்க.......

தன்னை அறிந்து..
என்னை மறந்து.......

ஆரம்பித்துவிட்டேன்.....




..........தயாஜி வெள்ளைரோஜா..................

ஆகஸ்ட் 05, 2009

உருண்டை பூமியில் விட்டது.....



யார் சொன்னது
பூமி உருண்டைனு.......?
அப்படின்னா,
என்னை விட்டுப்போனது
என்னோட சேர்ந்திருக்கனுமே.....!

ஆமா,
என்னோட படிப்பு
..ம்..... பதின்ம வயது படிப்பு..
என் ‘கூடா’ நட்பால்,
என்னை ‘நாடா’ போனது கல்வி...!

பணம் கட்டியே,
இன்னைக்கு ‘போட்டாவில்’
தொங்கும்......
‘பொறுப்பான’ அப்பா...
நான்தான் காரணம்னு..
என்மேல்,
‘வெறுப்பான’ அம்மா.....!

என் கீழ்
நாலு பேரு,
நான் மட்டும் சந்தோஷமாய்....
நணபர்களுடன்....
‘புகை’யும் ‘குடி’யும்,
அதால் என் உறவுக்கு
‘பகை’ என்மெல்....!

நான் தெளிய நாள்
‘பலவாச்சி’......!
இன்னைக்கு எல்லாம்,
என்னை விட்டுப் ‘போயாச்சி’....?


வந்ததைப் பார்த்தா......
‘ஏக்கம்’
வருவதைப் பார்த்தால்
‘துக்கம்’

அடிக்கடி கடிக்கும்
‘செருப்பு’........
அழுக்கான கிழிஞ்ச
‘சட்டை’.......
கறைப்பட்டு தோய்க்காத்
‘சிலுவார்’.......
வெட்டாதா சீவாத
‘தலைமுடி’.......

என்னை யாருக்கும் ,
இனி அடையாளம்.......!
‘தெரியாது’...
அடையாளம் காட்டவும்
‘முடியாது’.......

‘போட்டோ’வில் அப்பா...
‘போ’ சொன்ன அம்மா.....
ஏற்காத ‘உறவு’.....
ஏறாதா ‘அறிவு’.......

இன்னும்.....
இன்னும்......
எவ்வளவோ.....!

பூமி உருண்டைனு
சொன்ன அறிஞர்களே......

இந்த உருண்டை பூமியில் ,
நான் விட்டது....
இல்லையில்லை..!?
தொலைத்தது..
திரும்ப வருமா..?

..........தயாஜி வெள்ளைரோஜா..............

ஆகஸ்ட் 02, 2009

பருவப் பரிட்சை......

தினமும் நாங்கள்
சந்திக்கின்றோம்...
பள்ளியில் அருகருகிள்
அமர்கின்றோம்......

வீட்டுப் பாடங்களை அவளே,
எழுதிக் கொடுப்பாள்,
நான் பார்வையாளன் மட்டும்தான்.....

என் மேஜையில்
அவள் தந்த பரிசுகளே
அதிகம் ஆக்கிரமிக்கின்றன.....!!!

பேனாவும் அவள்...,
தந்தால்தான் அழகாய்
எழுதுகின்றது...?


அவள் வீட்டுக்கண்ணாடியில்தான்
நான் அழகாய் தெரிவேன்..!

எங்கள் உறவுகள்
புனிதமாகக் கருதப்பட்டுவந்தது....

பருவச் சண்டையில்
அவளின் தேகம்.......
‘.....வீங்கின.....!!!’

ஆடைகள் மாறின,
அவள் மேல் வீட்டில்
அக்கரைக் கூடின.......

அவளை சுற்றி
ஏதோ வாசம்
இன்னதென்று கூறமுடியாது............
ஏதோ புதுமை வாசம்.....!!



அவள் நடையில்
என்னுள் அதிர்ந்தன..
ஏதேதோ.....!?!?!?

இப்பொழுதெல்லாம்..
நாங்கள் சந்திப்பதில்லை.
அவள் வீட்டார் இதை
விரும்புவதில்லை.....?

என் வீட்டிலும் என்னை
விடுவதில்லை...?

அவளைப் பார்க்காத
நாட்கள்தான்
நான்..........

இன்னும் அவளருகில்
நெருக்கமானேன்..!!?

இப்போது எங்கள் உறவு..
பாவமா..?
புனிதமா..?
விளங்கவில்லை......


..........................தயாஜி வெள்ளைரோஜா.............................

முதலிரவு (கற்பனை கடந்து........)

“ஏங்க நம்மை நம்ம வீட்டில உள்ளவங்க ஏத்துக்குவாங்களா..?”

“இந்த நேரத்தில் போய்... இந்த கதை தேவையா..? நேரத்தை ஏன்தான் இப்படி வீணடிக்கிறயோ..... !”

“என்னங்க இப்படி பெசறீங்க..!?”

“அதுக்கில்லை, நாம என்ன ஊர்ல உலகுத்துல செய்யாததையா செஞ்சிட்டோம்.எல்லார் போலவும் காதலிச்சோம். வீட்டில் நம்ம காதலை ஏத்துக்கலை அதான் ,ஓடி வந்திட்டோம் நம்ம காதலை வீட்டில் ஏத்துக்கிட்டிருந்தா நாம ஏன் வீட்டைவிட்டு ஓடி வந்திருக்கப்போறோம் ”

“என்னதான் உங்களை நம்பி வந்திட்டாலும், என் ஞாபகம் எல்லாமே என் வீட்டில் உள்ளவங்க மேலதான் இருக்கு.....!”

“நீ சொல்றதும் சரிதான். யாருக்குதான் வீட்டு ஞாபகம் இல்லாமப் போகும்..?.. அதும் நீதான் வீட்டுக்கு மூத்தப் பொண்ணு ..... நீதான் தம்பி தங்கச்சிக்கு ஒரு உதாரணமா இருந்திருக்கனும்....? ஆனா நீயே .....இப்படி.... ”

“இப்ப மட்டும் என்ன புத்தர் மாதிரி பேசறிங்க..!? அன்னிக்கு இந்த அறிவு எங்கே போச்சாம்.....? என்னை ஓடிவர சொன்னதே நிங்கதானே..! ”

“சரி....சரி...இப்போ நீ என்னை என்னதான் செய்யசொல்ற.....?”

“நம்ம குடும்பத்தில உள்ளவங்க ,நம்மை சேர்த்துக்கனும் முடியுமா..? ”

“..ம்.. எல்லாம் குழந்தைப் பொறந்தா சரியாகிடும்”

“ஆமா இப்படி சொல்லியே ஆறு பிள்ளையாயிடுச்சி.. இப்போ.. இன்னும் ஒன்னா....???!!!”




........தயாஜி வெள்ளைரோஜா.......

ஆகஸ்ட் 01, 2009

திருவிழா.....!

பல வருசமாச்சி,
என் தோட்டத் திருவிழாவைப்பார்த்து
எப்படி மாறியிருக்கும்..?
யார் பூசாரி..?
எந்த வழியா தேர் போகும்..?
என்னக் கடைகள்..?
ம்.....!
அதான் வந்தாச்சே,
இனிமே நாமே பார்த்துக்கவேண்டிதான்..
அட..அட.. அம்மன்,
பவனி வரும் அழகே தனிதான்..
புடவைக்கூட்டமும்,
வேட்டிக்கூட்டமும்,
கலந்தே நடந்துக்கொண்டிருந்தன...
உறுமியுடன் பஜனையும்,
பலரை முறைக்கவைத்தது..
சிலரைச் சிரிக்கவைத்தது..
நானும் இருதலைக்கொள்ளி எறும்பானேன்..!!!!
அம்மன் ஆலயத்தை
நெருங்கி கொண்டிருந்த சமயம்..
ஏதோ சலசலப்பு..?!?!!?!?!?!?!
பெண்களின் அலறல்..?!?!?!!?!?!
சிறுவர்களின் ஓட்டம்.??!?!?!??!?!



“டேய் அவந்தாண்டா”
“ஐயோ..!”
“கடவுளே..”
“உடாதிங்கடா..”
“அவன் அங்க ஓடறாண்டா..?!?!”



கையில் ஆயுதங்களுடன்,
காவல் தெய்வத்திற்குப் போட்டியாக,
சில இளைஞர்களின் செயல்???!!!?!?!!?
கோவில் படிக்கட்டில் ‘இரத்தம்’
திருவிழா நிறுத்தப்பட்டது..
என் மனதில் ‘கறை’


................தயாஜி வெள்ளைரோஜா...................

நானும் அவனில்லைதான்......!


இதை படிக்கும் முன்பு, எனது சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். இது அவசியமா....? என்று நீங்கள் கேட்பதில் ஞாயம் இருந்தாலும் என் பக்கத்திலும் ஞாயம் இருக்கவே செய்கின்றது.

சரி இப்பொழுது நீங்கள் தயாரா இருப்பீர்கள் என நம்பிக்கையோடு என் கேள்விகளை தொடங்குகின்றேன்.

என்ன தயார்தானே...?

கேள்விகளுக்கு எண்கள் கொடுக்கப்போவதில்லை, உங்கள் எண்ணப்படி நீங்களே வாசிக்களாம். மகிழ்ச்சிதானே..!

உங்கள் அலுவலகத்தில் என்றும் இல்லாதா ஒரு நாள் உங்கள் மேலதிகாரியோ அல்லது சக பணியாளர்களோ முதல் நாள் நீங்கள் விரும்பிப்படித்த, ஏதாவது ஒன்றைப்பற்றி கெட்க அதற்கு நீங்கள் பதில் சொல்லி பாராட்டு வாங்குவீர்கள்.


ஆமாம் / இல்லை


மின்தூக்கியில் நீங்கள் எட்டாவது மாடிக்கு செல்ல கீழ்மாடியில் இருந்து செல்லவேண்டும்தானே....? அப்படி நீங்கள் செல்லத் தயாராய்

இருக்கும்போது விசையை அழுத்த முயலும் அந்த ஒரு வினாடி வித்தியாசத்தில் மின்தூக்கி சட்டென்று மேலே செல்ல ஆரம்பிக்கும்.

நீங்களும் மேலிருந்து யாரோ வருவதற்காக விசையை அழுத்தியிருப்பதாக உங்களை சமாதானம் செய்யும்போது, அந்த மின் தூக்கி வேறு எங்கும் நிற்காமல் நேராக நீங்கள் இருக்கும் முதல் மாடிக்கு வரும்......

யாரோ விசையை அழுத்தி விளையாடியிருப்பார்கள் என இப்போதும் உங்களை மீண்டும் சமாதானம் செய்வீர்கள்.

பின்னர் மின் தூக்கியில் நீங்கள் ஏறியதும் எட்டாம் மாடிக்கு செல்ல விசையை அழுத்துவீர்கள். ஆனால் அந்த மின் தூக்கி எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒன்றாம் மாடி இரண்டாம் மாடி மூன்றாம் மாடி என ஒவ்வொரு மாடியாக ‘நின்று கதவை திறந்து மூடிச் செல்லும்’
இதற்கு என்ன நினைத்து தன்னை சமாதானம் செய்வதென்று தெரியாமல் முழிப்பீர்கள்.



ஆமாம் / இல்லை



காரில் தனியாக செல்வீர்கள், துனையாக யாரும் இல்லையென குறைபடாமல் ஏதாவது குறுந்தட்டோடு நீங்களும் பாடிக்கொண்டிருப்பீர்கள் அல்லது எதாவது வானொலிய கேட்டு ஒன்று பாராட்டுவீர்கள் இல்லை திட்டித் தீர்ப்பீர்கள்
(அறிவிப்பாளர்க்கே வெளிச்சம்...! )

காரில் உங்கள் தனிமை உறுதி செய்தபின், இயற்கையாகவே உங்களுக்கு பயம் தோன்றும்.
அதும் தூரத்தில் தெரிந்த மரங்களேல்லாம்.... உங்களை துரத்துவதாகவும் உங்களைப் பார்த்து சிரித்து கையசைப்பதாகவும் நினைப்பீர்கள்.
அந்த நேரத்தைச் சரியாக பயன்படுத்தி யாரும் ஒருவர் உங்கள் காருக்கு சுமார் கொஞ்சதூரத்தில் தனியாக நின்று கையசைத்து உதவிக் கேட்பார்.
நீங்களும் (உங்களில் சிலர்) “ஏதோ அவசரம் போல” என்று நினத்து காரை நிறுத்துவீர்கள் . அந்த நேரத்தில்தான் உங்கள் கைபேசி அலறும்.
கைபேசியில் பேசிக்கொண்டே நிறுத்திய காரில் இருந்து, கையசைத்தவரைப் பார்ப்பீர்கள் . ஆனால் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள்..! கைபேசியும் சட்டென்று உயிர் இழந்திருக்கும்..!



ஆமாம் / இல்லை



முக்கியமாக செல்ல வேண்டிய நிகழ்ச்சிக்கு, செல்லும் முன்பு உங்கள் கைபேசியை தேடுவீர்கள்... கிடைக்காது ..!
மனைவியிடம் கோவப்படுவீர்கள்....
பிள்ளைகளையும் திட்டுவீர்கள்.....
தலையை பிய்க்கும் நிலைக்கு நீங்கள் போனதும், உங்கள் கால்சட்டையில் இருந்து உங்கள் கைபேசி சிரிக்கும்..




ஆமாம் / இல்லை




உங்கள் பதில் ஆமாம் என இருந்தாலும் இல்லை என இருந்தாலும்......
இனி அப்படியெதும் நடந்தால் பயம் வேண்டாம். பதட்டம் வேண்டாம். கோவம் வேண்டாம்.
உண்மையை சொல்லிவிடுகின்றேன். என் சகதோழர்கள்தான் அப்படி செய்வது.
என்னைப் போன்று அவர்களுக்கு கதை சொல்லத் தெரியாததால் இதுதான் பொழுது போக்கு.

மன்னித்துவிடுங்களேன்.

.............. தயாஜி வெள்ளைரோஜா............

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்